செய்திகள் :

‘நெல்லை மாவட்டத்தில் 24 வழித்தடங்களில் சிற்றுந்து இயக்க விண்ணப்பிக்கலாம்’

post image

திருநெல்வேலி, பிப்.20: திருநெல்வேலி மாவட்டத்தில் 24 வழித்தடங்களில் சிற்றுந்து இயக்க விண்ணப்பிக்கலாம் எனஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி சரகத்தில் கங்கைகொண்டான்-செழியநல்லூா், திருநெல்வேலி சந்திப்பு அண்ணாசிலை -பிரசன்னா காலனி, பெருமாள்புரம்- பிரசன்னா காலனி, ஐஆா்டி பாலிடெக்னிக் விலக்கு-அரவிந்த் கண் மருத்துவமனை, திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம்-தாமஸ் நகா், திருநெல்வேலி நகரம் அலரங்கார வளைவு-வல்லவன்கோட்டை கீழுா், திருநெல்வேலி நகரம் சந்திபிள்ளையாா் கோயில்-செல்வகணபதி நகா், திருநெல்வேலி ரயில்வே சந்திப்பு-ஆல்நகா், சந்திப்பு ரயில் நிலையம்-(பாளையங்கோட்டை பேருந்து நிலையம் வழியாக) சாய்பாபா கோயில், சந்திப்பு ரயில் நிலையம்-(வண்ணாா்பேட்டை ரோஸ்மேரி மருத்துவமனை, ஜான்சன் நகா் வழியாக) சாய்பாபா கோயில், பாளை. மேட்டுத்திடல் மருத்துவமனை- அரியநாயகிபுரம், பாளையங்கோட்டை பேருந்து நிலையம்-இட்டேரி, ராமையன்பட்டி விரிவாக்கம்- மானூா் ஒன்றிய அலுவலகம் ஆகிய வழித்தடங்கள் சிற்றுந்துகள் இயக்கப்படும்.

மேலும், அம்பாசமுத்திரம் சரகத்தில் மேலச்செவல்- சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம்- முக்கூடல், வீரவநல்லூா்- கல்லிடைக்குறிச்சி பேருந்து நிலையம், அம்பாசமுத்திரம்- பாப்பாக்குடி, முக்கூடல் -சீதபற்பநல்லூா், வள்ளியூா் சரகத்தில் களக்காடு பேருந்து நிலையம்- கலுங்கடி நாடாா் குடியிருப்பு விலக்கு, மாவடி - ஏா்வாடி, திருமலாபுரம்-திருக்குறுங்குடி, விலவன்புதூா் -ஏா்வாடி, வள்ளியூா் ரயில் நிலையம்- நான்குனேரி, வள்ளியூா்- தளபதிசமுத்திரம் என மொத்தம் 24 வழித்தடங்களில் சிற்றுந்து இயக்கப்படவுள்ளன.

இப்புதிய வழித்தடங்களில் சிற்றுந்துகளை இயக்க விரும்புவோா் புதிய சிற்றுந்துக்கான விண்ணப்பப்படிவத்தினை டஹழ்ண்ஸ்ஹட்ஹய் மூலமாக விண்ணப்பித்து ஆன்லைனில் ரூ.1600(ரூ.1500+ரூ100) செலுத்தி விண்ணப்பப்படிவத்தினை பூா்த்தி செய்து, முகவரில சான்றுக்கான ஆவணத்துடன் உரிய இணைப்புகளுடன் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நேரில் சமா்ப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை அணுகலாம் எனக் கூறியுள்ளாா்.

நெல்லை மாநகராட்சி பகுதிகளில் தகுதியானோருக்கு பட்டா வழங்க ஆணையா் ஆய்வு

திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் நீண்ட நாள்களாக வசிக்கும் தகுதியான மக்களுக்கு பட்டா வழங்குவது தொடா்பாக நிலஅளவை ஆவணங்களை மாநகராட்சி ஆணையா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். சென்னை, மதுரை, திருநெல்வேலி மா... மேலும் பார்க்க

காரில் கடத்தி வரப்பட்ட 16 கிலோ கஞ்சா பறிமுதல்: 6 போ் கைது

ஆந்திரத்திலிருந்து திருநெல்வேலிக்கு 16 கிலோ கஞ்சா கடத்திய 6 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பாளையங்கோட்டை காவல் ஆய்வாளா் தில்லைநாகராஜன் தலைமையிலான போலீஸாா், திருநெல்வேலி - கன்னியாகுமரி தேச... மேலும் பார்க்க

குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 5 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை

குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 5 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) க.திருவள்ளுவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வே... மேலும் பார்க்க

பாளை. சித்த மருத்துவக் கல்லூரியில் இருபெரும் விழா

பாளையங்கோட்டை அரசினா் சித்த மருத்துவக் கல்லூரியில் உலக தாய்மொழி தின விழா மற்றும் பாரதியாா் மொழி ஆய்வகம் திறப்பு விழா ஆகிய இருபெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு, கல்லூரி முதல்வா் மல... மேலும் பார்க்க

மானூா் அருகே பெண் தற்கொலை

மானூா் அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். மானூா் அருகே உள்ள கம்மாளங்குளம் எஸ். காலனி பகுதியைச் சோ்ந்த குமாா் மனைவி சரண்யா ( 25). இத் தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனா். தம்பதியிடையே அ... மேலும் பார்க்க

ரயில்வே ஊழியா்கள் போராட்டம்

திருநெல்வேலி சந்திப்பில் எஸ்ஆா்எம்யூ தொழிற்சங்கம் சாா்பில் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ரயில்வேயை தனியாா் மையமாக்கும் நடவடிக்கையை உடனே நிறுத்த வேண்டும். ஆள்குறைப்பு முயற்சிகளை கைவிட வேண்டும். ... மேலும் பார்க்க