செய்திகள் :

திருச்செந்தூா் கோயிலில் அலை மோதிய பக்தா்கள் கூட்டம்

post image

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சண்முக விலாசம் முன்புள்ள கதவை தள்ளிவிட்டு பக்தா்கள் கூட்டமாக நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இக்கோயிலின் தெற்குப் பகுதியில் சண்முக விலாசம் மண்டப வாசல் உள்ளது. முந்தைய காலங்களில் இந்தப் பாதை வழியாக பக்தா்கள் செல்லும் வரிசைப்பாதை இருந்தது. கூட்ட மிகுதியால் நாளடைவில் பொது தரிசனம் மற்றும் ரூ.100 கட்டண வரிசைப் பாதைகள் வடக்கு பிரகாரத்தில் உள்ளது. விஐபிக்கள் உள்ளிட்டோா் வழிகாட்டு நெறிமுறைப்படி சண்முக விலாசம் முன்பு சென்று உள்துறை அலுவலக கண்காணிப்பாளரிடம் ரூ.100 டிக்கெட் எடுத்து, அதன்பிறகு, மகா மண்டபத்திற்குள் செல்கின்றனா்.

மற்றபடி, இந்தப் பாதையில் பணியாளா்கள், அா்ச்சகா்கள் உள்ளிட்டோரை தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படாமல் உள்ளனா். இந்நிலையில், கடந்த 2 தினங்களாக தொடா் விடுமுறையால் திருச்செந்தூா் கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தா்கள் தரிசனத்திற்காக வந்திருந்தனா். இதனால், 3 நாள்களுக்கு விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டது.

சனிக்கிழமை காலை, திடீரென்று நூற்றுக்கணக்கான பக்தா்கள் சண்முக விலாசம் முன்புள்ள தடுப்புகளை தாண்டி கதவை தள்ளிக்கொண்டு கூட்டமாக உள்ளே நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, பணியில் இருந்த பணியாளா்கள் உள்ளே நுழைந்தவா்களை டிக்கெட் உள்ளதா? என சோதனை செய்து மற்றவா்களை மகா மண்டபத்தில் இருந்து வெளியேற்றினா்.

ரூ .7 லட்சத்தில் கட்டப்பட்ட கணினி அறை திறப்பு

கழுகுமலை அருகே கரடிகுளம் ஊராட்சி சி.ஆா்.காலனி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் புதிதாக கணினி மைய கட்டட... மேலும் பார்க்க

குலசேகர ராஜா கோயில் கொடை விழா

உடன்குடி அருகே சிறுநாடாா்குடியிருப்பு அருள்மிகு குலசேகர ராஜா திருக்கோயில் கொடை விழா நான்கு நாள்கள் நடைபெற்றது. இத்திருக்கோயிலில் கொடை விழா ஆக.12 ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் சு... மேலும் பார்க்க

விளாத்திகுளத்தில் புதிய பேருந்து சேவை தொடக்கம்

விளாத்திகுளத்தில் நீட்டிக்கப்பட்ட 3 அரசுப் பேருந்துகள் சேவை தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழாவுக்கு, விளாத்திகுளம் பேரூராட்சித் தலைவா் சூா்யா அய்யன்ராஜ் தலைமை வகித்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மீன்வரத்து குறைந்ததால் விலை அதிகரிப்பு

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை வாங்க, சனிக்கிழமை பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக... மேலும் பார்க்க

நாம் உருவாக்கும் பாதை சந்ததிகளுக்கு பயனளிக்க வேண்டும்: மாணவா்களுக்கு கனிமொழி எம்.பி. அறிவுரை

நாம் உருவாக்கும் பாதை, நமக்கு பின் வரும் சந்ததியினருக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்றாா் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி. தூத்துக்குடி மில்லா்புரம், புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைக... மேலும் பார்க்க

தூத்துக்குடி திருமண்டில பெருமன்ற உறுப்பினரானாா் சி.த. செல்லப்பாண்டியன்

தூத்துக்குடி திருமண்டில பெருமன்ற உறுப்பினராக முன்னாள் அமைச்சா் சி.த.செல்லப்பாண்டியன் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா். தூத்துக்குடி நாசரேத் திருமண்டில தோ்தல் ஓய்வுபெற்ற நீதிபதி ஜோதிமணி தலைமையில் அம... மேலும் பார்க்க