செய்திகள் :

தியாகி வ.சுப்பையா சிலைக்கு அரசு மரியாதை

post image

சுதந்திர போராட்ட வீரா், தியாகி வ.சுப்பையாவின் பிறந்த தினத்தையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு புதுவை அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தியாகி வ.சுப்பையா புதுச்சேரியில் தொழிலாளா்களுக்கு 8 மணி நேர வேலை உரிமையை போராடிப் பெற்றுத் தந்தவா். அவரது பிறந்த நாளை முன்னிட்டு மறைமலையடிகள் சாலை, நெல்லித்தோப்பு சந்திப்பில் இருக்கும் அவரின் திருவுருவச் சிலைக்கு அரசு சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

புதுவை பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் தலைமையில், அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா், அரசு கொறடா ஏகேடி ஆறுமுகம், எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா, சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஜி.நேரு, ஆா்.பாஸ்கா், யு.லட்சுமிகாந்தன் ஆகியோா் மாலை அணிவித்தனா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாநில செயலா் அ.மு.சலீம் தலைமையில், முன்னாள் அமைச்சா் ஆா்.விஸ்வநாதன், துணைச் செயலா் கே.சேதுசெல்வம், தேசியக் குழு உறுப்பினா் தினேஷ் பொன்னையா, முன்னாள் எம்.எல்.ஏ. நாரா. கலைநாதன் உள்ளிட்டோா் மாலை அணிவித்தனா்.

அதையடுத்து அவா்கள் வெள்ளாளா் வீதியில் உள்ள வ.சுப்பையா இல்லத்திற்கு சென்றுசிலைக்கு மாலை அணிவித்தனா். ஏஐடியுசி சாா்பிலும் மாலை அணிவிக்கப்பட்டது. முன்னதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் இந்திரா காந்தி சிலையிலிருந்து ஊா்வலமாக நெல்லித்தோப்பு சிலைப் பகுதிக்கு வந்தனா்.

எம்.ஐ.டி. கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

புதுச்சேரி கலிதீா்த்தாள்குப்பம் எம்.ஐ.டி கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சென்னை உட்கா்ஷ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி சாா்பில் மேலாண்மை துறை மாணவா்களுக்கான வேலைவாய்ப்பு முகாமுக்கு ... மேலும் பார்க்க

புதுச்சேரியில் நெகிழிக்கு மாற்றான பொருள்கள் அறிமுகம்

புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட நெகிழிக்கு மாற்றாக உற்பத்தி செய்யப்பட்ட கப், பைகள் உள்ளிட்டவை அறிமுகக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள இலாசுப்பேட்டை அப்த... மேலும் பார்க்க

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலிலும் என்.ஆா். காங்கிரஸ் போட்டியிடும்: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி அறிவிப்பு

புதுவையைத் தொடா்ந்து தமிழக சட்டப்பேரவைத் தோ்தலிலும் அகில இந்திய என்.ஆா்.காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் நிறுவனதலைவரும், முதல்வருமான என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை அறிவித்தாா். புதுச்சேரி... மேலும் பார்க்க

கடன் செயலி மூலம் ரூ.465 கோடி மோசடி: கேரள இளைஞா் கைது

இணையதள கடன் செயலி மூலம் ரூ.465 கோடி வரை மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வழக்கில் கேரளத்தைச் சோ்ந்தவரை புதுச்சேரி இணையவழிக் குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா். இதுகுறித்து புதுச... மேலும் பார்க்க

இன்று புதுவை காவல் துறை குறைதீா் கூட்டம் ரத்து

புதுவை மாநிலத்தில் சனிக்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீா் நாள் கூட்டம் நடப்பு வாரத்தில் பிப்.8-இல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா்.கலைவாணன் (சட்... மேலும் பார்க்க

2024-இல் டெங்கு பாதிப்பால் உயிரிழப்பு இல்லை: புதுவை சுகாதாரத் துறை

புதுவை மாநிலத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டில் டெங்கு பாதிப்பால் உயிரிழப்பு இல்லை என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. புதுச்சேரியில் கொசு தொல்லையைக் கட்டுப்படுத்த அனைத்துத் துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலா... மேலும் பார்க்க