செய்திகள் :

திருச்சுழி: 1500 ஆண்டுகள் பழைமையான சிவாலயம்; புனரமைப்பு பணியின்போது தங்கத் தகடுகள் கண்டுபிடிப்பு

post image

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே எஸ்.கல்விமடை கிராமத்தில் சுமார் 1500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீ திருநாகேஷ்வரமுடையார் சமேத திருநாகேஸ்வரி தாயார் திருக்கோயில் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயில் வேண்டிய வரம் நிறைவேறும் என்பதால் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றன. தற்போது இக்கோயிலில் உள்ள பழைய கட்டடங்கள், சிலைகள் சேதமடைந்து அடிப்படை வசதி குறைவாகக் காணப்பட்டது. இதற்காக தற்போது திருப்பணிகள் தொடங்கியுள்ளது. இதற்காக தமிழக அரசு சார்பில் ரூ.2 கோடியே 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகின்றன.

திருநாகேஷ்வரமுடையார் சமேத திருநாகேஸ்வரி

திருப்பணிக்காக சிலைகள் மற்றும் சிவலிங்கத்தினை நகர்த்தும் பணிகள் நடைபெற்றது. சிவன் சிலையை நகர்த்துவதற்காக சுமார் 10 அடி ஆழம் வரை தோண்டிய நிலையில் 4 மனித உருவம் பொறிக்கப்பட்ட தங்க தகடுகள், மற்றும் ஒரு ராஜா உருவம் பொறிக்கப்பட்ட தங்கத்தால் ஆன தகடுகள், மேலும் ஒரு சில தங்க தகடுகள் கிடைத்தது. இதையடுத்து தங்க பொருட்களை அதிகாரிகள் பாதுகாப்பாக மீட்டனர். பின்னர் நகைகள் எடை போடப்பட்டு சரிபார்க்கப்பட்ட போது சுமார் 16.600 கிராம் எடை இருந்தது தெரிய வந்தது.

பின்னர் அதிகாரிகளால் இலாகா முத்திரை வைத்து சீல் வைக்கப்பட்ட நிலையில் கோயில் திருப்பணிகள் நிறைவடைந்த பிறகு சிலைகள் பிரதிஷ்டை செய்யும்போது மீண்டும் சிவலிங்கத்தின் அடியில் வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்படும் என இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தங்க தகடுகள்

சுமார் 1500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த எஸ்.கல்விமடை திருநாகேஸ்வரமுடையார் திருநாகேஸ்வரி தாயார் கோயில் சிவலிங்கத்தின் அடியில் பழங்கால மனித உருவம் மற்றும் ராஜா உருவம் பொறிக்கப்பட்ட தங்கத் தகடுகள், கண்டு எடுக்கப்பட்டது அப்பகுதியைச் சேர்ந்த சுற்று வட்டார கிராம பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் பழைமை வாய்ந்த சிவாலயத்தில் புனரமைப்பு பணிகளுக்காகப் பணிகள் நடைபெறும் நிலையில் பகுதியில் அகழ்வாராய்ச்சி செய்தால் இன்னும் அரிய பொருட்கள், ரகசியங்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

`உற்சாக வாழ்வு பெற உடுமலை திருப்பதிக்கு வாங்க' திருவிளக்கு பூஜை ஸ்பெஷல்! அனுமதி இலவசம்

2025 அக்டோபர் -10-ம் தேதி வெள்ளிக்கிழமை உடுமலைப்பேட்டை ஶ்ரீவேங்கடேச பெருமாள் திருக்கோவிலில் மாலை 6 மணி அளவில் சக்தி விகடன் வழங்கும் திருவிளக்கு பூஜை நடைபெற இருக்கிறது. இதில் நீங்களும் கலந்து கொள்ளலாம்... மேலும் பார்க்க

தஞ்சை மாவட்டம், நாச்சியார்கோவில்: கலியுக அதிசயம் - கனம்கூடும் கல்கருடன், இன்றும் நடக்கும் அதிசயம்!

கருடசேவை உற்சவம்ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் மூர்த்தங்கள் வெறும் சிலைகள் அல்ல. அதில் அவரின் சாந்நித்தியம் நிறைந்திருக்கிறது என்பதை இறைவன் அவ்வப்போது அற்புதங்கள் மூலம் உணர்த்துவது வழக்கம். ... மேலும் பார்க்க

புரட்டாசி சனிக்கிழமை: ஈரோடு பெருமாள் மலை கோயிலில் குவிந்த பக்தர்கள்| Photo Album

ஈரோடு பெருமாள் மலை கோயில் ஈரோடு பெருமாள் மலை கோயில் ஈரோடு பெருமாள் மலை கோயில் ஈரோடு பெருமாள் மலை கோயில் ஈரோடு பெருமாள் மலை கோயில் ஈரோடு பெருமாள் மலை கோயில் ஈரோடு பெருமாள் மலை கோயில் ஈரோடு பெருமாள் மலை... மேலும் பார்க்க

தஞ்சை மாவட்டம், நந்திபுரவிண்ணகரம்: தோல் நோய் தீர நந்தியும், ஆழ்வாரும் பெருமாளை வழிபட்ட திருத்தலம்!

நந்திதேவர் சாபம் தீர்த்த தலம்ஒருமுறை, மகாவிஷ்ணுவைத் தரிசிக்க வைகுண்டத்துக்குச் சென்றார் நந்திதேவர். ஆனால், துவாரபாலகர்களான ஜயனும் விஜயனும் அவரைத் தடுக்க... அதையும் மீறி நந்திதேவர் உள்ளே செல்ல முயன்றார... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூர் டு திருப்பதி: ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை; பிரமோற்சவத்திற்குத் தயார்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்களைந்த மாலை திருப்பதியில் நடைபெற்று வரும் பிரமோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவையன்று பெருமாளுக்கு சாற்றப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு... மேலும் பார்க்க

வந்த துன்பம் நீங்கும்; வராத செல்வங்கள் வந்து சேரும்; காலபைரவ மகாபூஜையின் நன்மைகள்; சங்கல்பியுங்கள்!

14-10-2025 செவ்வாய்க்கிழமை தேய்பிறை அஷ்டமி நன்னாளில் அவல்பூந்துறை ஊரை அடுத்த ராட்டைச் சுற்றிபாளையம் ஆலயத்தில் காலபைரவ மகாபூஜை நடைபெற உள்ளது. வந்த துன்பம் நீங்கும்; வராத செல்வங்கள் வந்து சேரும்! பைரவ ப... மேலும் பார்க்க