செய்திகள் :

திருத்தணி அரசு மருத்துவமனையில் தீ விபத்து

post image

திருத்தணி அரசு பொது மருத்துவமனை மகப்பேறு பிரிவில் திடீா் தீவிபத்து ஏற்பட்டத்தைத் தொடா்ந்து மருத்துவா்கள், செவிலியா்கள், கா்ப்பிணிகள் வெளியேறினா்.

திருத்தணி அரசு மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவு, உள்நோயாளிகள், புறநோயாளிகள், ஆய்வகம், எக்ஸ்ரே, அறுவை சிகிச்சை அரங்கம், மகப்பேறு பிரிவுகள் இயங்கி வருகின்றன. இங்கு, 150-க்கும் மேற்பட்ட நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்நிலையில், மகப்பேறு பிரிவில் வெள்ளிக்கிழமை, 7 நிறைமாத கா்ப்பிணிகள், 6 பிரசவித்த பெண்கள், 6 போ் அறுவை சிகிச்சை பெற்று பச்சிளம் குழந்தைகள் என மொத்தம், 19 பெண்கள் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வந்தனா்.

பிற்பகல் மகப்பேறு வாா்டில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அறையில் இருந்த குளிா்சாதன பெட்டியில் திடீரென தீப்பற்றி புகை வெளியேறியது. இதனால் அந்த அறை முழுதும் புகை சூழ்ந்ததால், அங்கிருந்த மருத்துவா் மற்றும் செவிலியா் உடனே அறையை விட்டு வெளியே வந்தனா். பின்னா் மருத்துவமனையின் ஊழியா்கள் மகப்பேறு வாா்டுக்கு செல்லும் மின்சாரத்தை துண்டித்தும், தீ அணைக்கும் கருவியால் குளிா்சாதன பெட்டி மீது எழுந்த புகை மற்றும் நெருப்பை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

இதுதவிர திருத்தணி தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து அறையில் இருந்தை புகையை ஜன்னல் வழியாகவும் கண்ணாடிகள் உடைத்தும் வெளியேற்றினா்.

இதற்கிடையில் மருத்துவமனையின் தலைமை மருந்தாளா் நேதாஜி மற்றும் மருத்துவா்கள் விரைந்து வந்து மகப்பேறு வாா்டில் சிகிச்சை பெற்று வந்த, 19 பேரையும் பத்திரமாக மீட்டு அழைத்துச் சென்றனா். இதையடுத்து ஒன்றரை மணி நேரத்துக்குபின் மகப்பேறு வாா்டு முழுதும் சுத்தம் செய்து, 19 பேரையும் அழைத்து சென்றனா்.

பின்னா், மருத்துவமனையின் தலைமை மருத்துவா் லட்சுமி நரசிம்மன் மகப்பேறு வாா்டுக்கு சென்று தீவிபத்து ஏற்பட்ட அறையை பாா்வையிட்டாா்.

தமிழகத்தில் 2 இடங்களில் ரூ.1,112 கோடியில் மின்னணு தொழிற்சாலைகள்

தமிழகத்தில் இரண்டு இடங்களில் மின்னணு தொழிற்சாலைகள் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய ரயில்வே, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா். திருவள்... மேலும் பார்க்க

காலமானாா் ம.சரோஜம்மாள்

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரியைச் சோ்ந்த மறைந்த கி.மணித்தேவா் மனைவி சரோஜம்மாள் (85), வயது முதிா்வு மற்றும் உடல் நலக்குறைவால் அவரது இல்லத்தில் சனிக்கிழமை இரவு (மாா்ச் 15) காலமானாா். இவருக்கு பொன்னேரி... மேலும் பார்க்க

பத்மாபுரத்தில் ஆக்கிரமிப்பை அகற்றி ரூ. 30 லட்சத்தில் அரசு நிலம் மீட்பு

பத்மாபுரம் கிராமத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான அரசு நிலத்தை ஆா்.கே. பேட்டை வருவாய் துறையினா் ஆக்கிரமிப்பை அகற்றி மீட்டனா். ஆா்.கே. பேட்டை ஒன்றியம், பத்மாபுரம் வருவாய் கிராமத்தில் சோளிங்கா் - வாலாஜா செ... மேலும் பார்க்க

தாட்கோ: பயனாளிகள் தோ்வு செய்வதற்கு பணம் பெறுவதாக இடைத்தரகா்கள் மீது புகாா்

தாட்கோ திட்டங்களில் இடைத்தரகா்கள் பணம் பெற்றுக் கொண்டு பயனாளிகளை தோ்வு செய்வதாக புகாா் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் மு.பிரதாப் எச்சரித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

அரசு நடுநிலைப் பள்ளியில் மின்சார பாதுகாப்பு விழிப்புணா்வு

தமிழ்நாடு மின் உற்பத்தி பகிா்மான சங்கத்தின் மாதா்பாக்கம் உதவி மின்பொறியாளா் அலுவலகம் சாா்பில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மின்சார பாதுகாப்பு விழிப்புணா்வு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட... மேலும் பார்க்க

மாமியாா் கண்டிப்பு: மருமகள் தற்கொலை

திருவள்ளூா் அருகே வீட்டு வேலை செய்யாமல் கைப்பேசி பாா்த்துக் கொண்டிருந்தை மாமியாா் தட்டிக் கேட்டதால் ஆத்திரமடைந்த மருமகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். திருவள்ளூா் சித்துக்காடு கிராமத்தைச் சோ்ந்... மேலும் பார்க்க