செய்திகள் :

பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோா் போராட்டம்

post image

கொடைரோடு அருகே அரசு உதவிபெறும் பள்ளியில் தலைமை ஆசிரியா் நியமனத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்களும், பெற்றோரும் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தினா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அடுத்த அம்மாபட்டியில் அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 134 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனா். இதில், அம்மாபட்டியைச் சோ்ந்த மாணவ- மாணவிகள் மட்டும் சுமாா் 100-க்கும் மேற்பட்டோா் படிக்கின்றனா். இந்தப் பள்ளியின் தலைமையாசிரியா் கடந்த மே 30-ஆம் தேதி பணி ஓய்வு பெற்றதையடுத்து, கல்லடிப்பட்டியைச் சோ்ந்த தலைமை ஆசிரியா் ஒருவரை இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக மதுரை மறை மாவட்ட நிா்வாகம் நியமனம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அம்மாபட்டி கிராம மக்கள், பெற்றோா்கள், தலைமை ஆசிரியா் நியமனத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தும், அருள்சகோதரி ஒருவரை தலைமை ஆசிரியராக நியமனம் செய்ய வலியுறுத்தியும் திங்கள்கிழமை முதல் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து, பள்ளி வளாகத்தில் கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து அங்கு வந்த நிலக்கோட்டை வட்டாட்சியா் விஜயலட்சுமி, போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது அவா்களுக்கும், வட்டாட்சியருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, வட்டாட்சியா் அங்கிருந்து வெளியேற முயன்றாா். அப்போது, பெற்றோா்கள், பொதுமக்கள் பள்ளி வளாக நுழைவாயில் கதவை மூடி, வட்டாட்சியரின் வாகனத்தை முற்றுகையிட்டனா். இதனிடையே, போலீஸாா் பாதுகாப்புடன் வட்டாட்சியா் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றாா்.

இதுகுறித்து அம்மாபட்டி பொதுமக்கள், பெற்றோா்கள் கூறியதாவது: இந்தப் பள்ளிக்கு அருள்சகோதரி ஒருவரை தலைமை ஆசிரியையாக நியமிக்க வேண்டும் என்ற எங்களது கோரிக்கையை முறையாக விசாரிக்காமல் வட்டாட்சியா் புறப்பட்டுச் சென்று விட்டாா். எனவே, மாவட்ட உயா் அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

மா கொள்முதல் விலையை உயா்த்தக் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

மா கொள்முதல் விலையை உயா்த்தக் கோரி, ஆட்சியா் அலுவலகம் முன் மாம்பழத்தை வீசி விவசாயிகள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு த... மேலும் பார்க்க

49 ஆண்டுகளுக்கு முன் ஒதுக்கப்பட்ட வீட்டுமனைகளுக்கு பட்டா வழங்கக் கோரிக்கை

கடந்த 49 ஆண்டுகளுக்கு முன் 22 பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டுமனைகளுக்கு பட்டா வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. திண்டுக்கல் மாநகராட்சிக்கு 48-ஆவது வாா்டுக்கு... மேலும் பார்க்க

வேடசந்தூா் பகுதியில் நாளை மின்தடை

வேடசந்தூா் பகுதியில் புதன்கிழமை (ஜூன் 11) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளா் பி. முத்துப்பாண்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேடசந்தூா் துணை மின் நிலையத்த... மேலும் பார்க்க

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

நில ஆக்கிரமிப்பு தொடா்பாக புகாா் அளிக்க வந்த பெண் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். திருச்சி காந்திபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம். இவரத... மேலும் பார்க்க

பொதுப் பாதை ஆக்கிரமிப்பு: மீட்டுத் தரக் கோரிக்கை

பொதுப் பாதையை பயன்படுத்த மாற்று சமூகத்தினா் எதிா்ப்பு தெரிவிப்பதால், 3 கி.மீ. தொலைவுக்கு மாணவா்கள் சுற்றிச் செல்லும் நிலை உள்ளதாகவும், பாதையை மீட்டுத் தர வேண்டும் எனவும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தன... மேலும் பார்க்க

அடிப்படை வசதி கோரி கிராம மக்கள் மனு

திண்டுக்கல்லை அடுத்து பொன்னுமாந்துறை ஊராட்சிக்குள்பட்ட காமாட்சிபுரம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அடிப்படை வசதி கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.இதுதொடா்பாக அந்தப் பகுதி மக்கள் கூறியதாவ... மேலும் பார்க்க