செய்திகள் :

திருநாகேஸ்வரம் திருக்கோவிலில் வைகாசி விசாகப் பெருவிழா கொடியேற்றம்!

post image

தஞ்சை: நவக்கிரக தலங்களில் ராகு பகவானுக்குரிய தலமாக போற்றப்படும் திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா திருநாகேஸ்வரத்தில் நாகநாதசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.

இங்கு விநாயகர், பிரம்மன், இந்திரன், சூரியன், சந்திரன் ஆகிய தேவர்களும் மார்க்கண்டேயர், கௌதமர் உள்ளிட்ட முனிவர்களும், நளன், பாண்டவர், சந்திரசேனன், சம்புமாலி உள்ளிட்ட மன்னர்களும் வழிபட்டு பேறு பெற்ற தலம் என தல வரலாறு கூறுகிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாகப்பெருவிழா 12 நாள்களுக்கு நடைபெறுவது வழக்கம். அதுபோல இவ்வாண்டும் இவ்விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக விநாயகர் பெருமாள், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர், உற்சவர் நாகநாத சுவாமி கிரிகுஜாம்பிகை, சண்டிகேஸ்வரர் என பஞ்சமூர்த்திகளும் அஸ்திரதேவருடன், கொடிமரம் அருகே எழுந்தருள, கொடிமரத்திற்கும், மாப்பொடி, திரவியப்பொடி, மஞ்சள்பொடி, தேன், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட நறுமணப்பொருட்களை கொண்டு விசேஷ அபிஷேகம் செய்விக்கப்பட்ட பிறகு, நாதஸ்வர மேள தாளம் முழங்க, சிவாச்சாரியார்கள் மற்றும் வேதவிற்பன்னர்கள் வேதமந்திரங்களை முழங்க, நந்தியம்பெருமான் உருவம் வரையப்பெற்ற திருக்கோடி, கொடி மரத்தில் ஏற்றி வைக்கப்பட்டது.

பிறகு உற்சவர் சுவாமிகளுக்கும், கொடி மரத்திற்கும், சிறப்பு பூஜைகள் செய்து, உதிரி மலர்களால் அர்ச்சனைகள் செய்த பிறகு, கோபுர ஆர்த்தியும், பஞ்சார்த்தியும் செய்யப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

கொடியேற்றத்தை தொடர்ந்து நாள்தோறும், ஏகாந்தம், சூர்ய பிரபை, சந்திர பிரபை, பூதம், கிளி, காமதேனு, ரிஷபம், யானை, சிம்மம், சேஷ, குதிரை என பலவிதமான வாகனங்களில் திருவீதியுலா நடைபெறுகிறது.

பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியாக, 7ம் நாளான 06 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை திருக்கல்யாணம் வைபவமும், 9ம் நாளான 8 ஆம் தேதி மாலை புஷ்ப மஞ்சம், 10ம் நாளான 9 ஆம் தேதி திங்கட்கிழமை சூரிய புஷ்கரணியில், உற்சவர் சுவாமிகள் எழுந்தருள, வைகாசி விசாக தீர்த்தவாரி நடைபெறுகிறது.

கொல்கத்தா தண்டா் பிளேட்ஸ் த்ரில் வெற்றி

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் சீசன் 6-இன் ஒரு பகுதியாக திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை லயன்ஸை 8-7 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது கொல்கத்தா தண்டா் பிளேட்ஸ் அணி. இரு அணிகளுக்க... மேலும் பார்க்க

காா்ல்செனை வீழ்த்தி குகேஷ் அபாரம்! கிளாசிக்கல் கேமில் முதல் முறை!

நாா்வே செஸ் போட்டியின் 6-ஆவது சுற்றில், நடப்பு உலக சாம்பியனும், இந்தியருமான டி.குகேஷ், உலகின் நம்பா் 1 வீரரான நாா்வேயின் மேக்னஸ் காா்ல்செனை வீழ்த்தினாா். கிளாசிக்கல் கேமில் அவா் காா்ல்செனை முதல் முறைய... மேலும் பார்க்க

தாய்லாந்து ஓபன் குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 8 பதக்கங்கள்

தாய்லாந்து ஓபன் குத்துச்சண்டை போட்டியில் இந்தியா 2 தங்கம், 1 வெள்ளி, 5 வெண்கலம் என 8 பதக்கங்கள் வென்றது.இறுதிச்சுற்றில், ஆடவருக்கான 75 கிலோ பிரிவில் தீபக் 5-0 என உஸ்பெகிஸ்தானின் அப்துரகிமோவ் ஜவோகிரையு... மேலும் பார்க்க

அல்கராஸ், ஆண்ட்ரீவா முன்னேற்றம்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா ஆகியோா் காலிறுதிச் சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினா். ஆடவா் ஒற்றையா் 4-ஆவது சுற்றில், நடப்பு சாம்பியனான அல்கர... மேலும் பார்க்க

கமல் மன்னிப்புக் கேட்க 24 மணி நேரம் கெடு!

கன்னட மொழி குறித்த நடிகர் கமல்ஹாசன் பேசியது சர்ச்சையான நிலையில், கமல்ஹாசன் 24 மணி நேரத்துக்குள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கர்நாடக திரைப்பட வர்த்தக சங்கம் கெடு விதித்துள்ளது.கமல்ஹாசன் நடிப்பில் ... மேலும் பார்க்க