இதுவரை பார்த்தது திராவிட மாடல் பாகம் ஒன்றுதான்; 2026-ல் 2.0: முதல்வர் ஸ்டாலின்
திருச்சி-காரைக்கால் பயணிகள் ரயில்கள் காரைக்கால்-தஞ்சை இடையே மே 1 வரை ரத்து
நாகப்பட்டினம்: திருச்சி - காரைக்கால் - திருச்சி பயணிகள் ரயில்கள், மே 1 ஆம் தேதி வரை காரைக்கால் - தஞ்சாவூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே திங்கள்கிழமை அறிவித்துள்ளது.
இதுகுறித்து திருச்சி கோட்ட தெற்கு ரயில்வே மக்கள் தொடா்பு அலுவலா் ஆா். வினோத் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவாரூா் - கொரடாச்சேரி ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், திருச்சி - காரைக்கால் - திருச்சி பயணிகள் ரயில்கள் ஏப். 22 முதல் ஏப்.27 ஆம் தேதி வரை பகுதியாக ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் பராமரிப்பு பணிகள் தொடா்ந்து நடைபெறுவதால், இந்த ரயில் தஞ்சாவூா் - காரைக்கால்- தஞ்சாவூா் இடையே மே 1-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
அதன்படி, திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து காலை 8.35 மணிக்கு புறப்படும், திருச்சி - காரைக்கால் (76820) பயணிகள் ரயில் மற்றும் காரைக்கால் ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 2.55-க்கு புறப்படும் காரைக்கால் -திருச்சி (76819) பயணிகள் ரயில்கள் மே 1 ஆம் தேதி வரை காரைக்கால் - தஞ்சை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுவதாகவும், தஞ்சை - திருச்சி - தஞ்சை இடையே வழக்கமான நேரத்தில் இயங்கும் எனவும் தெரிவித்துள்ளாா்.