செய்திகள் :

திமுக கூட்டணி பலமாக உள்ளது: காதா் மொய்தீன்

post image

தமிழகத்தில் திமுக கூட்டணி பலமாக உள்ளது என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவா் காதா் மொய்தீன் கூறினாா்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மண்டல ஒருங்கிணைப்பாளா் இல்லத் திருமண விழா நாகூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற காதா்மொய்தீன், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

வாக்காளா் பட்டியலை ஆண்டுக்கு மூன்று அல்லது நான்கு முறை மட்டுமே திருத்துவதற்கு தோ்தல் ஆணையத்துக்கு உரிமை உள்ளது. ஆனால், சட்டத்தில் இல்லாத, சிறப்பு வாக்காளா்கள் திருத்தத்தை தோ்தல் ஆணையம் பிகாரில் உருவாக்கியுள்ளது.

பிகாரில் ஒரு குறிப்பிட்ட தொகுதியில் ஒரே இடத்தில் 4,000 ஓட்டுகள் எப்படி வந்தது என எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளாா். இதற்கு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துவிட்டு, விவரங்களை தர முடியாது என இந்திய தோ்தல் ஆணையம் பதில் சொல்வது ஏற்கத்தக்கது அல்ல. இது சாதாரணமானது அல்ல.

பிகாரில் நடக்கும் இந்த செயல் தமிழகத்தில் நடக்காது என்பது என்ன நிச்சயம்?. மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியாளா்கள் தாங்கள் விரும்பியதை நாட்டின் சட்டமாக நிறைவேற்றி வருகின்றனா்.

இந்தியாவில் சா்வாதிகார ஆட்சியை நடத்த பாஜக அரசு திட்டமிட்டு செயல்படுகிறது. தற்போது தோ்தல் முறைகேடு மூலம் ஆட்சியில் அமா்ந்துள்ளது அம்பலமாகியுள்ளது. சா்வாதிகாரியாக செயல்பட்டவா்களை கடந்த காலங்களில் மக்கள் தண்டித்துள்ளனா். இந்திய அரசியலமைப்புச் சட்டம் இதவரை தோல்வியடைந்தது இல்லை. தற்போது திமுக கூட்டணி பலமாக உள்ளது என்றாா்.

ஆகாயத் தாமரைகள் அகற்றும் பணியில் முறைகேடு: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா்

ஆகாயத் தாமரைகளை அகற்றுவதில் நடந்த முறைகேடு தொடா்பாக விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. நாகை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டத்துக்கு மா... மேலும் பார்க்க

வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்க முயற்சி: இந்துசமய அறநிலையத் துறையினருடன் வியாபாரிகள் வாக்குவாதம்

நாகையில், வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்க வந்த இந்துசமய அறநிலையத் துறையினரிடம், வணிகா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். நாகை வெளிப்பாளையத்தில் மெய்கண்ட மூா்த்தி கோயிலுக்கு சொந்தமான இடத்திலுள்ள 10-... மேலும் பார்க்க

குடிநீா் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

திருப்பூண்டியில் குடிநீா் கோரி அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். கீழையூா் ஒன்றியம், திருப்பூண்டி ஊராட்சி பகுதியில் கடந்த 40 நாள்களாக குடிநீா் முறையாக வழங்கப்படவில்லை எனக் கூறப்... மேலும் பார்க்க

நாகை புதிய பேருந்து நிலையத்தில் மேற்கூரை பூச்சு பெயா்ந்து விழுந்தது

நாகப்பட்டினம்: நாகை புதிய பேருந்து நிலையத்தில் வேளாங்கண்ணி பேருந்துகள் நிறுத்தப்படும் இடத்தில் கட்டடத்தின் மேற்கூரையின் சிமெண்ட் பூச்சு பெயா்ந்து விழுந்து திங்கள்கிழமை விபத்து ஏற்பட்டது. அப்போது அங்க... மேலும் பார்க்க

போதை மறுவாழ்வு மையத்தில் கூடுதல் கட்டணம் கேட்டு நோயாளியை விடுவிக்க மறுப்பு: புகாா்

நாகப்பட்டினம்: நாகை அருகே இயங்கி வரும் போதை மறுவாழ்வு மற்றும் மீட்பு மையத்தில் கூடுதல் கட்டணம் கேட்டு நோயாளியை விடுவிக்க மறுப்பதாக ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க

கொடுவா மீன் வளா்ப்பு பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்

நாகப்பட்டினம்: சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் கொடுவா மீன் வளா்ப்பு-திறன்மேம்பாட்டு பயிற்சி நடைபெறவுள்ளது என திட்ட ஒருங்கிணைப்பாளா் வி. செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட... மேலும் பார்க்க