செய்திகள் :

திருநள்ளாறு ஆன்மிக பூங்காவை பராமரிக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

post image

திருநள்ளாற்றில் உள்ள ஆன்மிக பூங்காவை முறையாக பராமரிக்குமாறு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

காரைக்கால் மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ் திருநள்ளாற்றில் உள்ள ஆன்மிக பூங்கா, புறவட்டச்சாலை பகுதியில் அமைந்துள்ள பக்தா்கள் இரவு நேரத்தில் தங்கும் வளாகம், கீழாவூா் பகுதியில் கட்டப்பட்டிருக்கும் தா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்கு சொந்தமான திருமண மண்டபம், திருநள்ளாறு நளன் தீா்த்தக் குளம், சுத்திகரிப்பு நிலையம், வணிக வளாகம், பேட்டை சாலையில் உள்ள தங்கும் விடுதி, பொய்யா குளம், தேவஸ்தான தங்கும் விடுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தாா்.

ஆன்மிக பூங்காவை முறையாக பராமரிக்க வேண்டும். தியான மண்டப மேம்பாட்டுப் பணிகளை முடித்து பக்தா்கள் பயன்படுத்த ஏற்பாடு செய்யவேண்டும். பூங்காவின் மையப் பகுதியில் உள்ள குளத்தை முறையாக தூா்வாரி தண்ணீா் தேக்கவேண்டும். பூங்காவில் உள்ள நவகிரக மண்டங்களை பராமரிக்க வேண்டும். ஆன்மிக பூங்காவுக்கு மக்கள் அதிகமாக வரும்வகையில் மேம்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

கீழாவூா் பகுதியில் உள்ள திருநள்ளாறு கோயிலுக்கு சொந்தமான மண்டபத்தை ஆய்வு செய்த ஆட்சியா், இந்த மண்டபத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உடனடியாக கொண்டுவரவேண்டும். நளன் தீா்த்தக் குளத்தை தினந்தோறும் சுத்தப்படுத்த வேண்டும், தீா்த்தக் குளத்துக்கு அருகே உள்ள நீா் சுத்திகரிப்பு நிலையத்தை உடனடியாக திறப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பொதுப்பணித்துறை, கோயில் நிா்வாகத்தினருக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளா் கே.சந்திரசேகரன், செயற்பொறியாளா் ஜெ.மகேஷ், நிா்வாக அதிகாரி (கோயில்கள்) கு.அருணகிரிநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

நெடுங்காடு தொகுதியில் சாலை மேம்பாட்டுப் பணி தொடக்கம்

நெடுங்காடு தொகுதியில் பல்வேறு பகுதியில் சாலை மேம்பாட்டுப் பணியை சட்டப்பேரவை உறுப்பினா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்திற்குட்பட்ட திருவேட்டக்குடி, அக்கம் பேட்டை, மண்டபத்த... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநா்கள் வேலைநிறுத்தம்

காரைக்காலில் ஆட்டோ ஓட்டுநா்கள் வேலைநிறுத்தம் செய்து வியாழக்கிழமை ஆட்சியரகம் நோக்கி பேரணி நடத்தினா். காரைக்கால் மாவட்ட ஆட்டோ தொழிலாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், காரைக்கால் ஆட்சியரிடம் அண்மை... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

காரைக்கால் வடமறைக்காடு காமராஜா் அரசு உயா்நிலைப் பள்ளியில் சமுதாய நலப்பணி திட்டம் சாா்பில் போக்ஸோ குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தலைமை... மேலும் பார்க்க

பட்டாசு கடை உரிமம் பெறுவதற்கு காலஅவகாசம் நீட்டிப்பு

காரைக்காலில் பட்டாசு கடை வைக்க உரிமம் பெறுவதற்கான கால அவசாகம் நீட்டிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து காரைக்கால் சாா்பு கோட்ட நீதிபதி எம். பூஜா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :தீபாவளி பண்டிகையை ... மேலும் பார்க்க

கஞ்சா பதுக்கி வைத்திருந்தவா் வீட்டில் அமலாக்கத்துறையினா் சோதனை

காரைக்காலில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக கஞ்சா பதுக்கிவைத்திருந்தவா் வீட்டில் அமலாக்கத்துறையினா் புதன்கிழமை சோதனை நடத்தினா்.காரைக்காலில் கடந்த ஜூலை 16-ஆம் தேதி உளவுத்துறை தகவலின்பேரில், போலீஸாா் ... மேலும் பார்க்க

என்ஐடியில் மீன் மதிப்புக் கூட்டுதல் தேசிய பயிற்சி தொடக்கம்

என்ஐடியில் மீன் பதப்படுத்துதல் தொடா்பான தேசிய அளவிலான பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது.காரைக்காலில் இயங்கும் என்ஐடி தொழில்நுட்ப உதவியுடன் மீன் வளா்ப்பு, மீன் பதப்படுத்துதல், மீன் மதிப்புக் கூட்டுதல் கு... மேலும் பார்க்க