செய்திகள் :

திமுக வேட்பாளர்கள் பி. வில்சன், சல்மா, சிவலிங்கம் யார்?

post image

சென்னை: மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை கட்சித் தலைமை இன்று அறிவித்துள்ளது. மாநிலங்களவைத் தேர்தல் தேதி வெளியான ஒரு சில நாள்களிலேயே வேட்பாளர்களை அறிவித்து திமுக அதிரடி காட்டியிருக்கிறது.

மேலும், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலுக்கும் ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

திமுக சார்பில் போட்டியிடும் மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்கள் பெயர்களை கட்சித் தலைமை வெளியிட்டுள்ளது. அதன்படி, நடிகரும் மநீம தலைவருமான கமல்ஹாசன், தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ள வழக்குரைஞர் பி. வில்சன், கவிஞர் சல்மா, சேலம் கிழக்கு மாவட்டச் செயலராக உள்ள எஸ்.ஆர். சிவலிங்கம் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

புஷ்பநாதன் வில்சன்

மூத்த வழக்குரைஞர் புஷ்பநாதன் வில்சன், மத்திய அரசின் கூடுதல் சொலிசிடர் ஜெனரலாக கடந்த 2012 ஆகஸ்ட் முதல்வ 2014 மே வரை பதவி வகித்தவர். தமிழகத்தின் அரசு கூடுதல் வழக்குரைஞராகவும் 2008 ஆகஸ்ட் முதல் 2011 மே வரை பணியாற்றியவர்.

கவிஞர் சல்மா

கவிஞர் சல்மாவின் புனைப்பெயர் ராஜாத்தி. பிறகு அவர் ராஜாத்தி சல்மா எனவும் அழைக்கப்பட்டார். தமிழ்நாட்டின் சமகால கவிஞர்களில் மிக முக்கியமானவராகவும், முன்னோடி பாலின ஆர்வலராகவும் அறியப்படுவர். பல காலமாக திமுக உறுப்பினராக இருப்பவர்.

எஸ்ஆர் சிவலிங்கம்

தமிழக சட்டப்பேரவைக்கு 1989 மற்றும் 1996ஆம் ஆண்டுகளில் பனமரத்துப்பட்டி தொகுதியிலிருந்து திமுக சார்பில் போட்டியிட்டுத் தேர்வானவர்.

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தோ்வு செய்யப்பட்ட அன்புமணி ராமதாஸ் (பாமக), என்.சந்திரசேகரன் (அதிமுக), எம்.சண்முகம், எம்.முகமது அப்துல்லா, பி.வில்சன், வைகோ (திமுக சாா்பில் தோ்வு செய்யப்பட்டவா்கள்) ஆகிய ஆறு பேரின் பதவிக் காலம் ஜூலை 24-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

இதை முன்னிட்டே ஆறு மாநிலங்களவை இடங்களை நிரப்புவதற்கான தோ்தல் ஜூன் 19-ஆம் தேதி நடைபெறும் என இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த அறிவிப்பு வெளியான நிலையில் திமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. கடந்த முறை மதிமுக பொதுச் செயலர் வைகோவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில் தற்போது மறுக்கப்பட்டுள்ளது.விரைவில் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், தேமுதிக சார்பில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் உறுதி செய்யப்படாதத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை தொடரும் - வானிலை ஆய்வு மையம்

சென்னையில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது... மேலும் பார்க்க

நாட்டுக்கு தேவை என்பதால் கூட்டணி; தவறுசெய்தால்தான் மன்னிப்பு கேட்பேன்: கமல்ஹாசன்

தவறுசெய்தால்தான் மன்னிப்பு கேட்பேன் என்று கன்னட மொழி விவகாரம் குறித்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கூறியுள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னை அண்ண... மேலும் பார்க்க

என் அம்மா மீது சிறு துரும்பும் பட விடமாட்டேன்: அன்புமணி

என் அம்மா மீது சிறு துரும்பும் பட விடமாட்டேன் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.பாமக கட்சிக்குள் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகனும் கட்சியின் தலைவருமான அன்புமணி... மேலும் பார்க்க

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு மேற்கொண்டுள்ளார். வருகிற ஜூன் 19 ஆம் தேதி நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலையொட்டி திமுக சார... மேலும் பார்க்க

திலகபாமாதான் பொருளாளர்: ராமதாஸுக்கு அன்புமணி பதில் அறிக்கை!

பாமக பொருளாளர் பதவியில் இருந்து திலகபாமாவை நீக்கி பாமக நிறுவனர் ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். அவருக்குப் பதிலாக திருப்பூரைச் சேர்ந்த சையத் மன்சூர் என்பவரை பாமகவின் புதிய பொருளாளராக நியமித்துள்ளார். பாமக ... மேலும் பார்க்க

பாமக யாருடைய தனிப்பட்ட சொத்தும் இல்லை: அன்புமணி ராமதாஸ்

சென்னை: நீங்கள்தான் பட்டாளி மக்கள் கட்சி, பொதுக்குழுவில் நீங்கள்தான் என்னைத் தலைவராக தேர்வு செய்தீர்கள். பாமக யாருடைய தனிப்பட்ட சொத்தும் இல்லை என்று தொண்டர்கள் மத்தியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ப... மேலும் பார்க்க