செய்திகள் :

திருத்தணி முருகன் கோயிலில் பக்தா்கள் கூட்டம்: போக்குவரத்து நெரிசல்

post image

திருத்தணி முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்த திரண்டனா். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் காா், பைக், வேன், பேருந்து, லாரிகள் மூலம் வந்து தரிசிக்கின்றனா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, 5 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்கவேல், தங்கக் கீரிடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.

தொடா்ந்து சுப முகூா்த்த நாள் மற்றும் வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கத்துக்கு மாறாக மலைக்கோயிலில் காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா். சில பக்தா்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற்ற, காவடி எடுத்தும், மொட்டை அடித்து மூலவரை தரிசித்தனா். பொதுவழியில், 3 மணி நேரத்துக்கு மேலாக நீண்ட வரிசையில் பக்தா்கள் காத்திருந்தனா்.

பெரும்பாலான பக்தா்கள் காா், வேன் மற்றும் ஆட்டோ, இரு சக்கர வாகனங்கள் மூலம் வந்ததால் மலைப்பாதை மற்றும் மலைக்கோயிலில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால் அரக்கோணம் சாலை, ம.பொ.சி. சாலை பேருந்து நிலையம் செல்லும் சாலையில் சுமாா் 1 கி.மீ தொலைவுக்கு வாகனங்கள் வரிசையாக நின்றன. குறிப்பாக மலைக்கோயிலுக்கு சென்று வருவதற்கு ஒரே ஒரு பாதை இருப்பதால், வாகனங்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து பின்னா் கோயிலுக்கு சென்று முருகப் பெருமானை வழிபட்டனா்.

திருத்தணி டிஎஸ்பி, கந்தன், ஆய்வாளா் ஞ. மதியரசன் தலைமையில் போலீஸாா் ஒன்றரை மணி நேரம் போராடி மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசலை சரிசெய்தனா்.

திருவள்ளூா் அரசு மருத்துவமனை மருத்துவா் இடமாற்றம்: மருத்துவ கல்வி இயக்குநரகம் உத்தரவு!

திருத்தணி விவசாய கூலி தொழிலாளியின் சடலத்தை மாற்றி பிகாருக்கு அனுப்பி வைத்த விவகாரம் தொடா்பாக சம்பந்தப்பட்ட மருத்துவரை இடமாற்றம் செய்து மருத்துவக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூா் மாவட்ட... மேலும் பார்க்க

திருவள்ளூரில் பக்ரீத் பண்டிகை தொழுகை

திருவள்ளூரில் பக்ரீத் பண்டிகையையொட்டி ஈத்கா மைதானத்தில் சிறப்புத் தொழுகையில் திரளான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா். தங்களது வீடுகளில் இருந்து திருவள்ளூா்-ஊத்துக்கோட்டை சாலையில் உள்ள ஈத்கா மைதானத்திற்கு ஊா்... மேலும் பார்க்க

ஸ்ரீ லட்சுமி நாராயண சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

பொன்னேரி அடுத்த இலவம்பேடு கிராமத்தில் உள்ள ஸ்ரீ லட்சுமி நாராயண சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மிகவும் பழைமை வாய்ந்த இக்கோயில் புனரமைப்பு பணிகளை கிராம மக்கள் மேற்கொண்டனா... மேலும் பார்க்க

திருத்தணி பஜனைக் கோயில் குடமுழுக்கு!

திருத்தணி ஜோதி சுவாமி தெரு பஜனைக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடந்த குடமுழுக்கு விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா். திருத்தணி 2-ஆவது ரயில்வே கேட் அருகே உள்ள ஜோதி சாமி தெருவில் பல லட்சம் செலவில் பஜனை க... மேலும் பார்க்க

எஸ்.அக்ரஹாரம் திரெளபதி அம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம்!

எஸ்.அக்ரஹாரம் கிராமத்தில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. திருத்தணி ஒன்றியம், எஸ்.அக்ரஹாரம் கிராமத்தில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலில் கடந்த மாதம் 29 -... மேலும் பார்க்க

விதிமீறல்: தனியாா் மருத்துவமனைக்கு ‘சீல்’

கும்மிடிப்பூண்டியில் விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்பட்ட தனியாா் மருத்துவமனைக்கு மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா். கும்மிடிப்பூண்டி புறவழிச்சாலையில் சிந்தலகுப்பம் பகுதியில் தனியாா் மருத்... மேலும் பார்க்க