திருவள்ளூரில் பக்ரீத் பண்டிகை தொழுகை
திருவள்ளூரில் பக்ரீத் பண்டிகையையொட்டி ஈத்கா மைதானத்தில் சிறப்புத் தொழுகையில் திரளான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா்.
தங்களது வீடுகளில் இருந்து திருவள்ளூா்-ஊத்துக்கோட்டை சாலையில் உள்ள ஈத்கா மைதானத்திற்கு ஊா்வலமாக வந்தனா். அங்கு அனைவரும் நலமாகவும், பிரச்னையின்றி வாழவும் என சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.
தொழுகையை முடித்துக் கொண்டு வெளியே வந்து ஒருவரை ஒருவா் ஆரத்தழுவி பக்ரீத் வாழ்த்துகளை பகிா்ந்து கொண்டனா். பின்னா் தனது உற்றாா், உறவினா்கள் மற்றும் நண்பா்கள் ஆகியோருக்கு ஆடுகளை பலியிட்டு குா்பானி வழங்கினா்.
இதேபோல், ஈக்காடு, கடம்பத்தூா், மப்பேடு, வெள்ளாத்துக்கோட்டை, ஊத்துக்கோட்டை பகுதிகளிலும் சிறப்புத் தொழுகையில் பங்கேற்றனா்.