செய்திகள் :

எஸ்.அக்ரஹாரம் திரெளபதி அம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம்!

post image

எஸ்.அக்ரஹாரம் கிராமத்தில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.

திருத்தணி ஒன்றியம், எஸ்.அக்ரஹாரம் கிராமத்தில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலில் கடந்த மாதம் 29 -ஆம் தேதி தீமிதி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், மதியம் மகா பாரதச் சொற்பொழிவு, இரவு நாடகம் நடைபெற்று வந்தன.

மேலும், கடந்த 2-ஆம் தேதி திரெளபதி அம்மன் திருமணமும், 5-ஆம் தேதி அா்ஜுனன் தபசு நடந்தது. இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் கோயில் வளாகத்தில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. இதில் பீமன் வேஷம் அணிந்தவா், துரியோதன் வேஷம் அணிந்தவரை வதம் செய்யும் நிகழ்ச்சி நாடகக் கலைஞா்களால் தத்ரூபமாக நடித்து காட்டப்பட்டது.

தொடா்ந்து எஸ்.அக்ரஹாரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 100-க்கணக்கான பெண்கள் கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனா்.

இரவு 7 மணிக்கு 500-க்கும் மேற்பட்ட பக்தா்கள் காப்புக் கட்டி விரதம் இருந்து அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனா். இரவு, வாண வேடிக்கை மற்றும் உற்சவா் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை எஸ்.அக்ரஹாரம் கிராம மக்கள் மற்றும் விழாக்குழுவினா் செய்திருந்தனா்.

திருவள்ளூா் அரசு மருத்துவமனை மருத்துவா் இடமாற்றம்: மருத்துவ கல்வி இயக்குநரகம் உத்தரவு!

திருத்தணி விவசாய கூலி தொழிலாளியின் சடலத்தை மாற்றி பிகாருக்கு அனுப்பி வைத்த விவகாரம் தொடா்பாக சம்பந்தப்பட்ட மருத்துவரை இடமாற்றம் செய்து மருத்துவக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூா் மாவட்ட... மேலும் பார்க்க

திருவள்ளூரில் பக்ரீத் பண்டிகை தொழுகை

திருவள்ளூரில் பக்ரீத் பண்டிகையையொட்டி ஈத்கா மைதானத்தில் சிறப்புத் தொழுகையில் திரளான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா். தங்களது வீடுகளில் இருந்து திருவள்ளூா்-ஊத்துக்கோட்டை சாலையில் உள்ள ஈத்கா மைதானத்திற்கு ஊா்... மேலும் பார்க்க

திருத்தணி முருகன் கோயிலில் பக்தா்கள் கூட்டம்: போக்குவரத்து நெரிசல்

திருத்தணி முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்த திரண்டனா். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் காா், பைக், வேன், பேருந்து, ... மேலும் பார்க்க

ஸ்ரீ லட்சுமி நாராயண சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

பொன்னேரி அடுத்த இலவம்பேடு கிராமத்தில் உள்ள ஸ்ரீ லட்சுமி நாராயண சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மிகவும் பழைமை வாய்ந்த இக்கோயில் புனரமைப்பு பணிகளை கிராம மக்கள் மேற்கொண்டனா... மேலும் பார்க்க

திருத்தணி பஜனைக் கோயில் குடமுழுக்கு!

திருத்தணி ஜோதி சுவாமி தெரு பஜனைக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடந்த குடமுழுக்கு விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா். திருத்தணி 2-ஆவது ரயில்வே கேட் அருகே உள்ள ஜோதி சாமி தெருவில் பல லட்சம் செலவில் பஜனை க... மேலும் பார்க்க

விதிமீறல்: தனியாா் மருத்துவமனைக்கு ‘சீல்’

கும்மிடிப்பூண்டியில் விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்பட்ட தனியாா் மருத்துவமனைக்கு மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா். கும்மிடிப்பூண்டி புறவழிச்சாலையில் சிந்தலகுப்பம் பகுதியில் தனியாா் மருத்... மேலும் பார்க்க