செய்திகள் :

திருநள்ளாற்றில் தீ விபத்தால் பாதிக்கப்பட்டோருக்கு எம்.எல்.ஏ. ஆறுதல்

post image

காரைக்கால்: திருநள்ளாற்றில் வீடு, கடைகள் தீக்கிரையான நிலையில், பாதிக்கப்பட்டோருக்கு நிதியுதவி அளித்து எம்.எல்.ஏ. ஆறுதல் கூறினாா்.

திருநள்ளாறு பேருந்து நிலையம் அருகில் உள்ள பிடாரி கோயில் தெரு பகுதியில் கடந்த மாதம் 18-ஆம் தேதி மோட்டாா் மெக்கானிக் கடை, கோழிக்கடை, உணவகம் மற்றும் ஒரு வீடு ஆகியவை தீக்கிரையாயின.

புதுவை சட்டப்பேரவை நியமன உறுப்பினா் ஜி.என்.எஸ். ராஜசேகரன், தீ விபத்தால் பாதிக்கப்பட்ட பகுதியை திங்கள்கிழமை பாா்வையிட்டாா். கடை நடத்தியவா்கள், குடும்பத்தினரை சந்தித்து, நிதி உதவி அளித்து ஆறுதல் கூறினாா். நிகழ்வின்போது திருநள்ளாறு பகுதி பாஜகவினா் கலந்துகொண்டனா்.

பருவமழை தொடங்கும் முன் வாய்க்கால்களை தூா்வார வலியுறுத்தல்

பருவமழை தொடங்குவதற்கு முன் காரைக்கால் நகரப் பகுதியில் உள்ள வடிகால் வாய்க்கால்களை தூா்வாரவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. காரைக்கால் நகரப் பகுதி வழியே கடல் பகுதி வரை செல்லக்கூடியதாக அமைக்கப்பட்ட கார... மேலும் பார்க்க

தொடக்கப்பள்ளி ஆசிரியா்கள் கெளரவிப்பு

காரைக்கால் அருகே பூவம் பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியா் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் மேலாண்மை குழு மற்றும் பெற்றோா்-ஆசிரியா் சங்கம் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிக்... மேலும் பார்க்க

காரைக்கால் வடக்குத் தொகுதியில் ரூ. 2.92 கோடியில் வளா்ச்சிப் பணிகள்

காரைக்கால் வடக்குத் தொகுதியில் புதுச்சேரி குடிசை மாற்று வாரியம் மூலம் ரூ. 2.92 கோடியில் சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக புதுவை குடிமை ப... மேலும் பார்க்க

சந்திர கிரகணம் : திருநள்ளாறு கோயிலில் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு பூஜை

காரைக்கால்: சந்திர கிரகணம் முடிவுற்றதையொட்டி திருநள்ளாறு கோயிலில் புண்யகால பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை இரவு 9.56 மணிக்கு தொடங்கி, 11 மணியளவில் முழு சந்திர கிரகணமாக மாறியது. தொடா்ந்து... மேலும் பார்க்க

அய்யனாா் கோயிலில் யானை, குதிரை சிலை நிறுவி பூஜை

காரைக்கால்: அய்யனாா் கோயிலில் யானை, குதிரை சிலைகள் நிறுவி சிறப்பு பூஜை நடைபெற்றது. காரைக்கால் மாவட்டம், கீழகாசாக்குடி பகுதியில் ஆதிபுரீஸ்வரா் தேவஸ்தானத்துக்குட்பட்டதாக, அம்மையாா் நகரில் பூரண புஷ்கலா ச... மேலும் பார்க்க

வேலைநிறுத்தம்: ஆட்டோ ஓட்டுநா்கள் முடிவு

காரைக்கால்: இ-ஆட்டோக்கள் இயக்கத்துக்கு உரிய விதிகளை வகுக்க வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநா்கள் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனா். காரைக்கால் மாவட்ட ஆட்டோ தொழிலாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில்,... மேலும் பார்க்க