"எடப்பாடி பழனிசாமி முழு சங்கியாக மாறி, காவி சாயத்துடன் இருக்கிறார்’’ - உதயநிதி வ...
டேங்கர் ரயில் தீ விபத்து: விண்ணை முட்டும் புகைமூட்டம்! மீட்புப் பணிகள் தீவிரம்!
திருவள்ளூர் அருகே கச்சா எண்ணெய் ஏற்றிவந்த டேங்கர் ரயில் தடம்புரண்டு விபத்துக்கி தீப்பற்றி எரிந்து வருவதால் அப்பகுதியில் விண்ணை முட்டும் புகைமூட்டம் சூழ்ந்துள்ளது.
டேங்கர் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகி, தீப்பற்றி எரிந்ததில் 8 பெட்டிகள் முழுமையாக நாசமானது.
சென்னை எண்ணூரிலிருந்து 52 டேங்கர்களில் கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு இன்று(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையில் மைசூர் நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில், டீசல் என்ஜின் தடம் புரண்டு விபத்துள்ளானது.
கச்சா எண்ணெய் டேங்கரில் உராய்வு ஏற்பட்டதில் தீப்பற்றி எரிந்து, அடுத்தடுத்து 7 டேங்கர் பெட்டிகளில் மளமளவென பரவியது.
இதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்த பெட்டிகளில் தீ பரவிக் கொண்டிருக்கிறது. தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், சுமார் 5 மணி நேரத்துக்கு மேல் டேங்கர் ரயிலின் பெட்டிகள் எரிந்து வருவதால், அப்பகுதியில் விண்ணை முட்டும் புகைமூட்டம் சூழ்ந்துள்ளது.
மேலும், 70% தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் 18 பெட்டிகள் தீயில் எரிந்து சேதமடைந்ததாகவும் தீயணைப்புத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தினால் ரயில்வே இருப்புப் பாதை, சிக்னல் ஃபோர்டு, மின் இணைப்புகள் அனைத்தும் அறுந்து விழுந்தன, 200 மீட்டர் தொலைவுக்கு தண்டவாளங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.
சென்னை - அரக்கோணம் வழித்தடத்தில் விரைவு ரயில்கள், புறநகர் ரயில்கள் என 15 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
A tanker train carrying crude oil derailed and caught fire near Thiruvallur, causing a thick layer of smoke to engulf the area.
இதையும் படிக்க: டேங்கர் ரயில் தீ விபத்தால் உயிர்ச்சேதம் இல்லை! உதவி எண்கள் அறிவிப்பு!