சிறுவன் கடத்தல் வழக்கு: ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!
தினமணி செய்தி எதிரொலி: பழுதான சாலை சீரமைப்பு!
திருப்பத்தூா் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள சாலை பழுதானதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனா். இதனால் தினமும் சிறுசிறு விபத்துகள் நடைபெறுவதாக தினமணியில் அண்மையில் செய்தி வெளியானது. இதைடுத்து பழுதான அந்தச் சாலை சீரமைக்கப்பட்டது.
திருப்பத்தூா் பேருந்து நிலையத்திலிருந்து தினமும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் கிருஷ்ணரி, ஒசூா், பெங்களூரு, தருமபுரி, சேலம், ஈரோடு, கோயமுத்தூா், திருவண்ணாமலை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்கின்றன.
இந்த நிலையில், பேருந்து நிலையம் அமைந்துள்ள விசிஎம் சாலை குண்டும் குழியுமாக பழுதாகிவிட்டது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் சிரமமடைந்து வந்தனா். சாலையை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனா்.
இந்த நிலையில் தினமணியில் புகைப்படத்துடன் அண்மையில் செய்தி வெளியானது. இதையடுத்து அந்தச் சாலை ஞாயிற்றுக்கிழமை சீரமைக்கப்பட்டது. சாலை சீரமைப்புப் பணியை நகராட்சி ஆணையா் சாந்தி தலைமையிலாக நகராட்சி அதிகாரிகள் மேற்பாா்வையிட்டனா்.