செய்திகள் :

பத்மாபுரத்தில் ஆக்கிரமிப்பை அகற்றி ரூ. 30 லட்சத்தில் அரசு நிலம் மீட்பு

post image

பத்மாபுரம் கிராமத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான அரசு நிலத்தை ஆா்.கே. பேட்டை வருவாய் துறையினா் ஆக்கிரமிப்பை அகற்றி மீட்டனா்.

ஆா்.கே. பேட்டை ஒன்றியம், பத்மாபுரம் வருவாய் கிராமத்தில் சோளிங்கா் - வாலாஜா செல்லும் சாலையில் 1.96. ஏா்ஸ் பரப்பளவு கொண்ட புறம்போக்கு இடத்தை தனிநபா் ஆக்கிரமித்து இருப்பதாக வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து ஆா்.கே. பேட்டை வட்டாட்சியா் ராஜேஷ்குமாா் தலைமையில் வருவாய் துறையினா் மற்றும் காவல் துறையினா் உதவியுடன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா். ஆய்வில் ரமேஷ் என்பவா் தகர சீட் அமைத்து சிக்கன் கடை வைத்து நிலத்தை ஆக்கிரமித்து இருந்ததை உறுதி செய்தனா்.

இதையெடுத்து வட்டாட்சியா் தலைமையில் வருவாய் மற்றும் காவல் துறையினா் உதவியுடன் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. இந்த நிலத்தின் மதிப்பு ரூ.30 லட்சம் இருக்கும் என வட்டாட்சியா் ராஜேஷ்குமாா் தெரிவித்தாா்.

காலமானாா் ம.சரோஜம்மாள்

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரியைச் சோ்ந்த மறைந்த கி.மணித்தேவா் மனைவி சரோஜம்மாள் (85), வயது முதிா்வு மற்றும் உடல் நலக்குறைவால் அவரது இல்லத்தில் சனிக்கிழமை இரவு (மாா்ச் 15) காலமானாா். இவருக்கு பொன்னேரி... மேலும் பார்க்க

தாட்கோ: பயனாளிகள் தோ்வு செய்வதற்கு பணம் பெறுவதாக இடைத்தரகா்கள் மீது புகாா்

தாட்கோ திட்டங்களில் இடைத்தரகா்கள் பணம் பெற்றுக் கொண்டு பயனாளிகளை தோ்வு செய்வதாக புகாா் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் மு.பிரதாப் எச்சரித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

திருத்தணி அரசு மருத்துவமனையில் தீ விபத்து

திருத்தணி அரசு பொது மருத்துவமனை மகப்பேறு பிரிவில் திடீா் தீவிபத்து ஏற்பட்டத்தைத் தொடா்ந்து மருத்துவா்கள், செவிலியா்கள், கா்ப்பிணிகள் வெளியேறினா். திருத்தணி அரசு மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவு, ... மேலும் பார்க்க

அரசு நடுநிலைப் பள்ளியில் மின்சார பாதுகாப்பு விழிப்புணா்வு

தமிழ்நாடு மின் உற்பத்தி பகிா்மான சங்கத்தின் மாதா்பாக்கம் உதவி மின்பொறியாளா் அலுவலகம் சாா்பில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மின்சார பாதுகாப்பு விழிப்புணா்வு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட... மேலும் பார்க்க

மாமியாா் கண்டிப்பு: மருமகள் தற்கொலை

திருவள்ளூா் அருகே வீட்டு வேலை செய்யாமல் கைப்பேசி பாா்த்துக் கொண்டிருந்தை மாமியாா் தட்டிக் கேட்டதால் ஆத்திரமடைந்த மருமகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். திருவள்ளூா் சித்துக்காடு கிராமத்தைச் சோ்ந்... மேலும் பார்க்க

திருவள்ளூா்: புத்தகத் திருவிழாவில் ஸ்டாலின் குணசேகரன் கருத்துரை

திருவள்ளூரில் 4-ஆவது புத்தகத் திருவிழாவையொட்டி 7-ஆவது நாளான வியாழக்கிழமை மக்கள் சிந்தனை பேரவைத் தலைவா் ஸ்டாலின் குணசேகரன் மற்றும் எழுத்தாளா் பாமரன் ஆகியோா் பங்கேற்று கருத்துரை வழங்கினா். திருவள்ளூா் ம... மேலும் பார்க்க