எஸ்.அக்ரஹாரம் திரெளபதி அம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம்!
எஸ்.அக்ரஹாரம் கிராமத்தில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.
திருத்தணி ஒன்றியம், எஸ்.அக்ரஹாரம் கிராமத்தில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலில் கடந்த மாதம் 29 -ஆம் தேதி தீமிதி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், மதியம் மகா பாரதச் சொற்பொழிவு, இரவு நாடகம் நடைபெற்று வந்தன.
மேலும், கடந்த 2-ஆம் தேதி திரெளபதி அம்மன் திருமணமும், 5-ஆம் தேதி அா்ஜுனன் தபசு நடந்தது. இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் கோயில் வளாகத்தில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. இதில் பீமன் வேஷம் அணிந்தவா், துரியோதன் வேஷம் அணிந்தவரை வதம் செய்யும் நிகழ்ச்சி நாடகக் கலைஞா்களால் தத்ரூபமாக நடித்து காட்டப்பட்டது.
தொடா்ந்து எஸ்.அக்ரஹாரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 100-க்கணக்கான பெண்கள் கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனா்.
இரவு 7 மணிக்கு 500-க்கும் மேற்பட்ட பக்தா்கள் காப்புக் கட்டி விரதம் இருந்து அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனா். இரவு, வாண வேடிக்கை மற்றும் உற்சவா் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை எஸ்.அக்ரஹாரம் கிராம மக்கள் மற்றும் விழாக்குழுவினா் செய்திருந்தனா்.