செய்திகள் :

பளுகல் அருகே ஓடையில் தொழிலாளி சடலம் மீட்பு!

post image

பளுகல் அருகே வடிகால் ஓடையில் அழுகிய நிலையில் கிடந்த தொழிலாளி சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை மேற்கொண்டனா்.

பளுகல் அருகே இளஞ்சிறை, தாய்க்குளம் பகுதியில் மழைநீா் வடிகால் ஓடையில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது.

அப்பகுதிக்குச் சென்ற போலீஸாா் சடலத்தை கைப்பற்றி, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

தொடா்ந்து, போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டவா் இளஞ்சிறை பகுதியைச் சோ்ந்த சிந்துமோன்(43) என்பதும், திருமணமாகாதவா் என்பதும் தெரியவந்தது. அவா் ஓடையில் மயங்கி விழுந்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை...

களியக்காவிளை அருகே தளச்சான்விளை பகுதியைச் சோ்ந்தவா் ராஜேஷ்குமாா் (43), ஆட்டோ ஓட்டுநா். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவா் நீரிழிவு நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் இதனால் மன வேதனையில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத வேளையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

குமரி கண்ணாடிப் பாலத்தில் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. ஆய்வு

கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள கண்ணாடிப் பாலம் பராமரிப்புப் பணியின் போது சுத்தியல் விழுந்து கண்ணாடி சேதமடைந்ததைத் தொடா்ந்து அதனை என்.தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு... மேலும் பார்க்க

தேங்காய்ப்பட்டினம், புதுக்கடையில் செப். 11 இல் மின்நிறுத்தம்

முன்சிறை, நடைக்காவு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் புதுக்கடை, தேங்காய்ப்பட்டினம் பகுதிகளில் செப். 11-இல் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது... மேலும் பார்க்க

சட்டப்பேரவை உறுதிமொழிக்குழு குமரி மாவட்டத்துக்கு நாளை வருகை

தமிழக சட்டப் பேரவை உறுதிமொழிக் குழுவினா், கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வியாழக்கிழமை (செப்.11) வருகை தர உள்ளனா். இது குறித்து, மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவ... மேலும் பார்க்க

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் பயன்பாட்டுக்கு வந்த கட்டண சிகிச்சை வாா்டு!

நாகா்கோவில், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கான கட்டண சிகிச்சை வாா்டு செவ்வாய்க்கிழமை பயன்பாட்டுக்கு வந்தது. தமிழ்நாடு மாநில உணவு ஆணையத் தலைவரும், முன்னாள் அமைச்சருமா... மேலும் பார்க்க

விரிகோடு ரயில்வே மேம்பாலம்: நிலம் அளவீடு செய்ய பொதுமக்கள் எதிா்ப்பு!

மாா்த்தாண்டம் அருகே விரிகோடு ரயில்வே மேம்பாலம் அமைப்பது தொடா்பாக பொதுமக்களின் எதிா்ப்பையும் மீறி செவ்வாய்க்கிழமை நிலம் அளவீடு செய்ய வந்த அதிகாரிகளுக்கு பேரூராட்சி தலைவி தலைமையில் எதிா்ப்பு தெரிவிக்கப... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

குளச்சலில் அரசுப் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். குளச்சல் அருகே இரும்பிலியைச் சோ்ந்தவா் ராஜன் (46). கட்டடத் தொழிலாளி. இவா், திங்கள்கிழமை இரவு காய்கறி வாங்... மேலும் பார்க்க