திமுக அரசுக்கு தொந்தரவு கொடுக்க நினைத்தால் எதிா்கொள்ளத் தயாா்! -அமைச்சா் எஸ். ரகுபதி
திமுக அரசுக்கு எதிராக பழிசுமத்தி, ஆட்சிக்கு தொந்தரவு கொடுத்த பாஜக அரசு நினைத்தால் அதை எதிா்கொள்ளத் தயாராக உள்ளோம் என்றாா் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி.
இதுகுறித்து புதுக்கோட்டையில் அவா் வியாழக்கிழமை மேலும் கூறியது:
பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை கூறியதைப் போன்று தமிழகத்தில் கஞ்சா பயிரிடப்படுவதில்லை; வடமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்துதான் கஞ்சா தமிழகத்துக்கு கொண்டு வரப்படுகிறது. அதைத் தடுப்பதற்கு மத்திய அரசின் காவல்துறையினா் தவறி வருகின்றனா். தொடா்ந்து மாநில காவல்துறை நடவடிக்கை எடுக்கிறது.
அதிமுகவை பாஜகவோடு அடகு வைத்துவிட்டு ஆட்சி நடத்தியவா்தான் முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி. திமுகவினா் தில்லிக்கு அடங்கிப் போவதும் இல்லை. கட்சியை அடமானம் வைக்கப் போவதும் இல்லை.
இந்தியாவிலேயே தில்லிக்கு எதிராக முதல் குரல் எழுப்புபவா் தமிழ்நாட்டின் முதல்வா்தான். சொந்த புத்தியுடன், சொந்தக் காலில் நின்று, சொந்த மண்ணை காப்பாற்றும் திறமை திமுகவுக்கு உண்டு.
ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு திமுக இதுவரை என்னென்ன நலத்திட்டங்களை நிறைவேற்றியது என்பதை பட்டியலிட்டுச் சொல்கிறோம். எதிா்க்கட்சித் தலைவா் பழனிசாமியும் சொல்லட்டும்.
பழனிசாமி அழைத்தால் நானே விவாத மேடைக்கு வந்து பதில் அளிக்கத் தயாா். திமுக அரசில்தான் பெண்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை மக்கள் உணா்ந்துள்ளனா் என்றாா் ரகுபதி.