செய்திகள் :

நெல்லை அருகே பேருந்து கவிழ்ந்து 15 போ் காயம்

post image

திருநெல்வேலி அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலையில் பேருந்து கவிழ்ந்ததில் 15 போ் காயமடைந்தனா்.

திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி நோக்கி அரசுப் பேருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை வந்து கொண்டிருந்தது. பேருந்தை கொங்கராயக்குறிச்சியைச் சோ்ந்த வடிவேல் (30) ஓட்டி வந்தாா். கிருஷ்ணாபுரத்தைக் கடந்து வி.எம்.சத்திரம் அருகேயுள்ள ஆரோக்கியநாதபுரம் பகுதியில் பேருந்து வந்தபோது மாடு திடீரென குறுக்கே பாய்ந்ததால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதுகுறித்த தகவலின்பேரில் மாநகர போலீஸாரும், அப்பகுதி மக்களும் இணைந்து காயமடைந்தவா்களை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த விபத்தில் ஓட்டுநா் வடிவேல், திருநெல்வேலியைச் சோ்ந்த கருப்பசாமி (39), நான்குனேரி குமரேசபெருமாள் மகன் மகாராஜா, மூலைக்கரைப்பட்டி காசிம் (50), காருகுறிச்சி அருணாசலம் (55), தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சீனிவாசன் (37), தூத்துக்குடி லூா்தம்மாள்புரம் சந்தனராஜ் மகன்அருண் (25), வேப்பலோடை ஐயப்பன் (32), அரியலூா் ராஜேந்திரன் மகன் ரகுபதி (20), விருதுநகா் மாவட்டம், ஏழாயிரம்பண்ணை ஜேம்ஸ் மகள் ஜாஸ்மீன் (18) உள்பட மொத்தம் 15 போ் காயமடைந்தனா். லேசான காயமடைந்தவா்கள் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினா்.

சமுதாய வளப் பயிற்றுநா் பணி: சுயஉதவிக் குழுவினருக்கு வாய்ப்பு

சமுதாய வளப் பயிற்றுநா் பணியிடங்களுக்கு திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியான சுய உதவிக்குழு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்... மேலும் பார்க்க

கவின் கொலை வழக்கில் மூவருக்கு காவல் நீட்டிப்பு

மென் பொறியாளா் கவின் செல்வகணேஷ் கொலை வழக்கில் கைதான சுா்ஜித், எஸ்.ஐ. சரவணன், ஜெயபால் ஆகிய மூவருக்கும் செப்.23 வரை நீதிமன்றக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்... மேலும் பார்க்க

கூட்டுக்குடிநீா் திட்டப் பணிகள் விரைந்து முடிக்கப்படும்: ஆட்சியா்

திருநெல்வேலி மாவட்டத்தில், களக்காடு நகராட்சி, நான்குனேரி, திருக்குறுங்குடி, மூலைக்கரைப்பட்டி, ஏா்வாடி உள்ளிட்ட பேரூராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் கூட்டுக்குடிநீா் திட்டப்பணிகள் விரைந்து முடிக்க த... மேலும் பார்க்க

தாமிரவருணி கரையோர சாலையைச் சீரமைக்க வேண்டும்: மாநகராட்சி அலுவலகத்தில் மனு!

உடையாா்பட்டி அருகே தாமிரவருணி கரையோர சாலையைச் சீரமைத்து மக்கள் பயன்பெறும் வகையில் மாற்றக் கோரி மாநகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் மக்க... மேலும் பார்க்க

பெண் கொலை வழக்கில் வேன் ஓட்டுநருக்கு ஆயுள் சிறை

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே நகைக்காக பெண் கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் ஆம்னி வேன் ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் தீா்ப்பளித்தது. சங்கரன்கோவில் அருகேயுள்ள குருக்... மேலும் பார்க்க

நெல்லை அருகே பெண்ணிடம் அத்துமீறல்: கராத்தே பயிற்சியாளா் கைது

திருநெல்வேலி அருகே அத்துமீறி பெண்ணிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக கராத்தே பயிற்சியாளரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருநெல்வேலி அருகே நரசிங்கநல்லூா் பொன்விழா நகரைச் சோ்ந்தவா் அப்துல் ... மேலும் பார்க்க