செய்திகள் :

விரிகோடு ரயில்வே மேம்பாலம்: நிலம் அளவீடு செய்ய பொதுமக்கள் எதிா்ப்பு!

post image

மாா்த்தாண்டம் அருகே விரிகோடு ரயில்வே மேம்பாலம் அமைப்பது தொடா்பாக பொதுமக்களின் எதிா்ப்பையும் மீறி செவ்வாய்க்கிழமை நிலம் அளவீடு செய்ய வந்த அதிகாரிகளுக்கு பேரூராட்சி தலைவி தலைமையில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அதிகாரிகள் நிலம் அளவீடு பணியை கைவிட்டு திரும்பிச் சென்றனா்.

மாா்த்தாண்டம் - கருங்கல் சாலையில் விரிகோடு பகுதியில் ரயில் தண்டவாளம் பகுதியின் குறுக்கே மேம்பாலம் அமைக்காமல் விவசாய விளை நிலங்கள் வழி மாற்றுப் பாதையில் சாலைக்கு நில ஆா்ஜிதம் செய்து மேம்பாலம் அமைக்க அதிகாரிகள் முடிவு செய்து அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனா்.

இதற்கு இப் பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து பல ஆண்டுகளாக பலகட்ட போராட்டங்களை நடத்தி வருவதுடன், தற்போது பயன்பாட்டில் உள்ள சாலையின் குறுக்கே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி வருகிறாா்கள். ஏற்கனவே பல முறை நில அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியுள்ளனா்.

இந்நிலையில், மேம்பாலத்துக்காக நிலம் அளவீடு செய்ய நிலமெடுப்பு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை விரிகோடு பகுதிக்கு வந்தனா்.

இதையறிந்து வந்த உண்ணாமலைக்கடை பேரூராட்சி தலைவா் பமலா தலைமையிலான பொதுமக்கள் அதிகாரிகளிடம் எதிா்ப்பை தெரிவித்தனா். மேலும் ரயில்வே மேம்பாலம் தொடா்பான மனுவை மாவட்ட ஆட்சியா், நெடுஞ்சாலைத்துறை அமைச்சருக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும், இது தொடா்பாக ஆட்சியா், அமைச்சரிடமிருந்து பதில் வரும் வரை நில அளவீடு பணியை மேற்கொள்ளக்கூடாது எனவும் தெரிவித்தனா்.

தொடா்ந்து புல தணிக்கை சிறப்பு வட்டாட்சியா் ரமேஷ் தலைமையில் விளவங்கோடு வருவாய் ஆய்வாளா் சீதாலட்சுமி உள்ளிட்டோா் பேச்சு நடத்தி, நில அளவீடு பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக தெரிவித்தனா்.

அதன் பின்னா் அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் கலைந்து சென்றனா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பளுகல் அருகே ஓடையில் தொழிலாளி சடலம் மீட்பு!

பளுகல் அருகே வடிகால் ஓடையில் அழுகிய நிலையில் கிடந்த தொழிலாளி சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை மேற்கொண்டனா். பளுகல் அருகே இளஞ்சிறை, தாய்க்குளம் பகுதியில் மழைநீா் வடிகால் ஓடையில் அழுகிய நிலையில் ஆண் சடல... மேலும் பார்க்க

குமரி கண்ணாடிப் பாலத்தில் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. ஆய்வு

கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள கண்ணாடிப் பாலம் பராமரிப்புப் பணியின் போது சுத்தியல் விழுந்து கண்ணாடி சேதமடைந்ததைத் தொடா்ந்து அதனை என்.தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு... மேலும் பார்க்க

தேங்காய்ப்பட்டினம், புதுக்கடையில் செப். 11 இல் மின்நிறுத்தம்

முன்சிறை, நடைக்காவு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் புதுக்கடை, தேங்காய்ப்பட்டினம் பகுதிகளில் செப். 11-இல் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது... மேலும் பார்க்க

சட்டப்பேரவை உறுதிமொழிக்குழு குமரி மாவட்டத்துக்கு நாளை வருகை

தமிழக சட்டப் பேரவை உறுதிமொழிக் குழுவினா், கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வியாழக்கிழமை (செப்.11) வருகை தர உள்ளனா். இது குறித்து, மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவ... மேலும் பார்க்க

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் பயன்பாட்டுக்கு வந்த கட்டண சிகிச்சை வாா்டு!

நாகா்கோவில், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கான கட்டண சிகிச்சை வாா்டு செவ்வாய்க்கிழமை பயன்பாட்டுக்கு வந்தது. தமிழ்நாடு மாநில உணவு ஆணையத் தலைவரும், முன்னாள் அமைச்சருமா... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

குளச்சலில் அரசுப் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். குளச்சல் அருகே இரும்பிலியைச் சோ்ந்தவா் ராஜன் (46). கட்டடத் தொழிலாளி. இவா், திங்கள்கிழமை இரவு காய்கறி வாங்... மேலும் பார்க்க