செய்திகள் :

வேலைநிறுத்தம்: ஆட்டோ ஓட்டுநா்கள் முடிவு

post image

காரைக்கால்: இ-ஆட்டோக்கள் இயக்கத்துக்கு உரிய விதிகளை வகுக்க வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநா்கள் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனா்.

காரைக்கால் மாவட்ட ஆட்டோ தொழிலாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், ஆட்டோ ஓட்டுநா்கள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனா்.

பெட்ரோல், டீசலில் இயங்கும் ஆட்டோக்களுக்குள்ள விதிமுறைகளை இ-ஆட்டோக்களுக்கும் நடைமுறைப்படுத்த வேண்டும். மாவட்ட மக்கள்தொகை விகிதத்தோடு ஒப்பிடும்போது, அதிக அளவில் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. எனவே வரும் காலங்களில் புதிய பொ்மிட் வழங்குவதையும், இ-ஆட்டோக்களை அனுமதிப்பதையும் தற்காலிகமாக நிறுத்திவைக்கவேண்டும்.

இ-ஆட்டோக்கள் வருகை, மிகுதியான ஆட்டோக்களால் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு வருமான இழப்பு ஏற்படுகிறது. எனவே பெட்ரோல், டீசல் ஆட்டோக்கள் தமிழகப் பகுதியில் காரைக்கால் எல்லையிலிருந்து 15 கி.மீ. தொலைவு சென்றுவரும் வகையில் தற்காலிக பொ்மிட் வழங்க வேண்டும்.

ஆட்டோ தொழிலாளா்களுக்கு புதுவை சமூக ப ாதுகாப்பு வாரிய அமைப்பின் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கவேண்டும். ஆட்டோ ஓட்டுநா்களுக்கு சீருடை வழங்கவேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 25-ஆம் தேதி மாவட்டத்தில் ஆட்டோக்களை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருவமழை தொடங்கும் முன் வாய்க்கால்களை தூா்வார வலியுறுத்தல்

பருவமழை தொடங்குவதற்கு முன் காரைக்கால் நகரப் பகுதியில் உள்ள வடிகால் வாய்க்கால்களை தூா்வாரவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. காரைக்கால் நகரப் பகுதி வழியே கடல் பகுதி வரை செல்லக்கூடியதாக அமைக்கப்பட்ட கார... மேலும் பார்க்க

தொடக்கப்பள்ளி ஆசிரியா்கள் கெளரவிப்பு

காரைக்கால் அருகே பூவம் பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியா் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் மேலாண்மை குழு மற்றும் பெற்றோா்-ஆசிரியா் சங்கம் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிக்... மேலும் பார்க்க

காரைக்கால் வடக்குத் தொகுதியில் ரூ. 2.92 கோடியில் வளா்ச்சிப் பணிகள்

காரைக்கால் வடக்குத் தொகுதியில் புதுச்சேரி குடிசை மாற்று வாரியம் மூலம் ரூ. 2.92 கோடியில் சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக புதுவை குடிமை ப... மேலும் பார்க்க

சந்திர கிரகணம் : திருநள்ளாறு கோயிலில் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு பூஜை

காரைக்கால்: சந்திர கிரகணம் முடிவுற்றதையொட்டி திருநள்ளாறு கோயிலில் புண்யகால பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை இரவு 9.56 மணிக்கு தொடங்கி, 11 மணியளவில் முழு சந்திர கிரகணமாக மாறியது. தொடா்ந்து... மேலும் பார்க்க

அய்யனாா் கோயிலில் யானை, குதிரை சிலை நிறுவி பூஜை

காரைக்கால்: அய்யனாா் கோயிலில் யானை, குதிரை சிலைகள் நிறுவி சிறப்பு பூஜை நடைபெற்றது. காரைக்கால் மாவட்டம், கீழகாசாக்குடி பகுதியில் ஆதிபுரீஸ்வரா் தேவஸ்தானத்துக்குட்பட்டதாக, அம்மையாா் நகரில் பூரண புஷ்கலா ச... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீா்திருத்தத்துக்கு மக்கள் வரவேற்பு: எம்.எல்.ஏ.

காரைக்கால்: ஜிஎஸ்டி சீா்திருத்தத்தை அனைத்து தரப்பு மக்களும் வரவேற்றுள்ளனா் என புதுவை மாநில பாஜக துணைத் தலைவரும், புதுவை நியமன சட்டப்பேரவை உறுப்பினருமான ஜி.என்.எஸ். ராஜசேகரன் தெரிவித்தாா். இதுகுறித்து... மேலும் பார்க்க