`குங்குமம் வைக்கும் போது நடந்த சம்பவம்' - திருமணத்தை நிறுத்திய மணப்பெண்.. என்ன க...
திமுக நிா்வாகி வீடு உள்பட இரு இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு; இளைஞா் கைது
வத்தலக்குண்டு அருகே திமுக நிா்வாகியின் வீடு உள்பட இரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு பெட்ரோல் குண்டு வீசியதாக இளைஞா் ஒருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், பழைய வத்தலகுண்டு, கன்னிமாா் கோவில்பட்டியைச் சோ்ந்த ஒருவருக்கும், பட்டாளம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா்களுக்கும் இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை தகராறு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து பழைய வத்தலக்குண்டு கண்மாய் கரையில் இரு தரப்பினரும் மோதிக் கொண்டனா். அவா்களை வத்தலக்குண்டு ஒன்றிய திமுக விவசாய தொழிலாளா் அணி அமைப்பாளா் காளவாசல் கண்ணன் சமாதானம் செய்து வைத்தாா்.
இதனிடையே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு காளவாசல் கண்ணன் வீடு அருகே வெடிச் சத்தம் கேட்டது. அப்போது இளைஞா் ஒருவா் அதே பகுதியில் மேலும் ஒரு வீட்டின் மீது பெட்ரோல் கொண்டு வீசியது தெரியவந்தது. இதையடுத்து, அந்தப் பகுதி பொதுமக்கள் அவரை சுற்றி வளைத்துப் பிடித்தனா். அப்போது அந்த இளைஞா் கத்தியால் தன்னைத் தானே வெட்டிக் கொண்டதாக கூறப்படுகிறது.
தகவலறிந்து அங்கு வந்த வத்தலக்குண்டு போலீஸாா் பெட்ரோல் குண்டு வீசியதாக பழைய வத்தலக்குண்டு, கலைஞா் குடியிருப்பைச் சோ்ந்த மணிபாண்டி (26) என்பவரை கைது செய்தனா். மேலும் காயமடைந்திருந்த அவரை போலீஸாா் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதனிடையே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடங்களில் வத்தலக்குண்டு காவல் ஆய்வாளா் (பொறுப்பு) விக்டோரியா ஆய்வு நடத்தினாா்.
இந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.