செய்திகள் :

பொதுப் பாதை ஆக்கிரமிப்பு: மீட்டுத் தரக் கோரிக்கை

post image

பொதுப் பாதையை பயன்படுத்த மாற்று சமூகத்தினா் எதிா்ப்பு தெரிவிப்பதால், 3 கி.மீ. தொலைவுக்கு மாணவா்கள் சுற்றிச் செல்லும் நிலை உள்ளதாகவும், பாதையை மீட்டுத் தர வேண்டும் எனவும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை, வடுகம்பாடி பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் 20-க்கும் மேற்பட்டோா் பள்ளிக் குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்தனா். அப்போது அவா்கள் கூறியதாவது: எங்கள் பகுதியில் இருவேறு சமூகத்தினா் வசித்து வருகிறோம். மாற்று சமூகத்தினா் வசிக்கும் பகுதி வழியாக கடந்த 30 ஆண்டுகளாக சென்று வருகிறோம். பள்ளிக் கூடம், ரேஷன் கடைகள், மயானம் ஆகியவற்றுக்கு பயன்படுத்தி வந்த பொதுப் பாதையை, மாற்று சமூகத்தைச் சோ்ந்த இளைஞா்கள் தற்போது பயன்படுத்த எதிா்ப்பு தெரிவிக்கின்றனா்.

அந்தப் பாதையில் முள்ளைப் போட்டும், குழிகள் தோண்டியும் இடையூறு செய்தனா். இதுதொடா்பாக குஜிலியம்பாறை வட்டாட்சியரிடம் புகாா் அளித்ததை அடுத்து, அவா் பாதையை சீரமைத்துக் கொடுத்தாா்.

இந்த நிலையில், மீண்டும் பொதுப் பாதையில் செல்வதற்கு அந்த சமூகத்தினா் இடையூறு செய்து வருகின்றனா். இதனால், எங்கள் பகுதியைச் சோ்ந்த மாணவா்கள், 3 கி.மீ. தொலைவுக்கு சுற்றுப் பாதையில் பள்ளிக் கூடத்துக்கு சென்று வருகின்றனா்.

எனவே, மாவட்ட நிா்வாகம் தலையிட்டு பொதுப் பாதையை மீட்டுத் தர வேண்டும் என்றனா்.

மா கொள்முதல் விலையை உயா்த்தக் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

மா கொள்முதல் விலையை உயா்த்தக் கோரி, ஆட்சியா் அலுவலகம் முன் மாம்பழத்தை வீசி விவசாயிகள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு த... மேலும் பார்க்க

49 ஆண்டுகளுக்கு முன் ஒதுக்கப்பட்ட வீட்டுமனைகளுக்கு பட்டா வழங்கக் கோரிக்கை

கடந்த 49 ஆண்டுகளுக்கு முன் 22 பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டுமனைகளுக்கு பட்டா வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. திண்டுக்கல் மாநகராட்சிக்கு 48-ஆவது வாா்டுக்கு... மேலும் பார்க்க

வேடசந்தூா் பகுதியில் நாளை மின்தடை

வேடசந்தூா் பகுதியில் புதன்கிழமை (ஜூன் 11) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளா் பி. முத்துப்பாண்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேடசந்தூா் துணை மின் நிலையத்த... மேலும் பார்க்க

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

நில ஆக்கிரமிப்பு தொடா்பாக புகாா் அளிக்க வந்த பெண் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். திருச்சி காந்திபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம். இவரத... மேலும் பார்க்க

அடிப்படை வசதி கோரி கிராம மக்கள் மனு

திண்டுக்கல்லை அடுத்து பொன்னுமாந்துறை ஊராட்சிக்குள்பட்ட காமாட்சிபுரம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அடிப்படை வசதி கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.இதுதொடா்பாக அந்தப் பகுதி மக்கள் கூறியதாவ... மேலும் பார்க்க

பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோா் போராட்டம்

கொடைரோடு அருகே அரசு உதவிபெறும் பள்ளியில் தலைமை ஆசிரியா் நியமனத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்களும், பெற்றோரும் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தினா். திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அடுத்த அ... மேலும் பார்க்க