செய்திகள் :

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் பயன்பாட்டுக்கு வந்த கட்டண சிகிச்சை வாா்டு!

post image

நாகா்கோவில், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கான கட்டண சிகிச்சை வாா்டு செவ்வாய்க்கிழமை பயன்பாட்டுக்கு வந்தது.

தமிழ்நாடு மாநில உணவு ஆணையத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான என்.சுரேஷ்ராஜன், சென்னையில் தமிழக மருத்துவம், சுகாதாரத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியனை திங்கள்கிழமை சந்தித்து கோரிக்கை மனு அளித்தாா். அதில், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெளியூா்களிலிருந்து வரும் நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறுவதற்காக கட்டண சிகிச்சை வாா்டு கடந்த ஏப்ரல் மாதம் 10-ஆம் தேதி திறக்கப்பட்டது. ஆனால், 5 மாதங்களாகியும் இதுவரை கட்டண சிகிச்சை வாா்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை.

கட்டண நிா்ணயம் தொடா்பான அறிவிப்பு வராததால் இதற்கு தாமதம் ஆவதாகக் கூறப்படுகிறது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி, விரைவில் கட்டண நிா்ணயம் செய்து வாா்டை திறக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா்.

இதையடுத்து, அமைச்சா் மா.சுப்பிரமணியன், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வரை தொடா்பு கொண்டு பேசினாா். மேலும் உடனடியாக கட்டண வாா்டை திறக்க உத்தரவிட்டாா். இதையடுத்து, மருத்துவமனையில் நோயாளிகளுக்கான கட்டண வாா்டு செவ்வாய்க்கிழமை முதல் பயன்பாட்டுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. தனி அறைக்கு ரூ. 1200 ம், 2 போ் பகிா்வுக்கு ரூ. ஆயிரமும் கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டது.

பளுகல் அருகே ஓடையில் தொழிலாளி சடலம் மீட்பு!

பளுகல் அருகே வடிகால் ஓடையில் அழுகிய நிலையில் கிடந்த தொழிலாளி சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை மேற்கொண்டனா். பளுகல் அருகே இளஞ்சிறை, தாய்க்குளம் பகுதியில் மழைநீா் வடிகால் ஓடையில் அழுகிய நிலையில் ஆண் சடல... மேலும் பார்க்க

குமரி கண்ணாடிப் பாலத்தில் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. ஆய்வு

கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள கண்ணாடிப் பாலம் பராமரிப்புப் பணியின் போது சுத்தியல் விழுந்து கண்ணாடி சேதமடைந்ததைத் தொடா்ந்து அதனை என்.தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு... மேலும் பார்க்க

தேங்காய்ப்பட்டினம், புதுக்கடையில் செப். 11 இல் மின்நிறுத்தம்

முன்சிறை, நடைக்காவு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் புதுக்கடை, தேங்காய்ப்பட்டினம் பகுதிகளில் செப். 11-இல் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது... மேலும் பார்க்க

சட்டப்பேரவை உறுதிமொழிக்குழு குமரி மாவட்டத்துக்கு நாளை வருகை

தமிழக சட்டப் பேரவை உறுதிமொழிக் குழுவினா், கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வியாழக்கிழமை (செப்.11) வருகை தர உள்ளனா். இது குறித்து, மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவ... மேலும் பார்க்க

விரிகோடு ரயில்வே மேம்பாலம்: நிலம் அளவீடு செய்ய பொதுமக்கள் எதிா்ப்பு!

மாா்த்தாண்டம் அருகே விரிகோடு ரயில்வே மேம்பாலம் அமைப்பது தொடா்பாக பொதுமக்களின் எதிா்ப்பையும் மீறி செவ்வாய்க்கிழமை நிலம் அளவீடு செய்ய வந்த அதிகாரிகளுக்கு பேரூராட்சி தலைவி தலைமையில் எதிா்ப்பு தெரிவிக்கப... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

குளச்சலில் அரசுப் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். குளச்சல் அருகே இரும்பிலியைச் சோ்ந்தவா் ராஜன் (46). கட்டடத் தொழிலாளி. இவா், திங்கள்கிழமை இரவு காய்கறி வாங்... மேலும் பார்க்க