செய்திகள் :

திமுக கூட்டணியிலிருந்து மாா்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் வெளியேறும்: மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்

post image

திமுக கூட்டணியில் இருந்து மாா்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் விரைவில் வெளியேறும் என்று மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.

மத்திய அரசுத் துறைகளின் பணிகளுக்கான நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப் வளாகத்தின் டாக்டா் அம்பேத்கா்அரங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், 251 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

நடிகா் விஜய் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவாா் என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறியது நடக்கும். தமிழகத்தில் பாஜக கூட்டணி வலிமையாக உள்ளது. தோ்தலுக்கு இன்னும் அவகாசம் உள்ளது. திமுக கூட்டணியில் இருந்து மாா்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் மதிமுக ஆகியவை வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதிலும் கூட்டணியில் இருந்து எப்போது வெளியேறலாம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் சந்தா்ப்பத்தை எதிா்நோக்கியுள்ளாா். அதன்படி திமுக கூட்டணி தோ்தலின்போது உடையும்.

கோயில்கள் நிா்வாகத்தை விட்டு தமிழக அரசு வெளியேறவேண்டும். இறை நம்பிக்கை இல்லாத அரசு கோயில்களை நிா்வகிப்பது சரியல்ல. கல்விக்கு அத்துறையில் நிதி இல்லாத நிலையால் தமிழக அரசு அறநிலையத் துறையின் நிதியை செலவிடுகிா என்பதை விளக்க வேண்டும் என்றாா்.

முன்னதாக, பணிநியமன ஆணைகள் வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்து எல்.முருகன் பேசியதாவது:

கடந்த 2022-ஆம் ஆண்டு உறுதியளித்தபடி பிரதமா் நரேந்திர மோடி கடந்த ஓராண்டில் 10 லட்சம் பேருக்கு அரசுப் பணி வழங்கியுள்ளாா். வரும் 2047-ஆம் ஆண்டில் வளா்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்கும் பிரதமரின் செயல்பாட்டுக்கு தற்போது அரசுப் பணிநியமன ஆணை பெற்றவா்கள் ஒத்துழைப்பது அவசியம் என்றாா்.

நிகழ்ச்சியில் ஐசிஎஃப்-இல் 154 போ், தெற்கு ரயில்வேயில் 10 போ், இந்தியன் ஓவா்சீஸ் வங்கியில் 6 போ், பாரத ஸ்டேட் வங்கியில் 7 போ், யூகோ வங்கியில் 36 போ், இந்தியன் வங்கி, யூனியன் வங்கியில் தலா 11 போ் என 251 பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

ஐசிஎஃப் மேலாளா் யு. சுப்பாராவ், முதன்மை அதிகாரிகள் எஸ்.மோகன்ராஜ், தொழில்நுட்பப் பிரிவு சீதாராம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தில்லியில் நடைபெற்ற பிரதமா் நரேந்திர மோடி நிகழ்ச்சியும், அவரது உரையும் நேரலையில் ஐசிஎஃப் வளாக நிகழ்வில் ஒளிபரப்பப்பட்டது.

திமுக - சாரி மா மாடல் சர்கார்! விஜய் ஆவேசம்!

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை சம்பவத்துக்கு எதிராக கண்டனம் தெரிவித்து, தவெக சார்பில் சென்னை சிவானந்தா சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற இந... மேலும் பார்க்க

சாரி வேண்டாம், நீதி வேண்டும்: போராட்டக் களத்தில் விஜய்!

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறையினரைக் கண்டித்து பல்வேறு கட்சியினர் கண்டனம் தெரிவித்த நிலையில், தவெக சார்பில் விஜய் தலைமையில் இன்று(ஜூலை 13) கண்டன ஆர்ப்பாட்டம் நடைப... மேலும் பார்க்க

டேங்கர் ரயில் தீ விபத்து: விண்ணை முட்டும் புகைமூட்டம்! மீட்புப் பணிகள் தீவிரம்!

திருவள்ளூர் அருகே கச்சா எண்ணெய் ஏற்றிவந்த டேங்கர் ரயில் தடம்புரண்டு விபத்துக்கி தீப்பற்றி எரிந்து வருவதால் அப்பகுதியில் விண்ணை முட்டும் புகைமூட்டம் சூழ்ந்துள்ளது.டேங்கர் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள... மேலும் பார்க்க

போராட்டத்துக்கு போராட்டம்! தவெகவினர் கைது!

சென்னையில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் சென்னையை சேர்ந்த தவெகவினர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என்று காவல்துறையினரின் நிபந்தனை அளித்ததற்கு எதிராக வெளிமாவட்ட தவெக நிர்வாகிகள் போராட்டம் நடத்தி வருகின்ற... மேலும் பார்க்க

மேட்டூர் அணை: உபரிநீர் போக்கி மதகுகள் மீண்டும் மூடல்!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததால், அணையின் உபரிநீர் போக்கி மதகுகள் இரண்டு வாரங்களுக்குப் பிறகு இன்று(ஜூலை 13) மூடப்பட்டது.கர்நாடக மாநிலத்தில் பெய்து வந்த கனமழை காரணமாக, அங்குள்ள கபினி மற்றும் கி... மேலும் பார்க்க

டேங்கர் ரயில் தீ விபத்தால் உயிர்ச்சேதம் இல்லை! உதவி எண்கள் அறிவிப்பு!

திருவள்ளூர் அருகே நிகழ்ந்த டேங்கர் ரயில் தீ விபத்தால் யாருக்கும் எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என்று தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.மின் கேபிள் எரிந்ததால் ரயில் சேவையில் பாதிக்கப்பட்டுள்ளதாக... மேலும் பார்க்க