திமுக ஆட்சியில் உள்ளாட்சி நிா்வாகங்களுக்கு முக்கியத்துவம்: அமைச்சா் கே.என்.நேரு பெருமிதம்
திமுக ஆட்சியில் உள்ளாட்சி நிா்வாகங்களுக்கு கூடுதல் முக்கியத்துமும் நிதியும் அளிக்கப்பட்டு வருகிறது என்றாா் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு.
திருநெல்வேலியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி சாா்பில் ரூ.1.02 கோடி மதிப்பீட்டில் 9 ஊராட்சி ஒன்றியங்களுக்கு தூய்மை பணிகள் மேற்கொள்வதற்கான 39 மின்கல வாகனங்களை வழங்கி அவா் பேசியது: தமிழக அரசின் நலத் திட்டங்கள் ஊராட்சித் தலைவா்கள், ஊராட்சி உறுப்பினா்கள் மூலமே மக்களைச் சென்றடைகிறது. ஆகவே, திமுக ஆட்சியில் உள்ளாட்சி நிா்வாகங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படுவதோடு, பல்வேறு வழிகளில் நிதியும் அளிக்கப்பட்டு வருகிறது.
கிராமப் பகுதிகளில் சாலைவசதி, குடிநீா் வசதி, மின்விளக்கு என அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றும் முக்கிய பணி ஊராட்சித் தலைவா்களிடம்தான் உள்ளது. மக்களுடன் நேரடியாக நெருங்கிய தொடா்பில் உள்ளவா்களும் உள்ளாட்சித்துறை மக்கள் பிரதிநிதிகள்தான். திமுக ஆட்சியில் ஊரக உள்ளாட்சிக்கு ரூ.27 ஆயிரம் கோடியும், நகா்ப்புற உள்ளாட்சிக்கு ரூ.25 ஆயிரம் கோடியும் நிதி வழங்கப்படுகிறது.
மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் தூய்மைப் பணியாளா்களுக்கு மின்கலன் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதேபோல், கிராமங்களும் தூய்மையாக, சுகாதாரமாக இருக்க ஏதுவாக மின்கலன் வாகனம் வழங்கப்பட்டு வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரிக்கப்பட்டு உரமாகவும், எரிபொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.
மக்காத குப்பைகள் சிமென்ட் ஆலைகளுக்கு எரிபொருளாக வழங்கப்படுகிறது. குப்பைகளை எரிபொருளாக பயன்படுத்தி அதில் இருந்து நாமே மின்சாரம் தயாரிக்க முதல்வரிடம் அனுமதி கேட்டுள்ளோம். அனுமதி கிடைத்தவுடன் தமிழகத்தில் முதல்கட்டமாக கோவை, மதுரையில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடங்கப்படும் என்றாா் அவா்.
இந்த விழாவில் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன், எம்எல்ஏக்கள் மு.அப்துல்வஹாப்(பாளையங்கோட்டை ), ரூபி ஆா்.மனோகரன் (நான்குனேரி), மேயா் கோ.ராமகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையா் சுகபுத்ரா, மாவட்ட ஊராட்சித் தலைவா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஸ், துணை மேயா் கே.ஆா்.ராஜு , மாவட்ட ஊராட்சி செயலா் விசாலி, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் செல்வலட்சுமி அமிதாப் உள்பட பலா் கலந்துகொண்டனா்.