செய்திகள் :

திண்டுக்கல்: உதயநிதி ஸ்டாலின் காலில் விழுந்த திமுகவின் மூத்த எம்எல்ஏ - அரசு விழாவில் நடந்தது என்ன?

post image

தமிழ்நாடு துணை முதலமைச்சர், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக திண்டுக்கல் வந்தார்.

நேற்று முன்தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று அன்றிரவே கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையும் செய்தார்.

உதயநிதி ஸ்டாலின் காலில் விழுந்த திமுகவின் மூத்த எம்எல்ஏ
உதயநிதி ஸ்டாலின் காலில் விழுந்த திமுகவின் மூத்த எம்எல்ஏ

இதைத் தொடர்ந்து நேற்று திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் புதிய மருத்துவமனை கட்டிடங்களைத் திறந்து வைத்தார்.

அதோடு, 49 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

மேலும் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது நிகழ்ச்சி மேடைக்கு வந்த வேடசந்தூர் எம்.எல்.ஏ.வும், முன்னாள் துணை சபாநாயகருமான காந்திராஜன் உதயநிதி ஸ்டாலினுக்கு மாலை அணிவித்துவிட்டு உடனே உதயநிதி ஸ்டாலினின் காலில் விழுந்தார்.

அதிர்ச்சியான உதயநிதி அவ்வாறு செய்யக் கூடாது என்றார்.

உதயநிதி ஸ்டாலின் காலில் விழுந்த திமுகவின் மூத்த எம்எல்ஏ ’
உதயநிதி ஸ்டாலின் காலில் விழுந்த திமுகவின் மூத்த எம்எல்ஏ ’

உதயநிதி ஸ்டாலினுக்கு அருகில் அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, சக்கரபாணி, எம்பி ஜோதிமணி, எம்எல்ஏ செந்தில்குமார், மாவட்ட ஆட்சியர் சரவணன் ஆகியோரும் உடனிருந்தனர்.

தன்னை விட வயதில் குறைவானவரான உதயநிதி ஸ்டாலினின் காலில் திமுகவின் மூத்த எம்எல்ஏ காந்திராஜன் விழுந்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அதிமுக ஆட்சிக்காலத்தில் துணை சபாநாயகராக இருந்த காந்திராஜன், அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கரூர் வழக்கு: கூட்டத்தில் சமூக விரோத கும்பல் டு விஜய்-ன் தாமதம்- உச்ச நீதிமன்றத்தில் பரபரத்த விசாரணை

கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் பரப்புரை செய்தபோது ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த விவகாரம் குறித்த... மேலும் பார்க்க

Gaza: ஹமாஸ் - இஸ்ரேல் போர்; இதுவரை நடந்தது என்ன? - ட்ரம்ப்பின் அமைதி திட்டம் கைகொடுக்குமா?

பாலஸ்தீனப் பகுதியான காசாவில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர், கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி தொடங்கி பேரழிவை ஏற்படுத்தியிருக்கிறது. இஸ்ரேலின் போர் விமானங்கள் வீசிய குண்டுகளால் காசா நகரம் மு... மேலும் பார்க்க

ட்ரம்பிற்கு 'நோ' நோபல் பரிசு; அளவிட முடியாத ஆசை, கனவு, புலம்பல் - கேட்டும் கிடைக்காமல் போனது ஏன்?

'எனக்கில்ல... எனக்கில்ல...' - இது திருவிளையாடல் படத்தில் வரும் தருமியின் பிரபல வசனம். இது தற்போது அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு தான் சரியாக பொருந்தும். கிட்டத்தட்ட 9 மாதங்களாக, ஆசை ஆசையாய் அவர் எதிர்பார... மேலும் பார்க்க

Nobel: ட்ரம்பிற்கு இல்லை; வெனிசுலாவைச் சேர்ந்த மரியா கொரினாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு; யார் இவர்?

இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு இந்தப் பரிசு கிடைக்கவில்லை. இந்த ஆண்டு நோபல் பரிசுக்காக 338 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. அதில் 244 பெயர்கள் தனிநபர... மேலும் பார்க்க

``அது தற்செயல் அல்ல, திட்டமிட்டசதி'' - வாகனம் மோதிய விவகாரம் குறித்து திருமாவளவன் குற்றச்சாட்டு

சென்னை பார் கவுன்சில் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சென்ற காரை மறித்து அக்டோபர் 07 அன்று ஒருவர் தகராறில் ஈடுபட்ட காணொளி வைரலானது. அந்த நபரின் வாகனத்தை திருமாவளவனின் கார் இடி... மேலும் பார்க்க

``காசாவுக்காக திடீர் கண்ணீர், நன்றாக நடிக்கிறீர்கள்!'' - முதல்வர் ஸ்டாலினை விமர்சிக்கும் சீமான்

காசா மீதான தாக்குதலுக்கு எதிராக சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில குழு சார்பில் சில தினங்களுக்கு முன்பு கண்டனப் போராட்டம் நடைபெற்றது. எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைப... மேலும் பார்க்க