தினமும் உயரும் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் டிக்கெட்டுகள்..! முதல் நாளைவிட மும்மடங்...
திருநெல்வேலி: அருகன்குளம் ஸ்ரீ எட்டெழுத்து பெருமாள் தருமபதி சித்திரை திருவிழா | Photo Album
120 ஆண்டுகள் பழமையான திருநெல்வேலி அருகன்குளம் அருள்மிகு ஸ்ரீ எட்டெழுத்து பெருமாள் தருமபதியில் சித்திரை 18-ஆம் பெருக்கு திருவிழா ஏப்ரல் 29 ஆம் தேதி சித்தர்பீட சிறப்பு பூஜையுடன் தொடங்கியது.
ஏப்ரல் 30 பக்தர்கள் தாமிரபரணி நதிக்கரையில் இருந்து திருபாற்குடம் எடுத்து வந்து சுவாமிக்கும் பரிவார மூர்த்திக்கும் பூர்ணாபிஷேகம் செய்தனர். அதனைதொடர்ந்து ஸ்ரீ ராம தூத பக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு வடை மாலை அலங்காரம், திருவிளக்கு பூஜை நடபெற்றது.
மே 1 (சித்திரை 18 ) வியாழக்கிழமை அன்று பெருமாளின் திருக்காட்சி வைபவம், சிவிகை விழா, கருட சேவையும், அதனைத் தொடர்ந்து மதியம் ஸ்ரீ மகா தேவ கோபால கிருஷ்ணர் கோசாலையில் சிறப்பு அன்னலிங்கபூஜை, அன்னமுத்திரை தர்மம் நடைபெற்றது. அன்று இரவு சிவசுப்ரமணியர் வீதி உலா நடைபெற்றது.























