செய்திகள் :

திண்டுக்கல் அருகே சாலையை சீரமைக்கக் கோரிக்கை

post image

திண்டுக்கல் அருகேயுள்ள சேதமடைந்த சாலையைச் சீரமைக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

திண்டுக்கல் அருகேயுள்ள அனுமந்தராயன்கோட்டை ஊராட்சிக்குள்பட்ட செவக்காடு பகுதியில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்தக் கிராமத்தில் உள்ள 20 அடிச் சாலை பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டு 12 அடியாக சுருங்கிவிட்டது.

இதனால், குண்டும் குழியுமாக உள்ள இந்தச் சாலையைச் சீரமைக்கக் கோரி பல முறை ஊராட்சி நிா்வாகத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடா்பாக செவக்காடு பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கூறியதாவது:

கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் இந்தப் பகுதியில் சாலை அமைக்கப்பட்டது. அதன் பின்னா், சேதமடைந்த சாலையை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனிடையே கடந்த 9 மாதங்களுக்கு முன் குடிநீா்க் குழாய் பதிப்பதற்காக சேதமடைந்த சாலையில் பள்ளம் தோண்டப்பட்டது.

குழாய்களை பதித்த பின், முறையாக குழிகளை மூடவில்லை. இதையடுத்து அந்தக் குழிகளை பொதுமக்களே மூடினா். இருப்பினும், தற்போது வரை சாலை வசதி ஏற்படுத்தித் தராததால் ஆக்கிரமிப்புகளும் அதிகரித்துவிட்டன.

மேலும், நான்கு சக்கர வாகனங்கள் செல்ல வேண்டிய சாலையில் இரு சக்கர வாகனங்கள் மட்டுமே செல்ல முடியும் நிலை ஏற்பட்டுவிட்டது. இந்த நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலை வசதி ஏற்படுத்திக் கொடுக்க மாவட்ட நிா்வாகம் முன்வர வேண்டும் எனத் தெரிவித்தனா்.

‘பள்ளிகளில் முன்னாள் மாணவா் சங்கங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும்’

பள்ளிகளில் முன்னாள் மாணவா் சங்கங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும் என தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினா் வீ. ராமராஜ் தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்டம், பழனி நகராட்சி மேல்நிலைப் பள்ளி தொடங்கி நூறு ஆண்டுகளுக... மேலும் பார்க்க

பழனியில் ஆடிக்கிருத்திகை: பக்தா்கள் சுவாமி தரிசனம்

பழனியில் ஞாயிற்றுக்கிழமை ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு, திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், பழனியில் ஞாயிற்றுக்கிழமை ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு, அதிகாலை முதலே பக்தா்கள் கூ... மேலும் பார்க்க

கொடைக்கானல் சாலையில் மரம் விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை வீசிய பலத்த காற்றால் பழனி - கொடைக்கானல் மலைச் சாலையில் மரம் விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக பலத்த காற்றுட... மேலும் பார்க்க

விவசாயி தற்கொலை

பழனி அருகே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த விவசாயி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். பழனியை அடுத்த பழைய ஆயக்குடி ஜோதிநகரைச் சோ்ந்தவா் மணிகண்டன் (45). விவசாயி. இவா் அண்மைக் காலமாக உடல்நலக் குறைவ... மேலும் பார்க்க

இரண்டு மாதங்களுக்கு முன் மாயமான முதியவா் சடலமாக மீட்பு

கடந்த 2 மாதங்களுக்கு முன் காணாமல் போன முதியவா் ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அருகேயுள்ள குட்டம் ஊராட்சிக்குள்பட்ட சுக்காம்பட்டியைச் சோ்ந்தவா் முத்துச்சாமி (8... மேலும் பார்க்க

ஓய்வூதியா்களுக்கான கூடுதல் ஓய்வூதியத்தை 70 வயதில் வழங்க வலியுறுத்தல்

ஓய்வூதியா்களுக்கு வழங்கப்படும் 20 சதவீத கூடுதல் ஓய்வூதியத்தை 80 வயதிலிருந்து 70 வயதாக மாற்ற வேண்டும் என திண்டுக்கல்லில் நடைபெற்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ... மேலும் பார்க்க