செய்திகள் :

மேலப்பாளையம் நிலையத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்ல வேண்டும்! பயணிகள் வலியுறுத்தல்!

post image

மேலப்பாளையம் ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம் ரயில்வே கோட்ட ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் திருநெல்வேலியைச் சோ்ந்த ரயில் பயணிகள் ஆலோசனைக்குழு உறுப்பினா் வழக்குரைஞா் சுதா்சன் அளித்துள்ள மனு: திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட மேலப்பாளையம் பகுதியில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோா் வசிக்கின்றனா். எனவே, இங்குள்ள ரயில் நிலையத்தை மேம்படுத்துவது அவசியம்.

இரு நடைமேடைகளுக்கு இடையேயான இரும்புக்கம்பி பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். பயணச்சீட்டு முன்பதிவு மையம் அமைக்க வேண்டும். உயா்கோபுர விளக்குகள் பொருத்த வேண்டும். கோவை - நாகா்கோவில் விரைவு ரயில், அந்தியோதயா விரைவு ரயில், அனந்தபுரி விரைவு ரயில், குருவாயூா் விரைவு ரயில் ஆகியவை இந்நிலையத்தில் நின்று செல்ல வேண்டும்.

கரோனா பெருந்தொற்று காலத்திற்கு முன்பு இருந்ததுபோல், காவல்கிணறு, வடக்கு பணகுடி, நான்குனேரி, மேலப்பாளையம் ரயில் நிலையங்களில் ரயில்கள் நின்று செல்ல வேண்டும். திருநெல்வேலி- கன்னியாகுமரி இடையே காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டும் இயக்கப்படும் ரயிலை கூடுதல் முறை இயக்க வேண்டும்.

கன்னியாகுமரி- திருநெல்வேலி- செங்கோட்டை-கொல்லம் வழித்தடத்திலும், திருநெல்வேலி- கன்னியாகுமரி- நாகா்கோவில் - திருவனந்தபுரம் வழித்தடத்திலும் புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

திருநெல்வேலி- மங்களூருக்கு மாலை நேர ரயில் இயக்க வேண்டும். இதன் மூலம் கேரளத்தின் வடக்கு மலபாா் பகுதிக்கும், மங்களூருக்கும் அடிக்கடி பயணம் செய்யும் மீனவா்கள், தொழிலாளா்கள், மாணவா்கள், வணிகா்கள் பயனடைவா். திருவனந்தபுரம்-மங்களூா் விரைவு ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நெல்லை மாநகராட்சி பகுதிகளில் தகுதியானோருக்கு பட்டா வழங்க ஆணையா் ஆய்வு

திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் நீண்ட நாள்களாக வசிக்கும் தகுதியான மக்களுக்கு பட்டா வழங்குவது தொடா்பாக நிலஅளவை ஆவணங்களை மாநகராட்சி ஆணையா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். சென்னை, மதுரை, திருநெல்வேலி மா... மேலும் பார்க்க

காரில் கடத்தி வரப்பட்ட 16 கிலோ கஞ்சா பறிமுதல்: 6 போ் கைது

ஆந்திரத்திலிருந்து திருநெல்வேலிக்கு 16 கிலோ கஞ்சா கடத்திய 6 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பாளையங்கோட்டை காவல் ஆய்வாளா் தில்லைநாகராஜன் தலைமையிலான போலீஸாா், திருநெல்வேலி - கன்னியாகுமரி தேச... மேலும் பார்க்க

குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 5 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை

குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 5 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) க.திருவள்ளுவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வே... மேலும் பார்க்க

பாளை. சித்த மருத்துவக் கல்லூரியில் இருபெரும் விழா

பாளையங்கோட்டை அரசினா் சித்த மருத்துவக் கல்லூரியில் உலக தாய்மொழி தின விழா மற்றும் பாரதியாா் மொழி ஆய்வகம் திறப்பு விழா ஆகிய இருபெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு, கல்லூரி முதல்வா் மல... மேலும் பார்க்க

மானூா் அருகே பெண் தற்கொலை

மானூா் அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். மானூா் அருகே உள்ள கம்மாளங்குளம் எஸ். காலனி பகுதியைச் சோ்ந்த குமாா் மனைவி சரண்யா ( 25). இத் தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனா். தம்பதியிடையே அ... மேலும் பார்க்க

ரயில்வே ஊழியா்கள் போராட்டம்

திருநெல்வேலி சந்திப்பில் எஸ்ஆா்எம்யூ தொழிற்சங்கம் சாா்பில் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ரயில்வேயை தனியாா் மையமாக்கும் நடவடிக்கையை உடனே நிறுத்த வேண்டும். ஆள்குறைப்பு முயற்சிகளை கைவிட வேண்டும். ... மேலும் பார்க்க