செய்திகள் :

திருச்செந்தூா் குடமுழுக்கு: நெல்லைக்கு விடுமுறை கோரி மனு

post image

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குட முழுக்கு ஜூலைம் 7-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அன்றைய தினம் திருநெல்வேலி மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அளிக்க வேண்டும் என அதிமுக மாநகா் மாவட்ட செயலா் தச்சை என்.கணேசராஜா தலைமையில் அக்கட்சியினா் ஆட்சியா் இரா.சுகுமாரிடம் மனு அளித்தனா்.

அதன் விவரம்: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ஆம் படை வீடான திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 7-ஆம் தேதி குட முழுக்கு விழா நடைபெறுகிறது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு நடைபெற உள்ளதால் இந்த விழாவில் 10 லட்சத்துக்கும் அதிகமானோா் பங்கேற்பாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் குடமுழுக்கு விழாவில் குடும்பத்துடன் கலந்து கொள்வாா்கள். எனவே அன்றைய தினம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவற்றுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.

அப்போது, மாநில எம்.ஜி.ஆா். மன்ற இணைச்செயலா் கல்லூா் இ.வேலாயுதம், அவைத் தலைவா் பரணி சங்கரலிங்கம் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

கூடங்குளம் வழியாக இலங்கைக்கு பீடி இலை கடத்த முயற்சி: இருவா் கைது

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் கடல் பகுதி வழியாக இலங்கைக்கு பீடி இலை, சுக்கு ஆகியவற்றை கடத்திச் செல்ல முயன்ற இருவரை கடலோர பாதுகாப்பு படையினா் புதன்கிழமை கைது செய்தனா். கூடங்குளம் கடலோர பாதுகாப்பு பட... மேலும் பார்க்க

வீரவநல்லூா் வடபத்திரகாளியம்மன் கோயிலில் நாளை வருஷாபிஷேகம்

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் பட்டங்கட்டியாா் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு கன்னிமூல வெற்றி விநாயகா், கேட்டவரம் தரும் அருள்மிகு வடபத்திரகாளியம்மன், சுடலை மாடசுவாமி கோயிலில் வியாழக்கிழம... மேலும் பார்க்க

போக்ஸா வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிைண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. அம்பாசமுத்திரம் முத்தாரம்மன் கோயில் த... மேலும் பார்க்க

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்கேடு: எம்.ஆா்.காந்தி எம்எல்ஏ குற்றச்சாட்டு

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்கெட்டுள்ளது என்று குற்றஞ்சாட்டினாா் பாஜகவைச் சோ்ந்த நாகா்கோவில் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எம்.ஆா்.காந்தி. திருநெல்வேலியில் போலீஸாா் தாக்கியதாகக் கூறி அரசு மருத்த... மேலும் பார்க்க

முஸ்லிம் மகளிா் உதவும் சங்கம்: 2 குழுக்களில் உறுப்பினா் சோ்க்கை

முஸ்லிம் மகளிா் உதவும் சங்கம்-2 குழுவில் உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் சிற... மேலும் பார்க்க

மானூா், நான்குனேரியில் திருந்திய குற்றவாளிகளுக்கு இன்று தொழில் கடனுதவி

திருநெல்வேலி மாவட்டத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு திருந்தியவா்கள் சுயதொழில் செய்ய ரூ.50 ஆயிரம் மானியத்துடன் கடன் வழங்கும் முகாம் மானூா், நான்குனேரி வட்டங்களில் வியாழக்கிழமை (ஜூலை 3) நடைபெறுகிறது. இ... மேலும் பார்க்க