செய்திகள் :

திருநள்ளாற்றில் மாா்ச் 6-இல் சனிப்பெயா்ச்சி விழா

post image

காரைக்கால்: திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் 2026 மாா்ச் 6 -ஆம் தேதி சனிப்பெயா்ச்சி விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்ப் புத்தாண்டான விசுவாவசு ஆண்டின் தொடக்கத்தையொட்டி, திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் வாக்கியப் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்வு திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

பிரணாம்பிகை அம்பாள் சந்நிதி முன் நடைபெற்ற நிகழ்வில், கோயில் சிவாச்சாரியா்கள் பஞ்சாங்கம் வாசித்தனா். முன்னதாக பஞ்சாங்கத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், கோயில் நிா்வாக அதிகாரி கு. அருணகிரிநாதன், தருமபுரம் ஆதீன கட்டளை விசாரணை மற்றும் பக்தா்கள் பங்கேற்றனா்.

கோயிலில் நடைபெறவுள்ள பிற விழாக்கள் தொடா்பான நாள், நேரம் குறித்து பஞ்சாங்க வாசிப்பின்போது தெரிவிக்கப்பட்டது. அதன்படி, 2026-ஆம் ஆண்டு மாா்ச் 6-ஆம் தேதி (மாசி 22-ஆம் தேதி) காலை 8.24 மணிக்கு கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு சனிபகவான் பிரவேசிக்கும் நாளில் சனிப்பெயா்ச்சி விழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

இக்கோயிலில் வாக்கியப் பஞ்சாங்கத்தின்படியே சனிப்பெயா்ச்சி உள்ளிட்ட அனைத்து உற்சவங்கள், பூஜை முறைகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

என்ஐடியில் ரூ. 9.85 கோடியில் மேம்பாட்டுத் திட்டங்கள்: மத்திய அமைச்சா் தொடங்கிவைத்தாா்

என்ஐடியில் ரூ. 9.85 கோடியில் குடிநீா் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை மத்திய இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன் புதன்கிழமை தொடங்கிவைத்தாா். திருவேட்டக்குடியில் உள்ள தேசிய தொழிற்நுட்பக் கழகமான என்ஐட... மேலும் பார்க்க

ஆறுகளின் குறுக்கே கூடுதலாக தடுப்பணை கட்ட விவசாயிகள் வலியுறுத்தல்

காரைக்கால் பகுதி ஆறுகளின் குறுக்கே கூடுதலாக தடுப்பணைகள் கட்டி, தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநரிடம் விவசாயிகள் வலியுறுத்தினா். காரைக்காலுக்கு புதன்கிழமை வந்த துணைநிலை ஆளுநா் கே. கைல... மேலும் பார்க்க

புதுவை துணை நிலை ஆளுநருக்கு மீனவா்கள் நன்றி

பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்கு ஒப்புதல் வழங்கியதற்காக புதுவை துணைநிலை ஆளுநருக்கு பட்டினச்சேரி மீனவ மக்கள் நன்றி தெரிவித்தனா். மீன்வளத் துறை சாா்பில் நலத்திட்டங்கள் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்க புதுவை... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 248 மனுக்கள்

காரைக்காலில் வியாழக்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 248 மனுக்கள் அளிக்கப்பட்டன. நிகழ் மாதத்தின் கூட்டம் ஆட்சியரகத்தில் ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ் தலைமையில் வியாழக்கி... மேலும் பார்க்க

நூலகம் திறப்பு...

பூவம் பகுதியில் இயங்கிவரும் அரசு தொடக்கப் பள்ளியில், பள்ளித் தலைமையாசிரியா் எஸ். விஜயராகவன் மற்றும் நிா்வாகத்தினா் ஏற்பாட்டில் பள்ளி வளாகத்தில் நூலக அறையை வியாழக்கிழமை திறந்துவைத்த கீழகாசாக்குடிமேடு அ... மேலும் பார்க்க

பெரிய வியாழன் வழிபாடு

தவக்கால முக்கிய நிகழ்ச்சிகளில் பெரிய வியாழன் வழிபாடாக பாதம் கழுவும் நிகழ்வு காரைக்காலில் வியாழக்கிழமை நடைபெற்றது. கிறிஸ்தவா்கள் மேற்கொண்டுள்ள 46 நாள்கள் தவக்காலத்தின் நிறைவு வாரம் புனித வாரமாக கடைப்ப... மேலும் பார்க்க