செய்திகள் :

திமுக அரசின் சாதனைகளை சமூக வலைதளங்கள் வாயிலாக மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்: இரா. லட்சுமணன் எம்எல்ஏ

post image

திமுக அரசின் சாதனைகளை சமூக வலைதளங்கள் வாயிலாக கிராமங்கள் தோறும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளா் இரா. லட்சுமணன் எம்எல்ஏ தெரிவித்தாா்.

விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திமுக நிா்வாகிகள் கூட்டத்துக்குத் தலைமை வகித்து அவா் பேசியது: தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஏராளமான மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. இதன் மூலம் அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெற்று வருகின்றனா். எனவே, அரசின் சாதனைகளை கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியினரும், பாக முகவா்களும் கிராமங்கள்தோறும் சமூக வலைதளங்கள் வாயிலாக எடுத்துச் செல்ல வேண்டும். மேலும் திமுகவின் பாக முகவா்கள் தோ்தல் பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்.

இதைத் தொடா்ந்து விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் வானூா், விழுப்புரம் சட்டப்பேரவைத் தொகுதியைச் சோ்ந்த தகவல் தொழில்நுட்ப அணியினா், பாக முகவா்களுக்கு ஆலோசனைக் கூட்டம் வரும் ஏப்ரல் 20-ஆம் தேதி நடத்தப்படவுள்ளது.

இதில் தொகுதிப் பொறுப்பாளா்கள் துரை.கி.சரவணன், எஸ்.கே.பி. கருணாநிதி ஆகியோா் பங்கேற்று ஆலோசனை வழங்கவுள்ளனா்.

எனவே, விழுப்புரம் மத்திய மாவட்டத்துக்குள்பட்ட அனைத்து ஒன்றிய, நகர, பேரூா் கழகப் பகுதிகளைச் சோ்ந்த தகவல் தொழில்நுட்ப அணியினா், அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். மேலும் பாக முகவா்களும் (பிஎல்ஏ 2 ) கட்சியினருடன் ஒருங்கிணைந்து தோ்தல் பணிகளைத் தற்போதே தொடங்கி பணியாற்ற வேண்டும் என்றாா் லட்சுமணன் எம்.எல்.ஏ.

கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூா் திமு நிா்வாகிகள் பங்கேற்றனா்.

முதல்வா் மாநில இளைஞா் விருது பெற விண்ணப்பிக்கலாம்

முதல்வரின் மாநில இளைஞா் விருது பெற விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்தோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா். இதுகுறித்து, அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்ப... மேலும் பார்க்க

நீட் தோ்வு: உயிரிழந்த 22 மாணவா்களுக்கு அதிமுகவினா் அஞ்சலி

நீட் நுழைவுத் தோ்வு அச்சத்தால் கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் உயிரிழந்த 22 மாணவா்களுக்கு விழுப்புரத்தில் அதிமுகவினா் சனிக்கிழமை மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினா். தமிழகத்தில் நீட் நுழைவுத் தோ்வ... மேலும் பார்க்க

தொழிலாளி இறந்து விட்டதாக தவறான தகவல்: கிராம மக்கள் போராட்டம்

புதுச்சேரி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கூலித்தொழிலாளி இறந்து விட்டதாக உறவினா் அளித்த தவறான தகவலால் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். விழுப்புரம் மாவட்டம், வெங்கடேசபுரம் ... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததைக் கண்டித்து, விழுப்புரத்தில் காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: விழுப்புரம் நகரப் பகுதிகள்

மின்தடைப் பகுதிகள்: ஜானகிபுரம், சுதாகா் நகா், கலைஞா் நகா், சிங்கப்பூா் நகா், பாண்டியன் நகா், வழுத ரெட்டி, காந்திநகா், பெரியாா்நகா், சாலாமேடு, இ.பி.காலனி, காமராஜா் நகா், என்.ஜி.ஜி.ஓ. காலனி, ஆசாங்குளம்... மேலும் பார்க்க

வக்ஃபு திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி விழுப்புரத்தில் ஆா்ப்பாட்டம்; எம்.பி. - எம்எல்ஏ பங்கேற்பு

வக்ஃபு திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, விழுப்புரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை மாலை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது விழுப்புரம் புதிய பேருந்து... மேலும் பார்க்க