செய்திகள் :

திருப்பூர் : குடிநீர் இணைப்புக்கு லஞ்சம்; கணக்கில் வராத ரூ.71 ஆயிரம் - சிக்கிய ஊராட்சி செயலாளர்

post image

திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஒன்றியத்துக்குட்பட்ட எல்லப்பாளையம்புதூரைச் சேர்ந்தவர் மகேஷ் பிரபு(44). இவரது வீட்டுக்கு குடிநீர் இணைப்பு பெற எல்லப்பாளையம்புதுார் ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பம் செய்திருந்தார். விண்ணப்பத்தை பரிசீலித்து குடிநீர் இணைப்பு வழங்க ஊராட்சி செயலாளர் செல்வராஜ் (51), மகேஷ் பிரபுவிடம் ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த மகேஷ்பிரபு இதுகுறித்து திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்தார். போலீஸார் அறிவுரையின்படி, ரசாயணம் தடவிய லஞ்சப் பணத்தை ஊராட்சி செயலாளர் செல்வராஜிடம் மகேஷ்பிரபு வழங்கினார்.

செல்வராஜ்

அப்போது, லஞ்ச ஒழிப்பு காவல் துணைக் கண்காணிப்பாளர் ரவிசந்திரன் தலைமையிலான போலீஸார் செல்வராஜை பிடித்தனர். லஞ்சப் பணத்தை பறிமுதல் செய்ததுடன், அவரது அலுவலகத்தில் சோதனை செய்தனர். அப்போது, கணக்கில் வராத ரூ. 71,500-யை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து செல்வராஜிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் இணைப்புக்கு லஞ்சம் பெற்றதுடன், கணக்கில் வராத ரூ.71,500 இருந்தது திருப்பூர் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சண்டையை விலக்க வந்தவரைத் தாக்க முயன்ற பெண்; குழந்தையின் உயிரைப் பறித்த திரிசூலம்; என்ன நடந்தது?

குடும்பச் சண்டையில் பரிதாபமாக ஒரு வயதுக் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.மகாராஷ்டிரா மாநிலம் அகமத்நகர் அருகில் உள்ள கெட்காவ் என்ற இடத்தைச் சேர்ந்தவர் சச்சின். சச்சினுக்கும், அவரது மனைவி பல்லவிக்கும் இடை... மேலும் பார்க்க

ஊட்டி: தாம்பத்யத்திற்கு மறுத்த மனைவி, பெற்ற மகளையே அழைத்த கொடூர தந்தை - அதிர்ச்சி பின்னணி

புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு தம்பதியர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நீலகிரி மாவட்டத்தில் குடியேறியுள்ளனர். 2 மகன்கள் மற்றும் 2 மகள் உள்ள நிலையில், கணவன் கட்டட வேலையும் மனைவி காட்டேஜ் ஒன்றிலும் பணியாற்றி... மேலும் பார்க்க

சிவகாசி: வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பு; பறிமுதல் செய்து காவல்துறை நடவடிக்கை

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுபாட்டுத்துறை, மாவட்ட வருவாய் அலுவலர் உரிமம் என 1080 பட்டாசு தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இந்த தொழிலை சார்ந்து நேரடியாகவும்,... மேலும் பார்க்க

முடி வெட்டச் சொன்ன ஆசிரியர்; கத்தியால் குத்திக் கொன்ற 12-ம் வகுப்பு மாணவர்கள்! - என்ன நடந்தது?

ஹரியானா மாநிலம் ஹிசாரில் உள்ள பாஸ் பாட்ஷாபூர் கிராமத்தில் கர்தார் நினைவு சீனியர் செகண்டரி பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் முதல்வராக ஜக்பீர் சிங் (50) பணியாற்றி வந்தார். நேற்று காலை பள்ளியி... மேலும் பார்க்க

ரீல்ஸ் வெளியிட்ட டென்னிஸ் வீராங்கனை; கோபத்தில் சுட்டுக்கொலை செய்த தந்தை.. ஹரியானாவில் அதிர்ச்சி

ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியை சேர்ந்தவர் ராதிகா யாதவ்(25). டென்னிஸ் வீராங்கனையானை ராதிகா மாநில அளவில் விளையாடி இருக்கிறார். இரட்டையர் பிரிவில் ராதிகா 113-வது இடத்தில் இருக்கிறார். ராதிகாவிற்கும் ... மேலும் பார்க்க

கோவை: பெண்ணுடன் பகை; தவறாக பேசி வந்த இளைஞர் - 12 இடங்களில் வெட்டி கொலை செய்யப்பட்ட நபர்

கோவை காரமடை பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய் (வயது 23). பால் வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு பெற்றோர் மற்றும் ஒரு சகோதரி உள்ளனர். வீடு சிறியதாக இருப்பதால் சஞ்சய் அருகில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளா... மேலும் பார்க்க