ஏடிஜிபி ஜெயராம் வழக்கை சிபிசிஐடி விசாரிக்கும்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு!
திருப்பத்தூா்: காவல் குறைதீா் கூட்டத்தில் 60 மனுக்கள்
திருப்பத்தூரில் புதன்கிழமை நடைபெற்ற மாவட்ட காவல் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 60 மனுக்கள் பெறப்பட்டன.
திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு எஸ்.பி. ஷ்ரேயா குப்தா தலைமை வகித்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்களிடம் இருந்து 60 மனுக்களைப் பெற்றாா். ஏடிஎஸ்பி கோவிந்தராஜி,ரவீந்திரன்,முத்துகுமரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அதையடுத்து மனுக்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு எஸ்.பி .உத்தரவிட்டாா்.