செய்திகள் :

திருச்சி: அமைச்சர் கே.என்.நேரு தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

post image

தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சரும், தி.மு.க முதன்மை செயலாளருமான கே.என்.நேருவின் வீடு திருச்சி தில்லை நகரில் உள்ளது. இந்நிலையில், அவரது வீட்டிற்கு இன்று காலை வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக, அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனுக்குச் சொந்தமான இடங்களிலும் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு, தில்லை நகர், 10-வது கிராஸில் உள்ள அமைச்சர் கே.என்.நேருவின் மறைந்த சகோதரரான ராமஜெயம் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. டெல்லியில் இருந்து திருச்சி வந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது.

raid

அதேபோல், அமலாக்கத்துறை அதிகாரிகளால் சோதனை நடத்தப்பட்டு வரும் இடங்களில் பத்துக்கும் மேற்பட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதோடு, தமிழக காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், இ.டி சோதனை நடைப்பெற்று வரும் தில்லை நகரில் உள்ள அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் அவர் ஆதரவாளர்கள் குவிந்து வருகின்றனர். அமைச்சர் கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் திடீரென்று சோதனை மேற்கொண்டு வருவது, திருச்சி மாவட்ட தி.மு.க வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

”இந்த சாதியில் பொறந்தது எங்க தப்பா?”- தாழ்த்தப்பட்டோர் ஆணைய விசாரணையில் கலங்கிய பெண்; பின்னணி என்ன?

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள நடுக்காவேரி, அரசமரத் தெருவைச் சேர்ந்த அய்யாவு (55) பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்.இவரது மனைவி சாந்தி ஐந்து வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு த... மேலும் பார்க்க

கோவை சிறுமி அளித்த `பகீர்' வாக்குமூலம் - சிக்கிய ஜான் ஜெபராஜ் உறவினர்!

கோவை, காந்திபுரம் பகுதியில் உள்ள ஜெபக்கூடத்தில், ஜான் ஜெபராஜ் என்பவர் மத போதகராக இருந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். தன்னுடைய இசை நிகழ்ச்சி மூலம் அவர் கிறிஸ்தவ சமுதாயத்தில் பிரபலமானார். அ... மேலும் பார்க்க

Meerut Murder: பாம்புக் கடியில் இறந்தாரா கணவர்? மனைவி கைது; விசாரணையில் சிக்கியது எப்படி?

மீரட்டை சேர்ந்த அமித் (25) என்பவர் இரவில் உறங்கச் சென்றவர் காலையில் பாம்பு கடித்து இறந்து கிடந்தார். ஆரம்பத்தில் பாம்பு கடித்து இறந்ததாகவே போலீஸாரும் கருதினர்.மீரட் அருகில் உள்ள அக்பர்பூர் என்ற கிராமத... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: இலங்கைக்குக் கடத்த முயன்ற ரூ.8 கோடி மதிப்பிலான போதைப்பொருள்; சிக்கிய பின்னணி என்ன?

நாகப்​பட்​டினம் மாவட்டம், விழுந்தமாவடியைச் சேர்ந்​தவர் அலெக்​ஸ் ​(வயது 32). இவர், போதைப்​பொருள் கடத்​தலில் ஈடு​படு​வ​தாக மத்​திய போதைப்​பொருள் தடுப்பு நுண்ணறி​வுப் பிரி​வினருக்குத் தகவல் கிடைத்​தது.இத... மேலும் பார்க்க

கரூர்: இரண்டு போக்சோ வழக்குகள் விசாரணை; ஒரே நாளில் அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்

கரூர் மாவட்டம், ராயனூர் அருகே உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையத்தில் கடந்த 2020 -ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 14-ம் தேதி ஒரு சிறுமியை கடத்தி, பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக, கரூர் அனைத்து மகளிர் காவல் ... மேலும் பார்க்க

சிவகாசி: பள்ளி சிறுவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞர்? - போலீஸ் தீவிர விசாரணை

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பள்ளி சிறுவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞரை நகர் காவல் நிலைய போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்... மேலும் பார்க்க