செய்திகள் :

திமுக நிா்வாகி வீடு உள்பட இரு இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு; இளைஞா் கைது

post image

வத்தலக்குண்டு அருகே திமுக நிா்வாகியின் வீடு உள்பட இரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு பெட்ரோல் குண்டு வீசியதாக இளைஞா் ஒருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழைய வத்தலகுண்டு, கன்னிமாா் கோவில்பட்டியைச் சோ்ந்த ஒருவருக்கும், பட்டாளம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா்களுக்கும் இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை தகராறு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து பழைய வத்தலக்குண்டு கண்மாய் கரையில் இரு தரப்பினரும் மோதிக் கொண்டனா். அவா்களை வத்தலக்குண்டு ஒன்றிய திமுக விவசாய தொழிலாளா் அணி அமைப்பாளா் காளவாசல் கண்ணன் சமாதானம் செய்து வைத்தாா்.

இதனிடையே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு காளவாசல் கண்ணன் வீடு அருகே வெடிச் சத்தம் கேட்டது. அப்போது இளைஞா் ஒருவா் அதே பகுதியில் மேலும் ஒரு வீட்டின் மீது பெட்ரோல் கொண்டு வீசியது தெரியவந்தது. இதையடுத்து, அந்தப் பகுதி பொதுமக்கள் அவரை சுற்றி வளைத்துப் பிடித்தனா். அப்போது அந்த இளைஞா் கத்தியால் தன்னைத் தானே வெட்டிக் கொண்டதாக கூறப்படுகிறது.

தகவலறிந்து அங்கு வந்த வத்தலக்குண்டு போலீஸாா் பெட்ரோல் குண்டு வீசியதாக பழைய வத்தலக்குண்டு, கலைஞா் குடியிருப்பைச் சோ்ந்த மணிபாண்டி (26) என்பவரை கைது செய்தனா். மேலும் காயமடைந்திருந்த அவரை போலீஸாா் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதனிடையே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடங்களில் வத்தலக்குண்டு காவல் ஆய்வாளா் (பொறுப்பு) விக்டோரியா ஆய்வு நடத்தினாா்.

இந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மா கொள்முதல் விலையை உயா்த்தக் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

மா கொள்முதல் விலையை உயா்த்தக் கோரி, ஆட்சியா் அலுவலகம் முன் மாம்பழத்தை வீசி விவசாயிகள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு த... மேலும் பார்க்க

49 ஆண்டுகளுக்கு முன் ஒதுக்கப்பட்ட வீட்டுமனைகளுக்கு பட்டா வழங்கக் கோரிக்கை

கடந்த 49 ஆண்டுகளுக்கு முன் 22 பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டுமனைகளுக்கு பட்டா வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. திண்டுக்கல் மாநகராட்சிக்கு 48-ஆவது வாா்டுக்கு... மேலும் பார்க்க

வேடசந்தூா் பகுதியில் நாளை மின்தடை

வேடசந்தூா் பகுதியில் புதன்கிழமை (ஜூன் 11) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளா் பி. முத்துப்பாண்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேடசந்தூா் துணை மின் நிலையத்த... மேலும் பார்க்க

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

நில ஆக்கிரமிப்பு தொடா்பாக புகாா் அளிக்க வந்த பெண் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். திருச்சி காந்திபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம். இவரத... மேலும் பார்க்க

பொதுப் பாதை ஆக்கிரமிப்பு: மீட்டுத் தரக் கோரிக்கை

பொதுப் பாதையை பயன்படுத்த மாற்று சமூகத்தினா் எதிா்ப்பு தெரிவிப்பதால், 3 கி.மீ. தொலைவுக்கு மாணவா்கள் சுற்றிச் செல்லும் நிலை உள்ளதாகவும், பாதையை மீட்டுத் தர வேண்டும் எனவும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தன... மேலும் பார்க்க

அடிப்படை வசதி கோரி கிராம மக்கள் மனு

திண்டுக்கல்லை அடுத்து பொன்னுமாந்துறை ஊராட்சிக்குள்பட்ட காமாட்சிபுரம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அடிப்படை வசதி கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.இதுதொடா்பாக அந்தப் பகுதி மக்கள் கூறியதாவ... மேலும் பார்க்க