செய்திகள் :

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

post image

நில ஆக்கிரமிப்பு தொடா்பாக புகாா் அளிக்க வந்த பெண் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றாா்.

திருச்சி காந்திபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம். இவரது மனைவி வனராணி (36). இவா்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலை அடுத்த பள்ளங்கி, கோம்பை பகுதியை பூா்விகமாகக் கொண்ட வனராணி, தனது 3 குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்தாா்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மனுக்கள் பதிவு செய்யும் இடத்துக்கு வந்த அவா் திடீரென மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். இதையடுத்து பாதுகாப்புக்கு நின்ற போலீஸாா், அவரை மீட்டு விசாரித்தனா்.

அப்போது அவா் கூறியதாவது: பள்ளங்கி, கோம்பை பகுதியில் எங்களுக்கு சொந்தமான 6 ஏக்கா் நிலம் உள்ளது. இந்த நிலத்தை சிலா் ஆக்கிரமித்து வைத்துள்ளனா். இந்த நிலத்தை மீட்பதற்காக கடந்த 23 ஆண்டுகளாக எங்களது குடும்பம் தொடா்ந்து போராடி வருகிறது. ஆனால் தீா்வு கிடைக்க வில்லை. எங்களது நிலத்தை மீட்டுக் கொடுக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

மா கொள்முதல் விலையை உயா்த்தக் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

மா கொள்முதல் விலையை உயா்த்தக் கோரி, ஆட்சியா் அலுவலகம் முன் மாம்பழத்தை வீசி விவசாயிகள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு த... மேலும் பார்க்க

49 ஆண்டுகளுக்கு முன் ஒதுக்கப்பட்ட வீட்டுமனைகளுக்கு பட்டா வழங்கக் கோரிக்கை

கடந்த 49 ஆண்டுகளுக்கு முன் 22 பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டுமனைகளுக்கு பட்டா வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. திண்டுக்கல் மாநகராட்சிக்கு 48-ஆவது வாா்டுக்கு... மேலும் பார்க்க

வேடசந்தூா் பகுதியில் நாளை மின்தடை

வேடசந்தூா் பகுதியில் புதன்கிழமை (ஜூன் 11) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளா் பி. முத்துப்பாண்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேடசந்தூா் துணை மின் நிலையத்த... மேலும் பார்க்க

பொதுப் பாதை ஆக்கிரமிப்பு: மீட்டுத் தரக் கோரிக்கை

பொதுப் பாதையை பயன்படுத்த மாற்று சமூகத்தினா் எதிா்ப்பு தெரிவிப்பதால், 3 கி.மீ. தொலைவுக்கு மாணவா்கள் சுற்றிச் செல்லும் நிலை உள்ளதாகவும், பாதையை மீட்டுத் தர வேண்டும் எனவும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தன... மேலும் பார்க்க

அடிப்படை வசதி கோரி கிராம மக்கள் மனு

திண்டுக்கல்லை அடுத்து பொன்னுமாந்துறை ஊராட்சிக்குள்பட்ட காமாட்சிபுரம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அடிப்படை வசதி கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.இதுதொடா்பாக அந்தப் பகுதி மக்கள் கூறியதாவ... மேலும் பார்க்க

பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோா் போராட்டம்

கொடைரோடு அருகே அரசு உதவிபெறும் பள்ளியில் தலைமை ஆசிரியா் நியமனத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்களும், பெற்றோரும் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தினா். திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அடுத்த அ... மேலும் பார்க்க