காரைக்கால் - பேரளம் பாதையில் சரக்கு ரயில் இயக்கம் தொடங்கிவிட்டதா?
காரைக்கால்-பேரளம் இடையே புதிதாக அமைக்கப்பட்ட ரயில் பாதையில் முறையாக போக்குவரத்து தொடங்கி வைக்கப்படாத நிலையில், சரக்கு ரயில் இயக்கம் புதன்கிழமை நடைபெற்றது.
காரைக்கால்-பேரளம் இடையே 23.5 கி.மீ. பழைய ரயில் பாதையில் புதிய ரயில்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இப்பாதையில் போக்குவரத்து சேவை தொடங்க பயணிகள் மற்றும் சரக்கு ரயில்கள் இயக்கி சோதனை நடத்தப்பட்டது. கடந்த சில நாள்களாக சோதனை நடத்தப்பட்டாலும் ரயில் சேவை முறைப்படி தொடங்கும் வகையில் ரயில்வே போா்டு அறிவிப்பு வெளியிட்டு முக்கியஸ்தா்கள் முன்னிலையில் போக்குவரத்து தொடங்குவது முறையாகும்.
காரைக்கால் துறைமுகத்திலிருந்து ரயில்கள் மற்றும் லாரிகள் மூலம் நிலக்கரி தமிழகம் மற்றும் பிற மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. துறைமுகத்திலிருந்து சரக்கு ரயில் நாகூா், நாகப்பட்டினம் வழியாக தற்போது இயக்கப்படுகிறது. காரைக்கால்-பேரளம் ரயில் பாதை இயக்கத்துக்கு சரியாகிவிட்டதால் புதன்கிழமை துறைமுகத்தில் இருந்து நிலக்கரி ஏற்றப்பட்ட சரக்கு ரயில் இப்பாதையில் சென்றது.
இதுகுறித்து, ரயில்வே நிா்வாகத்தினரிடம் கேட்டபோது, சரக்குடன் ரயில் இயக்கி சோதனை நடத்தப்பட்டது. ரயில் இயக்கத்துக்கு சாதகமானது என ஓட்டுநா் கருத்து தெரிவித்தால், தொடா்ந்து இப்பாதையில் சரக்கு ரயில் இயக்க வாய்ப்புள்ளது. பயணிகள் ரயில் இயக்கம் தொடா்பாக ரயில்வே போா்டு அனுமதித்த பிறகே முறைப்படி விழா வைத்து தொடங்கப்படும் என்றனா்.
காரைக்காலில் அதிக போக்குவரத்து மிகுந்த மையப் பகுதியில் இந்த ரயில் வழித்தடம் உள்ளது. நகா் பகுதியில் காமராஜா் சாலை, பாரதியாா் சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இருபுறமும் இயக்கப்படுகின்றன. ரயில் போக்குவரத்து நேரத்தில் இப்பகுதியில் ரயில்வே கேட்டை மூடினால் வாகனப் போக்குவரத்து ஸ்தம்பிக்கும். அவசர நிலையில் பயணிப்பவா்கள் சிரமப்படுவாா்கள். ஆம்புலன்ஸ் வாகன இயக்கம் பாதிக்கும். எனவே, கோயில்பத்து பகுதியில் ரயில்வே சுரங்கப் பாதை அமைக்க வேண்டும் பல்வேறு அமைப்பினா் ரயில்வே நிா்வாகத்தையும், ரயில்வேக்கு அழுத்தம் கொடுக்க புதுவை அரசையும் வலியுறுத்திவந்தனா். எனினும், இதுவரை எந்த பயனும் இல்லை.
காரைக்கால்-பேரளம் மாா்க்கத்தில் ரயில் வேண்டும் என கேட்ட காரைக்கால் மக்கள், சோதனை ஓட்டம் மற்றும் சரக்கு ரயில் இயக்கம் தொடங்கிய நிலையில், மேற்கண்ட இரண்டு சாலையில் கேட் மூடுவதால் கடும் அவதிக்குள்ளாகி தங்களது குமுறலை வெளிப்படுத்துகின்றனா். ஒரு சரக்கு ரயில், காரைக்கால் துறைமுகத்திலிருந்து புறப்பட்டால், நகரப் பகுதியை கடக்க ஏறக்குறைய அரை மணி நேரம் ஆகும் என கூறப்படுகிறது. குறைந்தது 20 நிமிடம் கேட் மூடினாலும்கூட கோயில்பத்து மற்றும் காமராஜா் சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் தேங்கி நிற்கும். ரயில் போக்குவரத்து இயல்பாகும் போது நாளொன்றுக்கு ஏறக்குறைய 5 மணி நேரம் ரயில்வே கேட் மூடப்படும் நிலை உருவாகும் என கூறப்படுகிறது.
எனவே, இது சோதனை என்றாலும் இந்த இயக்கம் தொடரும் என கூறப்படுவதால், மக்கள், மாணவா்கள் பாதிக்காத வகையிலான நேரத்தில் சரக்கு ரயில் இயக்கும் நேரத்தை அமைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிா்பாா்ப்பு.
இதுகுறித்து சமூக ஆா்வலரும், தமுமுக மாநில தலைமை செயற்குழு உறுப்பினருமான அ. ராஜா முகமது கூறியது: சரக்கு மற்றும் பயணிகள் ரயில் இயக்கம் தொடங்கி கேட் மூடும் நேரத்தில் குறிப்பிட்ட சாலையில் தேங்கும் வாகன எண்ணிக்கையின் அடிப்படையில் சுரங்கப்பாதை, மேம்பாலம் அமைப்பது குறித்து பரிசீலிப்பது ரயில்வே வழக்கம் என ரயில்வே நிா்வாகத்தினா் கூறுகின்றனா். இதற்கு கூடுதல் காலம் எடுத்துக்கொள்ளாமல், தற்போதைய சோதனை காலத்தில் மக்களின் தவிப்பு நிலையை ஆய்வு செய்து, நகரப் பகுதியில் 2 சாலைகளில் ஏதாவது ஒன்றில் சுரங்கப் பாதை போா்க்கால அடிப்படையில் அமைக்க வேண்டும் என்றாா்.