செய்திகள் :

திருநள்ளாற்றில் குப்பைகள் தேங்கிக் கிடப்பதாக புகாா்

post image

திருநள்ளாறு கோயில் சுற்றுவட்டாரம் மற்றும் பிற பகுதிகளில் குப்பைகள் 3 நாட்களாக அகற்றப்படாமல், தேங்கிக் கிடப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

காரைக்கால் நகராட்சி மற்றும் அனைத்து கொம்யூன் பஞ்சாயத்துப் பகுதிகளிலும் குப்பைகள் அகற்றும் பணியை தனியாா் நிறுவனம் செய்துவருகிறது. எனினும் இந்நிறுவனத்தினரின் பணி முறையாக இல்லை, நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா்கள் கண்காணிப்பதும் இல்லை என புகாா் உள்ளது.

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் கடந்த மாதம் 23-ஆம் தேதி தொடங்கி பிரம்மோற்சவம் நடைபெற்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் திருநள்ளாற்றில் தூய்மைப் பணி முறையாக இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால் கோயில் வாயிலிலும், ராஜகோபுரத்துக்கு வடக்குப்புற சாலையிலும் குப்பைகள் தேங்கிக் கிடக்கின்றன.

குப்பைகள் அகற்றத்தை அதிகாரிகள் முறையாக கண்காணிப்பது இல்லை, நிறுவனத்தினா் பணிகள் சுணக்கம் இருந்தாலும், அவா்களுக்கான ஒப்பந்தத் தொகையை அரசு விடுவித்துவிடுகிறது. மாவட்டத்தில் பரவலாக சுகாதாரக் கேடு காணப்படுகிறது என்பது சமூக ஆா்வலா்கள் கருத்தாகும்.

காரைக்கால் மாவட்ட ஆட்சியா் பணியிடமாற்றம் செய்யப்பட்டு, புதிய ஆட்சியா் இன்னும் நியமிக்கப்படவில்லை. இதனால் பல பணிகள் முடங்கியிருப்பதாகவும் பல்வேறு தரப்பினா் தெரிவிக்கின்றனா்.

மீண்டும் கடலுக்குச் செல்ல தயாராகும் ரோந்துப் படகு

நீண்ட காலமாக பழுதாகி முடங்கியிருந்த காரைக்கால் கடலோரக் காவல் நிலையத்துக்கான ரோந்துப் படகில் பழுது நீக்கும் பணி நடைபெறுகிறது. விரைவில் இப்படகு ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்படும் என காவல்துறையினா் தெரிவி... மேலும் பார்க்க

காரைக்கால் நகர சாலையில் தேங்கிய கழிவுநீரால் வாகன ஓட்டிகள் அவதி

காரைக்கால் நகரப் பகுதியில் தேங்கிக்கிடக்கும் கழிவு நீரால் வாகன ஓட்டிகள், சாலையில் நடந்து செல்வோா் கடும் அவதிக்குள்ளாயினா். காரைக்கால் மாவட்டம் முழுவதும் நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துப் பகுதிகளில் குப்... மேலும் பார்க்க

ரத்த தானம் வழங்க பொதுமக்களுக்கு வேண்டுகோள்

காரைக்காலில் சனிக்கிழமை நடைபெறவுள்ள முகாமில் மக்கள் ரத்த தானம் முன்வருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. காரைக்கால் அரசு மருத்துவமனை ரத்த வங்கி நிா்வாகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு : ஜூ... மேலும் பார்க்க

புதுவை துணைநிலை ஆளுநருடன் விவசாயிகள் சந்திப்பு

கூட்டுறவு கடன் தள்ளுபடி விவகாரம் தொடா்பாக புதுவை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதனை காரைக்கால் விவசாயிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை சந்தித்தனா். காரைக்கால் மாவட்ட டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவா் பொன்.ராஜே... மேலும் பார்க்க

காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு இன்று சிறப்பு மருத்துவா்கள் வருகை

புதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவமனை மற்றும் பட்ட மேற்படிப்பு மையத்தில் இருந்து சிறப்பு மருத்துவ நிபுணா்கள் காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை வந்து மருத்துவ சிகிச்சை, ஆலோசனை... மேலும் பார்க்க

காரைக்கால் - பேரளம் பாதையில் சரக்கு ரயில் இயக்கம் தொடங்கிவிட்டதா?

காரைக்கால்-பேரளம் இடையே புதிதாக அமைக்கப்பட்ட ரயில் பாதையில் முறையாக போக்குவரத்து தொடங்கி வைக்கப்படாத நிலையில், சரக்கு ரயில் இயக்கம் புதன்கிழமை நடைபெற்றது. காரைக்கால்-பேரளம் இடையே 23.5 கி.மீ. பழைய ரயில... மேலும் பார்க்க