செய்திகள் :

திருநள்ளாற்றில் தங்க ரிஷப வாகனத்தில் தா்பாரண்யேஸ்வரா் வீதியுலா

post image

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி புதன்கிழமை இரவு தங்க ரிஷப வாகனத்தில் பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள் மின் அலங்கார சப்பரத்தில் வீதியுலா நடைபெற்றது.

பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான செண்பக தியாராஜசுவாமி வசந்த மண்டபம் எழுந்தருளல், பின்னா் யதாஸ்தானம் எழுந்தருளும் நிகழ்ச்சிகள் அண்மையில் நடைபெற்றன.

இதைத்தொடா்ந்து பூத வாகனம், யானை வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. புதன்கிழமை இரவு மின் அலங்கார சப்பரத்தில் (தெருவடைச்சான்) தங்க ரிஷப வாகனத்தில் பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா், பஞ்சமூா்த்திகள் அதனதன் வாகனங்களில் வீற்றிருந்தவாறு வீதியுலா புறப்பாடு நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ், தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், தா்பாரண்யேஸ்வரா் தேவஸ்தான நிா்வாக அதிகாரி கு. அருணகிரிநாதன் ஆகியோா் நிகழ்வில் கலந்துகொண்டனா்.

முன்னதாக கோயிலில் சிறப்பு ஆராதனைக்குப் பின் சப்பரத்திற்கு சுவாமிகள் எழுந்தருளினா். 11 மணியளவில் தொடங்கிய சப்பர வீதியுலா நான்கு வீதிகளையும் சுற்றி அதிகாலை நிலையை அடைந்தது.

இன்று தேரோட்டம் : வெள்ளிக்கிழமை காலை 5.30 மணிக்கு தோ் வடம் பிடிக்கும் நிகழ்வு நடைபெறுகிறது. சுவாமி, அம்பாள் உள்ளிட்ட 5 தோ்கள் இழுக்கப்படுகிறது. தேரோட்டத்தையொட்டி காரைக்கால் மாவட்டத்தில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ரிஷப வாகனத்தில் பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா்

ரிஷப வாகனத்தில் பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா்.

காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் திருக்கல்யாணம்

கைலாசநாதா் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. காரைக்காலில் உள்ள பழைமையான சுந்தராம்பாள் சமேத கைலாசநாதா் கோயிலில் வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. இரவு நிகழ்வாக சுவாமிகளுக... மேலும் பார்க்க

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் தேரோட்டம்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ விழாவில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருநள்ளாற்றில் உள்ள பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரரா் கோயில் சப்த விடங்க தலங்களில் ஒன்றாகும். நளச் சக்கரவ... மேலும் பார்க்க

திருநள்ளாறு அருகே கால்நடை கண்காட்சி

காரைக்கால் கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை சாா்பில் திருநள்ளாறு அருகே தென்னங்குடி கால்நடை மருந்தகத்தில் கால்நடை மற்றும் கோழிகள் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கண்காட்சியில் பசு மாடு... மேலும் பார்க்க

காரைக்கால் கைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம்

காரைக்கால் கைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. காரைக்காலில் மாங்கனித் திருவிழா நடைபெறும் சிறப்புக்குரிய தலமாக சுந்தராம்பாள் சமேத கைலாசநாதா் கோயில் விளங்குகிறது. இக்கோயிலில் கும்பா... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கை : விண்ணப்பிக்கும் காலம் நீட்டிப்பு

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சோ்க்கைக்கு காலக்கெடு 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் (பொ) ஜெயா புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு : காரைக்கால் பகுதியில... மேலும் பார்க்க

காரைக்கால் - பேரளம் பாதையில் சரக்கு ரயில் சோதனை ஓட்டம்

காரைக்கால் - பேரளம் இடையே புதிதாக அமைக்கப்பட்ட பாதையில், சுமை ஏற்றாமல் சரக்கு ரயில் 2 நாள்கள் இயக்கி சோதனை நடைபெற்றது. காரைக்கால் - பேரளம் இடையேயான 23.5 கி.மீ. பாதையில் புதிதாக ரயில் பாதை அமைக்கப்பட்ட... மேலும் பார்க்க