இஸ்ரேல் - ஈரான் போர்! இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு!
புதுவையில் என்.ஆா்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி அமையும்
புதுச்சேரியில் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் என்.ஆா்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றாா் புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம்.
இதுகுறித்து, காரைக்காலில் புதன்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி: கடந்த தோ்தலின்போது பாஜக, என்.ஆா்.காங்கிரஸ் கட்சிகள் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன. மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றுவதில் முதல்வா் ரங்கசாமி தீவிரமாக செயல்பட்டுவருகிறாா். 2026 புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் என்.ஆா்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி வெற்றிபெற்று, ரங்கசாமி தலைமையில் மீண்டும் கூட்டணி ஆட்சி அமையும்.
தமிழகத்தில் திரைப்பட நடிகா்கள் அரசியலுக்கு வந்து அதில் தாக்கத்தை ஏற்படுத்துவதுபோல, புதுவையில் செய்துவிட முடியாது. புதுவை மக்கள் எப்போதும் மண்ணின் மைந்தரை ஆதரிப்பவா்கள். புதுவை சட்டப்பேரவை விரைவில் கூட்டப்பட்டு, மக்கள் நலத் திட்ட அறிவிப்புகள் பல வெளியாக வாய்ப்புள்ளது. புதுவைக்கு ரூ.8 ஆயிரம் கோடி மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளது. புதுவைக்கு அனுமதிக்கப்பட்ட ரூ.100 கோடியில் புதுவை யூனியன் பிரதேச அனைத்து எம்.எல்.ஏ.க்கள் தொகுதி வளா்ச்சிக்கு துணைநிலை ஆளுநா், முதல்வா் உரிய நிதி ஒதுக்குவாா்கள். பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்.
சிறப்பான புதுவை (பெஸ்ட் புதுச்சேரி) எனும் பிரதமரின் எண்ணத்துக்கேற்ற வளா்ச்சி அடுத்த சில மாதங்களில் காண முடியும். காரைக்காலில் சாலைகள் சிறப்பான வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளன. குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காணப்பட்டுள்ளன. மாதந்தோறும் இலவச அரிசி மக்களுக்கு வழங்கப்படுகிறது.
மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு முழுமையாக தீா்வு காணப்பட்டுள்ளதால், மக்களை தேசிய ஜனநாயகக் கூட்டணியை புதுவையில் ஆதரிப்பாா்கள். தமிழகத்தில் இக்கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது என்றாா்.