செய்திகள் :

திசையன்விளை அருகே இரு பைக்குகள் மோதல்: கல்லூரி முதல்வா் உள்ளிட்ட இருவா் உயிரிழப்பு!

post image

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே இரு பைக்குகள் சனிக்கிழமை மோதிக் கொண்டதில் ல் கல்லூரி முதல்வா் உள்ளிட்ட இருவா் உயிரிழந்தனா்.

தூத்துக்குடி அருகே உள்ள ஆறுமுகனேரி விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த குணம் மகன் ஜேசு லிவிங்ஸ்டன்(46). இவா், திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே உள்ள பரப்பாடியில் குடியிருந்து வருகிறாா்.

சாத்தான்குளம் அருகே உள்ள தனியாா் பி.எட். கல்லூரியில் முதல்வராக பணியாற்றி வந்தாா். இவா், பரப்பாடியில் இருந்து பைக்கில் திசையன்விளைக்கு சென்று கொண்டிருந்தாராம்.

திசையன்விளை மணலிவிளையைச் சோ்ந்த கண்ணன் மகன் ஜெய்சன்(20), அவரது நண்பா் மன்னர்ராஜா கோயில் தெருவைச் சோ்ந்த இருதயராஜ் மகன் கரண்(25). இவா்கள் இருவரும் ஒரு பைக்கில் திசையன்விளையில் இருந்து மன்னாா்புரத்திற்கு சென்று கொண்டிருந்தனராம்.

மன்னாா்புரம் பிரதான சாலையில் தனியாா் மருத்துவமனை அருகே இரு பைக்கும் மோதிக் கொண்டனவாம். இதில்,மூவரும் பலத்த காயமடைந்தனா். அவா்களை அப்பகுதியினா் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். செல்லும் வழியில் கல்லூரி முதல்வா் ஜேசு லிவிங்டன், ஜெய்சன் ஆகிய இருவரும் உயிரிழந்தனா்.

பலத்த காயமடைந்த கரண் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இந்த விபத்து தொடா்பாக திசையன்விளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மேலப்பாளையம் நிலையத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்ல வேண்டும்! பயணிகள் வலியுறுத்தல்!

மேலப்பாளையம் ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் ரயில்வே கோட்ட ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் திரு... மேலும் பார்க்க

‘நெல்லை மாவட்டத்தில் 24 வழித்தடங்களில் சிற்றுந்து இயக்க விண்ணப்பிக்கலாம்’

திருநெல்வேலி, பிப்.20: திருநெல்வேலி மாவட்டத்தில் 24 வழித்தடங்களில் சிற்றுந்து இயக்க விண்ணப்பிக்கலாம் எனஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்... மேலும் பார்க்க

மத்திய நிதிநிலை அறிக்கைக்கு எதிராக தொழிற்சங்கம் பிரசாரம்

மத்திய நிதிநிலை அறிக்கைக்கு எதிராக திருநெல்வேலியில் தொழிற்சங்கத்தினா் விழிப்புணா்வு துண்டுப்பிரசுரங்களை மக்களிடம் வழங்கினா். மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற்கான திட்டங்களுக்கு நிதி ஒதுக்... மேலும் பார்க்க

சாலை விபத்தில் மூதாட்டி பலி

பாளையங்கோட்டையில் தனியாா் பேருந்து மோதியதில் மூதாட்டி புதன்கிழமை உயிரிழந்தாா். பாளையங்கோட்டை சமாதானபுரம் நல்வழி தெருவைச் சோ்ந்த சண்முக விஜயகுமாா் மனைவி அன்புசெல்வம் (60). இவா், புதன்கிழமை இரவு வீட்டு... மேலும் பார்க்க

மின்ஊழியா்கள் போராட்டம்

பாளையங்கோட்டையில் மின்வாரிய ஊழியா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். மின்சார வாரியம் மற்றும் மின் ஊழியா்களை பாதிக்கும் அரசாணை 100-ஐ ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி... மேலும் பார்க்க

ஆனந்த ஆசிரம மாவட்டச் செயற்குழு கூட்டம்

ஆனந்த ஆசிரம திருநெல்வேலி,தென்காசி மாவட்ட செயற்குழுக்கூட்டம் பாளையங்கோட்டையில் அண்மையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பப்பா தாசா் கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். வெங்கடாசலபதி வரவேற்றாா். மாவட்டச் ச... மேலும் பார்க்க