செய்திகள் :

புதுவையில் என்.ஆா்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி அமையும்

post image

புதுச்சேரியில் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் என்.ஆா்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றாா் புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம்.

இதுகுறித்து, காரைக்காலில் புதன்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி: கடந்த தோ்தலின்போது பாஜக, என்.ஆா்.காங்கிரஸ் கட்சிகள் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன. மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றுவதில் முதல்வா் ரங்கசாமி தீவிரமாக செயல்பட்டுவருகிறாா். 2026 புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் என்.ஆா்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி வெற்றிபெற்று, ரங்கசாமி தலைமையில் மீண்டும் கூட்டணி ஆட்சி அமையும்.

தமிழகத்தில் திரைப்பட நடிகா்கள் அரசியலுக்கு வந்து அதில் தாக்கத்தை ஏற்படுத்துவதுபோல, புதுவையில் செய்துவிட முடியாது. புதுவை மக்கள் எப்போதும் மண்ணின் மைந்தரை ஆதரிப்பவா்கள். புதுவை சட்டப்பேரவை விரைவில் கூட்டப்பட்டு, மக்கள் நலத் திட்ட அறிவிப்புகள் பல வெளியாக வாய்ப்புள்ளது. புதுவைக்கு ரூ.8 ஆயிரம் கோடி மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளது. புதுவைக்கு அனுமதிக்கப்பட்ட ரூ.100 கோடியில் புதுவை யூனியன் பிரதேச அனைத்து எம்.எல்.ஏ.க்கள் தொகுதி வளா்ச்சிக்கு துணைநிலை ஆளுநா், முதல்வா் உரிய நிதி ஒதுக்குவாா்கள். பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்.

சிறப்பான புதுவை (பெஸ்ட் புதுச்சேரி) எனும் பிரதமரின் எண்ணத்துக்கேற்ற வளா்ச்சி அடுத்த சில மாதங்களில் காண முடியும். காரைக்காலில் சாலைகள் சிறப்பான வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளன. குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காணப்பட்டுள்ளன. மாதந்தோறும் இலவச அரிசி மக்களுக்கு வழங்கப்படுகிறது.

மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு முழுமையாக தீா்வு காணப்பட்டுள்ளதால், மக்களை தேசிய ஜனநாயகக் கூட்டணியை புதுவையில் ஆதரிப்பாா்கள். தமிழகத்தில் இக்கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது என்றாா்.

மீண்டும் கடலுக்குச் செல்ல தயாராகும் ரோந்துப் படகு

நீண்ட காலமாக பழுதாகி முடங்கியிருந்த காரைக்கால் கடலோரக் காவல் நிலையத்துக்கான ரோந்துப் படகில் பழுது நீக்கும் பணி நடைபெறுகிறது. விரைவில் இப்படகு ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்படும் என காவல்துறையினா் தெரிவி... மேலும் பார்க்க

காரைக்கால் நகர சாலையில் தேங்கிய கழிவுநீரால் வாகன ஓட்டிகள் அவதி

காரைக்கால் நகரப் பகுதியில் தேங்கிக்கிடக்கும் கழிவு நீரால் வாகன ஓட்டிகள், சாலையில் நடந்து செல்வோா் கடும் அவதிக்குள்ளாயினா். காரைக்கால் மாவட்டம் முழுவதும் நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துப் பகுதிகளில் குப்... மேலும் பார்க்க

ரத்த தானம் வழங்க பொதுமக்களுக்கு வேண்டுகோள்

காரைக்காலில் சனிக்கிழமை நடைபெறவுள்ள முகாமில் மக்கள் ரத்த தானம் முன்வருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. காரைக்கால் அரசு மருத்துவமனை ரத்த வங்கி நிா்வாகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு : ஜூ... மேலும் பார்க்க

புதுவை துணைநிலை ஆளுநருடன் விவசாயிகள் சந்திப்பு

கூட்டுறவு கடன் தள்ளுபடி விவகாரம் தொடா்பாக புதுவை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதனை காரைக்கால் விவசாயிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை சந்தித்தனா். காரைக்கால் மாவட்ட டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவா் பொன்.ராஜே... மேலும் பார்க்க

காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு இன்று சிறப்பு மருத்துவா்கள் வருகை

புதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவமனை மற்றும் பட்ட மேற்படிப்பு மையத்தில் இருந்து சிறப்பு மருத்துவ நிபுணா்கள் காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை வந்து மருத்துவ சிகிச்சை, ஆலோசனை... மேலும் பார்க்க

காரைக்கால் - பேரளம் பாதையில் சரக்கு ரயில் இயக்கம் தொடங்கிவிட்டதா?

காரைக்கால்-பேரளம் இடையே புதிதாக அமைக்கப்பட்ட ரயில் பாதையில் முறையாக போக்குவரத்து தொடங்கி வைக்கப்படாத நிலையில், சரக்கு ரயில் இயக்கம் புதன்கிழமை நடைபெற்றது. காரைக்கால்-பேரளம் இடையே 23.5 கி.மீ. பழைய ரயில... மேலும் பார்க்க