செய்திகள் :

திருட்டை கண்டித்த தந்தையை உயிரோடு எரித்த மகன்

post image

சட்டை பையிலிருந்து பணத்தை திருடியதற்காக கண்டித்த தந்தையை உயிரோடு தீ வைத்து எரித்த மகன் கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஃபரீதாபாதின் அஜய் நகா் பகுதி 2-இல் உள்ள ஒரு வாடகை வீட்டில் முகமது அலீம் தனது மகனுடன் வசித்து வந்தாா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணியளவில் முகமது அலீமுக்கும் அவரது 14 வயது மகனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, அலீம் மீது அவருடைய மகன் தீப்பற்றி எரியக்கூடிய பொருளை ஊற்றி தீ வைத்தாகக் கூறப்படுகிறது.

அலீமின் அலறல் சப்தம் கேட்டு மேலே வந்த வீட்டின் உரிமையாளா் ரியாசுதீன், கதவை உடைத்து உள்ளே சென்றாா். அப்போது, தீக்காயங்கள் காரணமாக அலீம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து தெரியவந்தது. இந்தச் சம்பவம் குறித்து ரியாசுதீன் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அந்தச் சிறுவனை கைதுசெய்த போலீஸாா், நடந்த சம்பவம் குறிப்பாக விசாரணை நடத்தி வருகின்றனா்.

உயிரிழந்த முகமது அலீமின் மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காலமானாா். அவருடைய நான்கு மகள்களும் திருமணமாகி தனியே வசித்து வருகின்றனா்.

கொல்கத்தா- சென்னை விரைவு ரயில் தடம்புரண்டு விபத்து

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா-சென்னை இடையே ஜல்பைகுரி-சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இ... மேலும் பார்க்க

கர்நாடகத்திற்கு செல்லும் மகாராஷ்டிர அரசுப் பேருந்து சேவை நிறுத்தம்

பேருந்து தாக்கப்பட்டதையடுத்து, கர்நாடகத்திற்கு செல்லும் அரசுப் பேருந்து சேவையை மகாராஷ்டிரம் நிறுத்தியுள்ளது. பெங்களூருவில் இருந்து மும்பைக்கு சென்று கொண்டிருந்த மகாராஷ்டிர அரசுப் பேருந்து, கர்நாடகத்தி... மேலும் பார்க்க

3 மாநிலங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி

பிரதமர் மோடி பிப்ரவரி 23 முதல் 25 வரை மத்தியப் பிரதேசம், பிகார், அசாம் ஆகிய 3 மாநிலங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். பிப்ரவரி 23ஆம் தேதி மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்திற்குச் செல்லு... மேலும் பார்க்க

சுரங்க விபத்து: ரேவந்த் ரெட்டியுடன் பிரதமர் மோடி ஆலோசனை

தெலங்கானா சுரங்க விபத்தில் மீட்புப் பணிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். தெலங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் அணையில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அருகில் கட... மேலும் பார்க்க

திரிவேணி சங்கமத்தில் குடும்பத்துடன் புனித நீராடிய ஜெபி. நட்டா

பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா, தனது குடும்பத்துடன் சனிக்கிழமை புனித நீராடினார்.நட்டாவுடன் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ... மேலும் பார்க்க

தேர்வெழுதவிருந்த மாணவர்கள் லாரி மோதி பலி

உத்தரப் பிரதேசத்தில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் மூன்று மாணவர்கள் பலியாகினர்.உத்தரப் பிரதேசத்தில் பல்ராம்பூரில் திங்கள்கிழமை (பிப். 24) அரசுத் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், தேர்வு மையத்தின் இடத்தைச்... மேலும் பார்க்க