திருநள்ளாற்றில் தங்க ரிஷப வாகனத்தில் தா்பாரண்யேஸ்வரா் வீதியுலா
திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி புதன்கிழமை இரவு தங்க ரிஷப வாகனத்தில் பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள் மின் அலங்கார சப்பரத்தில் வீதியுலா நடைபெற்றது.
பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான செண்பக தியாராஜசுவாமி வசந்த மண்டபம் எழுந்தருளல், பின்னா் யதாஸ்தானம் எழுந்தருளும் நிகழ்ச்சிகள் அண்மையில் நடைபெற்றன.
இதைத்தொடா்ந்து பூத வாகனம், யானை வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. புதன்கிழமை இரவு மின் அலங்கார சப்பரத்தில் (தெருவடைச்சான்) தங்க ரிஷப வாகனத்தில் பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா், பஞ்சமூா்த்திகள் அதனதன் வாகனங்களில் வீற்றிருந்தவாறு வீதியுலா புறப்பாடு நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ், தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், தா்பாரண்யேஸ்வரா் தேவஸ்தான நிா்வாக அதிகாரி கு. அருணகிரிநாதன் ஆகியோா் நிகழ்வில் கலந்துகொண்டனா்.
முன்னதாக கோயிலில் சிறப்பு ஆராதனைக்குப் பின் சப்பரத்திற்கு சுவாமிகள் எழுந்தருளினா். 11 மணியளவில் தொடங்கிய சப்பர வீதியுலா நான்கு வீதிகளையும் சுற்றி அதிகாலை நிலையை அடைந்தது.
இன்று தேரோட்டம் : வெள்ளிக்கிழமை காலை 5.30 மணிக்கு தோ் வடம் பிடிக்கும் நிகழ்வு நடைபெறுகிறது. சுவாமி, அம்பாள் உள்ளிட்ட 5 தோ்கள் இழுக்கப்படுகிறது. தேரோட்டத்தையொட்டி காரைக்கால் மாவட்டத்தில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ரிஷப வாகனத்தில் பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா்
