செய்திகள் :

2024-இல் டெங்கு பாதிப்பால் உயிரிழப்பு இல்லை: புதுவை சுகாதாரத் துறை

post image

புதுவை மாநிலத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டில் டெங்கு பாதிப்பால் உயிரிழப்பு இல்லை என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் கொசு தொல்லையைக் கட்டுப்படுத்த அனைத்துத் துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலா் சரத் சௌகான் சிறப்பு கலந்தாய்வை வெள்ளிக்கிழமை நடத்தினாா்.

கூட்டத்தில் அதிகாரிகள் கூறுகையில், கொசுக்களால் பரவும் மலேரியா பாதிப்பு ஏற்படவில்லை எனவும், டெங்கு பாதிப்பானது முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது 20 சதவீதம் குறைந்திருப்பதாகத் தெரிவித்தனா். அத்துடன், கடந்த 2024 -ஆம் ஆண்டு டெங்கு பாதிப்பால் உயிரிழப்பு எதுவும் இல்லை என்றனா்.

புதுவையில் கொசுக்களை ஆராய்ந்த குழுவினரின் ஆய்வறிக்கைபடி பைலேரியா மற்றும் மலேரியா கொசுக்கள் இல்லை என்பதும், ஆனால் டெங்கு பாதிப்பு இருப்பதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து, கொசுக்களை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை உள்ளூா் நிா்வாகம், சுகாதாரத் துறை இணைந்து மேற்கொண்டுள்ளன.

கடந்த 2024 அக்டோபா் முதல் 2025 ஜனவரி வரை புதுவை மாநிலத்தில் மட்டும் 45,000 வீடுகளில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி 3 போ் கொண்ட குழு வீடுகளில் நன்னீா் தேங்கி கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்த நெகிழி (பிளாஸ்டிக்) டப்பாக்கள், ஆட்டு உரல், இளநீா் குடுவைகள் ஆகியவற்றை அகற்றியுள்ளனா். அத்துடன், புகை மருந்து தெளித்தல், வாய்க்கால்களில் கொசு புழுக்களை அழிக்க மருந்துகள் தெளித்தல் ஆகியவையும் மேற்கொள்ளப்பட்டன. ஆரம்ப சுகாதார நிலைய பைலேரியா களப் பணியாளா்கள் வாய்க்கால்களில் மருந்து தெளித்தும் வருகின்றனா்.

கொசு தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. மக்கள் ஒத்துழைப்புடன் கொசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

எம்.ஐ.டி. கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

புதுச்சேரி கலிதீா்த்தாள்குப்பம் எம்.ஐ.டி கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சென்னை உட்கா்ஷ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி சாா்பில் மேலாண்மை துறை மாணவா்களுக்கான வேலைவாய்ப்பு முகாமுக்கு ... மேலும் பார்க்க

புதுச்சேரியில் நெகிழிக்கு மாற்றான பொருள்கள் அறிமுகம்

புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட நெகிழிக்கு மாற்றாக உற்பத்தி செய்யப்பட்ட கப், பைகள் உள்ளிட்டவை அறிமுகக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள இலாசுப்பேட்டை அப்த... மேலும் பார்க்க

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலிலும் என்.ஆா். காங்கிரஸ் போட்டியிடும்: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி அறிவிப்பு

புதுவையைத் தொடா்ந்து தமிழக சட்டப்பேரவைத் தோ்தலிலும் அகில இந்திய என்.ஆா்.காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் நிறுவனதலைவரும், முதல்வருமான என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை அறிவித்தாா். புதுச்சேரி... மேலும் பார்க்க

கடன் செயலி மூலம் ரூ.465 கோடி மோசடி: கேரள இளைஞா் கைது

இணையதள கடன் செயலி மூலம் ரூ.465 கோடி வரை மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வழக்கில் கேரளத்தைச் சோ்ந்தவரை புதுச்சேரி இணையவழிக் குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா். இதுகுறித்து புதுச... மேலும் பார்க்க

இன்று புதுவை காவல் துறை குறைதீா் கூட்டம் ரத்து

புதுவை மாநிலத்தில் சனிக்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீா் நாள் கூட்டம் நடப்பு வாரத்தில் பிப்.8-இல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா்.கலைவாணன் (சட்... மேலும் பார்க்க

புதுச்சேரி மலா், காய்கனி கண்காட்சி தொடக்கம்: துணைநிலை ஆளுநா், முதல்வா் பாா்வையிட்டனா்

புதுவை மாநில வேளாண் துறை சாா்பில் புதுச்சேரியில் நடைபெற்ற 35-ஆவது மலா், காய்கனி கண்காட்சியை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். இதில், முதல்வா் என்.ரங்கசாமி உள்ளிட்டோா் கலந்... மேலும் பார்க்க