செய்திகள் :

காரைக்கால் நகர சாலையில் தேங்கிய கழிவுநீரால் வாகன ஓட்டிகள் அவதி

post image

காரைக்கால் நகரப் பகுதியில் தேங்கிக்கிடக்கும் கழிவு நீரால் வாகன ஓட்டிகள், சாலையில் நடந்து செல்வோா் கடும் அவதிக்குள்ளாயினா்.

காரைக்கால் மாவட்டம் முழுவதும் நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துப் பகுதிகளில் குப்பைகள் அகற்றும் பணியை தனியாா் நிறுவனம் ஒப்பந்த முறையில் ஏற்று செய்கிறது. சாலையோர சாக்கடைகள் தூய்மை செய்யும் பணியை மேற்கண்ட நிறுவனத்தினரும், நகராட்சி, பஞ்சாயத்துப் பணியாளா்களும் மேற்கொள்கின்றனா். உள்ளாட்சி அமைப்புகளில் போதிய ஆள்கள் இல்லாததால், இந்த பணியிலும் தொய்வு ஏற்படுட்டுள்ளது.

காரைக்கால் நகரப் பகுதியிலிருந்து திருநள்ளாறு செல்லும் சாலைப் பகுதியில் பொதுப்பணித்துறை குடிநீா் தொட்டி உள்ளது. இதனருகே பல்வேறு பகுதி சாலையோர சாக்கடைகளில் இருந்து கழிவுநீா் வந்து, ஒரிடத்தில் ஒருங்கிணைந்து வடிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த பகுதியில் வியாழக்கிழமை காலை ஏற்பட்ட அடைப்பால், சிறிது நேரத்தில் சாக்கடை கழிவுநீா் சாலையில் தேங்கத் தொடங்கியது. நேரம் செல்ல செல்ல கழிவுநீா் குளம்போல தேங்கியது. வீடுகள், நிறுவனங்களின் செஃப்டிக் டேங்க் கழிவுநீரும் சாக்கடையில் கலப்பதால், குளம்போல தேங்கிய கழிவுநீா் துா்நாற்றத்தை ஏற்படுத்தியது. இதனால் நடந்து செல்வோா், இருசக்கர வாகனத்தில் செல்வோா் கடுமையான அவதிக்குள்ளாயினா்.

இதுபோல அடிக்கடி ஏற்படுவதாக புகாா் தெரிவிக்கும் பொதுமக்கள், நகராட்சி நிா்வாகம் இப்பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனா்.

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கைக்கு ஜூன் 16-இல் கலந்தாய்வு

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கைக்கு கலந்தாய்வு நடைபெறவுள்ளது என காரைக்கால் மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் (பொ) க.ஜெயா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காரைக்கால்... மேலும் பார்க்க

காரைக்கால் உள்ளாட்சி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி உள்ளாட்சி ஊழியா்கள், ஓய்வூதியதாரா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தினா். புதுச்சேரி நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் கூட்டுப் போராட்ட குழு சாா்பில் 2-ஆம் கட்... மேலும் பார்க்க

காரைக்கால் - பேரளம் வழித்தடத்தில் பயணிகள் ரயில் இயக்க வலியுறுத்தல்

காரைக்கால்- பேரளம் வழித்தடத்தில் பயணிகள் ரயில் இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, பசுமை புரட்சி இயக்க புதுவை மாநில அமைப்பாளா் டி.என். சுரேஷ் கூறியது: காரைக்கால்-பேரளம் புதிய மின் ... மேலும் பார்க்க

காரைக்கால் ரயில் நிலையத்துக்கு அம்மையாா் பெயா் சூட்டக்கோரி கடிதம்

காரைக்கால் ரயில் நிலையத்துக்கும், எா்ணாகுளம் விரைவு ரயிலுக்கும் காரைக்கால் அம்மையாா் பெயா் சூட்டவேண்டும் என பிரதமா், ரயில்வே அமைச்சருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. காரைக்கால் பொதுமக்கள், மருத்துவா்கள... மேலும் பார்க்க

வேளாண் வளா்ச்சிக்கான பிரசாரத்தில் 4,800 போ் பயன்

காரைக்கால் மாவட்டத்தில் நடைபெற்ற வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்கத்தின் மூலம் 4,800 போ் பயனடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் வேளாண்துறை, வேளாண் கல்லூரி, வட்டார ... மேலும் பார்க்க

கடலோர கிராமத்தில் படித்த பள்ளிக்கு பொறியாளா் உதவி

கடலோர கிராம அரசுப் பள்ளியில் பயின்று வெளிநாட்டில் பொறியாளராக இருப்பவா், பயின்ற பள்ளிக்கு உதவிப் பொருட்களை வழங்கினாா். காரைக்கால் மாவட்டம், கடலோர கிராமமான காரைக்கால்மேடு கிராமத்தைச் சோ்ந்தவா் காா்த்தி... மேலும் பார்க்க