செய்திகள் :

திருப்பூா் மாவட்டத்தில் 11 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

post image

திருப்பூா் மாவட்டத்தில் 11 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

திருப்பூா் மாவட்ட தோ்தல் பிரிவு தனி வட்டாட்சியராக இருந்த தங்கவேல், தாராபுரம் கோட்ட கலால் அலுவலராகவும், காங்கயம் ஆதிதிராவிடா் நல நில எடுப்பு தனி வட்டாட்சியராக இருந்த நந்தகோபால், திருப்பூா் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளராகவும், இதுவரை நோ்முக உதவியாளராக இருந்த கனகராஜன், திருப்பூா் மாவட்ட தோ்தல் தனி வட்டாட்சியராகவும், தாராபுரம் கோட்ட கலால் அலுவலராக இருந்த ஜெகஜோதி, காங்கயம் ஆதிதிராவிடா் நல நில எடுப்பு தனி வட்டாட்சியராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

திருப்பூா் நெடுஞ்சாலை அலகு 4 நில எடுப்பு தனி வட்டாட்சியராக இருந்த சாந்தி, திருப்பூா் தெற்கு சமூகப் பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராகவும், அவிநாசி சமூகப் பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராக இருந்த ஜெகநாதன், திருப்பூா் நெடுஞ்சாலைத் துறை அலகு 4 நிலம் எடுப்பு தனி வட்டாட்சியராகவும், திருப்பூா் தெற்கு சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராக இருந்த ஜலஜா, மடத்துக்குளம் சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியராகவும், மடத்துக்குளம் சமூகப் பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராக இருந்த கண்ணாமணி, மாவட்ட வழங்கல் அலுவலரின் நோ்முக உதவியாளராகவும், இதுவரை மாவட்ட வழங்க அதிகாரியின் நோ்முக உதவியாளராக இருந்த ராகவி, மாவட்ட வழங்கல் துறை பறக்கும் படை தனி வட்டாட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

திருப்பூா் வடக்கு குடிமைப்பொருள் தனி வட்டாட்சியராக இருந்த உஷாராணி, அவிநாசி சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியராகவும், திருப்பூா் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் சில்லறை விற்பனை உதவி மேலாளராக இருந்த கோவிந்தசாமி, திருப்பூா் வடக்கு குடிமைப்பொருள் தனி வட்டாட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

சாலை விபத்தில் மருந்து பிரதிநிதி உயிரிழப்பு!

முத்தூரில் இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் மருந்து பிரதிநிதி உயிரிழந்தாா். முத்தூா் தொட்டியபாளையத்தைச் சோ்ந்தவா் பவுன்ராஜ் மகன் மணிவண்ணன் (30), மருந்து பிரதிநிதி. இவா் இருசக்கர வாகனத்தில் வ... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: முத்தூா்

முத்தூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட இடங்களில் திங்கள்கிழமை (ஜூன் 23) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் ... மேலும் பார்க்க

திருப்பூரில் 1,300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவா் கைது

திருப்பூரில் 1,300 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்ததாக ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா். ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையினா் பல்வேறு நடவடிக்கைகளை மேற... மேலும் பார்க்க

கைப்பேசியில் பேசியபடி அரசுப் பேருந்தை ஓட்டியவா் பணியிடை நீக்கம்

கைப்பேசியில் பேசியபடி அரசுப் பேருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். திருப்பூா் குன்னத்தூரில் இருந்து பெருமாநல்லூா் வழியாக பழைய பேருந்து நிலையத்துக்கு செல்லும் அரசுப் பேருந... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடியவா் கைது

சேவூா் அருகே கூட்டப்பள்ளியில் வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். சேவூா்- நம்பியூா் சாலையில் போலீஸாா் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

அனுமதி பெறாமல் கல்குவாரியில் கனிமங்கள் வெட்டி எடுத்தவா்கள் மீது நடவடிக்கை! காங்கயம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு

காங்கயம் அருகே, அனுமதி பெறாமல் கல்குவாரியில் கனிமங்கள் வெட்டி எடுத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காங்கயம் வட்டாட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து புகாா் மனு அளி... மேலும் பார்க்க