செய்திகள் :

திருத்த வேண்டியது கீழடி அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை..! - முதல்வர் பதிவு

post image

திருத்த வேண்டியது கீழடி அறிக்கைகளை அல்ல, சில உள்ளங்களைத்தான் என கீழடி அறிக்கையை ஏற்க மறுக்கும் மத்திய அரசுக்கு எதிராக முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

தமிழின் தொன்மையான கீழடி அகழாய்வு முடிவுகளை தமிழக அரசு வெளியிட்டுள்ள நிலையில், மத்திய அரசு அந்த அறிக்கையை ஏற்க மறுத்து கூடுதல் விவரங்களை கேட்டு திருத்த அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக திமுக மாணவரணி சார்பில் நாளை (புதன்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.

கீழடி அகழாய்வு முடிவுகளை வெளியிட மறுக்கும் மத்திய பாஜக அரசின் தமிழர் விரோத போக்கை கண்டித்து திமுக மாணவரணி சார்பில் நாளை காலை 10 மணி அளவில் மதுரை வீரகனூர் சுற்றுச்சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,

"எத்தனை எத்தனை தடைகள் நம் தமிழினத்துக்கு? அத்தனையையும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக எதிர்த்துப் போராடி, அறிவியல் துணைக்கொண்டு நம் இனத்தின் தொன்மையை நிறுவி வருகிறோம்!

இருந்தும் ஏற்க மறுக்கின்றன சில மனங்கள். திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை! நாளை மதுரை வீரகனூரில் திமுக மாணவரணி நடத்தவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாகக் கூடி மத்திய அரசுக்கு நமது தமிழ்நாட்டின் உணர்வை வெளிப்படுத்துவோம்! அவர்களைத் திருத்துவோம்!" என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க | கைதுக்கு எதிராக ஏடிஜிபி ஜெயராம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

விமான நிலையம் அருகே பலூன், லேசர் பயன்படுத்தத் தடை

சென்னை விமான நிலையம் அருகே பலூன்கள் மற்றும் லேசர் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை விமான நிலைய நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விமானம் தரையிறங்கும்போது கீழே இருந்து லேசர்... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு 10 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்... மேலும் பார்க்க

20 மணி நேரம்! ஏடிஜிபி ஜெயராமிடம் விசாரணை நிறைவு!

சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராமிடம் திருவாலங்காடு காவல் நிலையத்தில் வைத்து சுமார் 20 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. திருவள்ளூா் மாவட்டம் திருவாலங்காட்டில் காதல் திருமண விவகாரத்தில் திருமணம் செய... மேலும் பார்க்க

தமிழக அரசும் சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வை நடத்த வேண்டும்: விஜய்

தமிழக அரசும் சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வை நடத்த வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.இது குறித்து தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:சாதிவார... மேலும் பார்க்க

தென்காசி முதியோர் காப்பகத்தில் பலி 5 ஆக உயர்வு!

தென்காசி மாவட்டத்தில் முதியோர் காப்பகத்தில் கெட்டுப்போன இறைச்சி உணவு சாப்பிட்ட விவகாரத்தில் ஏற்கனவே 4 பேர் இறந்த நிலையில் மேலும் ஒருவர் இன்று(செவ்வாய்க்கிழமை) உயிரிழந்தார். தென்காசி மாவட்டம், சுரண்டை ... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்திற்கு இங்கெல்லாம் மழை பெய்யும்!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்துக்கு நீலகிரி, கோவை உள்பட 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.இன்று (செவ்வாய்க்கிழமை) அடுத்த 3 மணி நேரத்துக்கு அதா... மேலும் பார்க்க