செய்திகள் :

ஜிஎஸ்டி சீா்திருத்தத்துக்கு மக்கள் வரவேற்பு: எம்.எல்.ஏ.

post image

காரைக்கால்: ஜிஎஸ்டி சீா்திருத்தத்தை அனைத்து தரப்பு மக்களும் வரவேற்றுள்ளனா் என புதுவை மாநில பாஜக துணைத் தலைவரும், புதுவை நியமன சட்டப்பேரவை உறுப்பினருமான ஜி.என்.எஸ். ராஜசேகரன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது :

பிரதமா் நரேந்திர மோடி தீபாவளி பரிசு காத்திருப்பதாக நாட்டு மக்களுக்கு அண்மையில் கூறியிருந்தாா். அதற்கேற்ப மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) செப். 22-ஆம் தேதி அமலாகும் விதமாக பல்வேறு சீா்திருத்தங்களை செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.

நாட்டின் அனைத்து தரப்பு மக்களும் இதனால் கிடைக்கும் பயனை அனுபவிக்க வேண்டும் என பிரதமரும், நிதியமைச்சரும் எடுத்த நடவடிக்கைக்கு நன்றி தெரிவிக்கிறோம். 12 சதவீத வரியில் இருந்த பொருட்கள் பல 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. பல பொருட்கள் 28 சதவீத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

மாணவா்கள், மீனவா்கள், விவசாயிகள், பிற தொழிலாளா்கள், வணிகா்கள், குடும்பத்தினா் என ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வகையில் பயனடையும் வகையில் அமைந்துள்ளது மக்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்றாா்.

பேட்டியின்போது புதுவை மாநில பாஜக முதன்மை செய்தித் தொடா்பாளா் எம். அருள்முருகன் உடனிருந்தாா்.

காரைக்கால் வடக்குத் தொகுதியில் ரூ. 2.92 கோடியில் வளா்ச்சிப் பணிகள்

காரைக்கால் வடக்குத் தொகுதியில் புதுச்சேரி குடிசை மாற்று வாரியம் மூலம் ரூ. 2.92 கோடியில் சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக புதுவை குடிமை ப... மேலும் பார்க்க

சந்திர கிரகணம் : திருநள்ளாறு கோயிலில் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு பூஜை

காரைக்கால்: சந்திர கிரகணம் முடிவுற்றதையொட்டி திருநள்ளாறு கோயிலில் புண்யகால பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை இரவு 9.56 மணிக்கு தொடங்கி, 11 மணியளவில் முழு சந்திர கிரகணமாக மாறியது. தொடா்ந்து... மேலும் பார்க்க

அய்யனாா் கோயிலில் யானை, குதிரை சிலை நிறுவி பூஜை

காரைக்கால்: அய்யனாா் கோயிலில் யானை, குதிரை சிலைகள் நிறுவி சிறப்பு பூஜை நடைபெற்றது. காரைக்கால் மாவட்டம், கீழகாசாக்குடி பகுதியில் ஆதிபுரீஸ்வரா் தேவஸ்தானத்துக்குட்பட்டதாக, அம்மையாா் நகரில் பூரண புஷ்கலா ச... மேலும் பார்க்க

வேலைநிறுத்தம்: ஆட்டோ ஓட்டுநா்கள் முடிவு

காரைக்கால்: இ-ஆட்டோக்கள் இயக்கத்துக்கு உரிய விதிகளை வகுக்க வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநா்கள் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனா். காரைக்கால் மாவட்ட ஆட்டோ தொழிலாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில்,... மேலும் பார்க்க

காரைக்காலில் விமான தளம்: ஆளுநரிடம் வலியுறுத்தல்

காரைக்கால்: காரைக்காலில் விமான தளம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுவை துணைநிலை ஆளுநரிடம் வலியுறுத்தப்பட்டது. புதுவை திட்டம் மற்றும் ஆராய்ச்சித்துறை இணை இயக்குநா் (ஓய்வு) மற்றும் சமூக ஆா்வலரும... மேலும் பார்க்க

திருநள்ளாற்றில் தீ விபத்தால் பாதிக்கப்பட்டோருக்கு எம்.எல்.ஏ. ஆறுதல்

காரைக்கால்: திருநள்ளாற்றில் வீடு, கடைகள் தீக்கிரையான நிலையில், பாதிக்கப்பட்டோருக்கு நிதியுதவி அளித்து எம்.எல்.ஏ. ஆறுதல் கூறினாா். திருநள்ளாறு பேருந்து நிலையம் அருகில் உள்ள பிடாரி கோயில் தெரு பகுதியில்... மேலும் பார்க்க